மனிதராய் பிறந்த அனைவருமே ஏதோ ஒரு வகையில் தங்கள் வாழ் நாளின் கணிசமான நேரத்தினையும், பாடுபட்டு சேர்த்த தங்களுடைய செல்வத்தினையும் கொண்டு செய்த பாவங்களை தீர்க்கவும், புண்ணியங்களை சேர்க்கவுமே செலவிடுகிறோம். அநேகமாய் இதற்கு யாரும் விதிவிலக்காய் இருந்திட முடியாது.
பாவங்கள் சேர்வதும், புண்ணியங்கள் சேர்வதும் நமது எண்ணம், செயல், சிந்தனைகளை ஒட்டியே அமைகிறது.இதை உணர்ந்தவர்கள் பாவங்களை தவிர்த்து புண்ணியங்களை சேகரிக்கின்றனர். இப்படி அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களை தீர்க்கும் முறையொன்றினை அகத்தியர் அருளியிருக்கிறார். இந்த முறையை இங்கே பகிரக் காரணம் உருத்திராட்சத்தின் மகிமையாக கூறவரும் இடத்தில் அகத்தியர் இந்த செபமுறையினை விவரித்திருப்பதால்தான்...
"நேரப்பா தேகசுத்தி நன்றாய்ச் செய்து
சிவசிவா வென்று திருநீறுபூசி
வடகிழக்கு முகமாக இருந்துகொண்டு
பக்குவமாய் ருத்திராட்சங் கையில்வாங்கி
விண்ணப்பா தான்நோக்கி நயமவசியென்று
விரும்பியே லட்சமுருவே செய்தால்
பண்ணியதோர் பாவமெல்லாம் மைந்தாமைந்தா
பருதிகண்ட பனிபோலே பறக்குந்தானே"
- அகத்தியர் -
நன்கு நீராடிய பின்னர், உயர்ந்த திருநீற்றினை சிவ சிவ என்னும் சிவ மந்திரத்தைக் கூறியபடியே உடலில் பூசிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் உருத்திராட்ச மாலையினை கையில் எடுத்துக் கொண்டு வடகிழக்கு முகமாய் அமர்ந்து கொள்ள வேண்டும் என்கிறார். இந்த நிலையில் வானத்தைப் பார்த்தவாறே “நயமவசி” என்னும் மந்திரத்தை உருத்திராட்ச மணி மாலையினை உருட்டியவாறே ஒரு லட்சம் தடவை செபிக்க வேண்டும் என்கிறார். இப்படி செய்வதன் மூலம் சூரியனைக் கண்ட பனிபோல் பாவமெல்லாம் விலகிவிடும் என்கிறார் அகத்தியர்.
எளிய முறைதானே... முயற்சித்துப் பாருங்களேன்!
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



5 comments:
ஒரு லட்சம் முறை அதுவும் வனத்தை பார்த்துகொண்டு (:(
வானத்தை பார்த்துகொண்டு 1 லட்சம் முறை ... ! :(
Dear Thozi,
I convey my emphasized thanks to you
for your overwhelmed message to expiate sins.
எளிமையான பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
தோழி உங்கள் பதிவுகளை புத்தகமாக நீங்கள் வெளியிடலமே அனைவருக்கும் மேலும் பயனுள்ளதாக அமையும்
Post a Comment