காரிய சித்தி தரும் உருத்திராட்ச செபம்!

Author: தோழி / Labels: ,

நாம் அனைவருமே நாம் செய்யும் செயல்கள் யாவும் இலகுவாக வெற்றியடைய வேண்டும் என எண்ணுவது இயல்பு. ஆனால் அனைவருக்கும் அது சாத்தியமாவதில்லை. இதற்கு பலவேறு காரணங்களைச் சொல்லலாம். எனினும் கடினமான உழைப்பு அல்லது விடா முயற்சி போன்றவை வெற்றியைத் தரும் என்றாலும், அந்த நோக்கில் வெற்றிக்கு உதவக் கூடிய வசிய செபமுறை ஒன்றினை அகத்தியர் அருளியிருக்கிறார்.

அகத்தியர் தனது மாணவரான புலத்தியருக்குச் சொல்வதாக இந்த பாடல் அமைந்திருக்கிறது.

"உரையான உலகத்தோர் செபங்கள் செய்ய
உரைக்கிறோம் புலத்தியனே உண்மையாக
மரையான செபமணிதான் சொல்லக்கேளு
மனிதர்களி லஷ்டதொழிலாடு வோர்க்கு
கரையான வசியமடா வாலைவாலை
கண்மணியே ருத்திராட்ச மணியேகேளு
அரையான நூற்றியெட்டு மணிதானாகும்
அப்பனே ஆறுமுக மிருக்கச் செய்யே."


- அகத்தியர் -

"செய்யப்பா செகப்பு நூல்பட்டதாகும்
செயலான யிழையாறு முறுக்கி நீதான்
உய்யப்பா ருத்திராட்ச மணியதனிற்கோர்த்து
ஓகோகோ லெட்சமுரு வசியஞ்செய்தால்
அய்யப்பா அஷ்டவசியந் தானாகும்
அருளினோம் வசியமணி அடைவாகத்தான்
நையப்பா வசிய மென்னால் சொல்லப்போமோ
நாவதனால் சொல்வதற்கு வாயில்லையே."


- அகத்தியர் -

ஆறு முகங்களை உடைய 108 உருத்திராட்ச மணிகளைக் கொண்டு மாலை தயாரித்திட வேண்டுமாம். இந்த மணிகளை கோர்பதற்கு அடர்த்தியான சிவப்பு நிறத்தினால் ஆன பட்டு நூல் பயன்படுத்திட வேண்டும் என்கிறார். இப்படி தயாரிக்கப் பட்ட மாலையைக் கொண்டு வசிய மூல மந்திரத்தினை ஒரு லட்சம் தடவை கவனக் குவிப்புடன் செபிக்க அட்ட திக்குகளும் வசியமாகுமாம். உலகத்தில் தொழில் செய்வோர் அனைவருக்கும் உகந்த செபம் என்கிறார் அகத்தியர். இந்த செபத்தினை ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் செபிக்கலாம்.

வசிய மூல மந்திரம்...

"ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா"

நாளைய பதிவில் பாவம் தீர்க்கும் உருத்திராட்ச மணி மாலை செபம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

10 comments:

RAVINDRAN said...

தோழியெ,

காயத்ரிக்கு நன்றி

RAVINDRAN said...

நன்றி

Praveen Kumar said...

தோழி அவர்களுக்கு , ஒரு லட்சம் முறை சொல்ல வேண்டும் என்றால் குறைந்தது ஆறு முதல் எட்டு மாதம் வரை ஆகுமே? இல்லை ஒரே சுற்றில் சொல்ல வேண்டுமா?

இன்பம் துன்பம் said...

நல்ல பதிவு நல்ல தகவல் வாழ்க வளமுடன்

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள தகவல் கொடுத்த தங்களுக்குப் பாராட்டுக்கள் தோழி.

tamilvirumbi said...

Dear Thozi,
You have displayed out graciously.At the same time,You are guiding everyone to recite this mantra to prosper in profession.Thanks a lot for keep going over this depiction.

Swethasri said...

Thangalin pathivugal arputham.padipor anaivarukkum siddhargalin prasadam.Nanri

heartsmile said...

வணக்கம் தோழி

உருத்திராட்சம் பற்றிய தகவல்கள் அருமை
மேலும் எனக்கு போகர் 20000 புத்தகம் எங்கே கிடைக்கும் என்ற தகவல் குடுக்கமுடியுமா.

lashmiganth said...

good

Mylon said...

Aarumai thozhi...

Post a Comment