சித்தர்களின் அட்டகர்மங்களில் ஆறாவதாக கூறப்பட்டிருக்கும் பேதனம் என்கிற மாந்திரிக கலையினைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். முன்னரே இந்த வேண்டுகோளை உங்களிடம் வைத்திருந்தாலும் மீண்டுமொரு முறை நினைவுறுத்துவது அவசியம் என்பதால்...
நண்பர்களே! மாந்திரிகம் தொடர்பாக இங்கே பகிரப் படும் தகவல்கள் அனைத்தையும் ஒரு தகவல் பகிர்வு என்கிற அளவில் மட்டுமே கருதிட வேண்டுகிறேன்.இவற்றை செயல்படுத்துவதில் நிறைய நுட்பங்கள் பொதிந்திருக்கின்றன. தேவையற்ற விஷப் பரிட்சைகள் கடுமையான துன்பத்தினை கொண்டுதந்து விடலாம்.
பேதனம் என்பது ஒருவரின் சித்தத்தினை முற்றாக குலைத்து அவரின் நினைவழித்து அவரை பேதலிக்க செய்வதாகும். மிகவும் ஆபத்தான ஒரு மாந்திரிக கலையாக இது அறியப் படுகிறது. இதன் பொருட்டே பேதனம் குறித்த தகவல்கள் காலம் காலமாய் முற்றாக மறைக்கப் பட்டிருந்தன.
பேதன முறையில் பயிற்சியினை துவங்குதற்கு முன்னர் தேவையான முன் தயாரிப்புகளைப் பற்றி இன்று பார்ப்போம்.
பேதனத்திற்கான அதிதேவதை குபேரன்
இந்த முறைக்கான மூல மந்திரம் “ஓம் யவசிமந அரிஓம் ஸ்ரீயும் சவ்வும் சுவாகா” ஆகும்.
பயிற்சியினை ஒரு ஞாயிற்றுக் கிழமையன்றே துவங்கிட வேண்டும்.
வடக்கு திசை நோக்கி அமர்ந்து பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
வென்முத்தால் ஆன மாலையினை செபிக்கவும், உடலில் அணியவும் பயன்படுத்த வேண்டும்.
பேய்தேய்த்தான் மரத்தின் பலகையையே ஆசனமாய் பயன் படுத்திட வேண்டும்.
ஊமத்தம் பூவினை யந்திரத்தினை அர்ச்சிக்க பயன்படுத்திட வேண்டும்.
வெள்ளை பட்டுத் துணியினை ஆடையாகவும், மூலகங்களுக்கு அணிவிக்கவும் பயன்படுத்திட வேண்டும்.
வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் பேதனத்திற்கான யந்திரத்தினை கீறிட வேண்டும்.
இந்த யந்திரம் தயாரிக்கும் முறையினையும் அதைக் கொண்டு சித்தியடையும் தந்திரம் பற்றி நாளைய பதிவில் காண்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



4 comments:
நன்றி தோழி
nice
மிக்க நன்றி ,தோழி .தாங்கள் ,பிள்ளையை கில்லி விட்டு தொட்டிலும் ஆட்டுக்ரீர்கள்
Dear thozi,
Thanks with a great pleasure.
Post a Comment