குறிப்பிட்ட சில எழுத்துக்களின் சேர்க்கையினால் உருவாகிடும் சொல்லை அல்லது சொல்தொடரை மீண்டும் மீண்டும் உச்சரிப்பதையே செபம் என்கிறோம். இதனை உரு அல்லது உருவேற்றல் என்றும் அழைப்பர். இந்த முறையில் செபிப்பது அநேகமாய் எல்லா மதங்களிலும் இருக்கிறது. சித்தர்களும் இந்த செபித்தலின் அவசியம் மற்றும் அதன் மகிமைகளை தங்களின் பல பாடல்களில் உரைத்திருக்கின்றனர்.
ஆக செபம் என்பது தன்னிலும் மேலான சக்தி அல்லது இறையினை தொடர்புகொள்ளும் வழியாக இருக்கிறது. இது மதம், மொழி, இனம் என அத்தனை விதமான வரையறைகளுக்கும் அப்பாற்பட்டது. கவன குவிப்புடன் செய்யப் படும் எந்தவொரு செபித்தலும் மிக நிச்சயமாய் பலனைத் தருகிறது. இதை மறுக்க முடியாது. இத்தகைய செபத்தினைப் பற்றி அகத்தியர் தனது “வாத சௌமியம்” என்கிற நூலில் பின் வருமாறு கூறுகிறார்.
"செய்யப்பா செபமதுதான் தினமுஞ்செய்தால்
சிவசிவா ஆதாரஞ் சித்தியாகும்
மெய்யப்பா கபமதுவும் விலகிப்போகும்
வேதாந்தம் சித்தாந்தம் மெய்யுள்தங்கும்
மையப்பா சுழிதனிலே வாசியேறும்
மைந்தனே அட்டாங்கம் திட்டமாகும்
பொய்யப்பா போகாது தன்னைப்பாரு
பூரணமும் காரணமும் பொருந்தும்பாரே"
- அகத்தியர் -
"பாராய்நீ புலத்தியமா முனியேயப்பா
பதிவாகச் செபதவங்கள் செய்வதற்கு
பேராகச் சொல்லுகிறேன் மைந்தாகேளு
நிசமான மணியெடுத்து செபமேசெய்ய
பிலமான ருத்திராக்கம் மெத்தநன்று
விண்ணான சித்தியெல்லாம் தான்பெறவே
நித்தியமும் நிலையறிந்து சுத்தமாக
நேமமுடன் தவறாமல் செபமேசெய்யே"
- அகத்தியர் -
தினமும் தொடர்ந்து செபித்து வந்தால் அனைத்து ஆதரங்களும் சித்தியாகுமாம். கபமும் விலகிப்போகுமாம், அத்துடன் வேதாந்தமும் சித்தாந்தமும் உடம்பினுள்ளே தங்கும் என்கிறார். சுழிமுனையில் வாசி ஏறுமாம், செபிப்பவர் உடலானது அழியா நிலையைப் பெறுவதுடன் பூரணமும், கரணமும் பொருந்திவிடுமாம். மேலும் செபமோ தவமோ செய்வதாக இருந்தால் அதற்க்கு உருத்திராட்ச மணியே மிகச்சிறப்பானது என்கிறார்.
உருத்திராட்ச மணியைக் கொண்டு செய்யப்படும் செபங்கள் முலம் இலகுவாக சித்தி பெறலாம். எனவே நாள் தவறாமல் தினமும் சுத்தமாக உருத்திராக்க மணி கொண்டு செபம் செய்ய வேண்டும் என்கிறார் அகதியர்.
எல்லாம் சரிதான்!, உருத்திராட்ச மணியை வைத்துக் கொண்டு எப்படி செபம் செய்வது?
அதனையும் அகத்தியர் தனது நூலில் விவரித்திருக்கிறார். அதாவது மிகச் சிறந்த சிவவேடத்தைக் கொண்டு செபிக்க வேண்டும் என்கிறார்.
அதென்ன சிவ வேடம்?, நாளைய பதிவில் தொடர்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



5 comments:
சிவ வேடம்னா அதிகாலையில் எழுந்து குளித்து உடல் முழுக்க 3 விரலால் திருநீற்றுப்பட்டை அடித்து சிவ லிங்கத்தை வைத்து பூஜிப்பது தானே... ஹி ஹி #கேள்வி ஞானம்
சித்த மருத்துவம் பற்றி தாங்கள் மிகவும் அழகாகவும், எல்லோருக்கும் புரியும்படியாகவும் எழுதிவருகீர்கள்.வாழ்த்துக்கள்,
மிக்க நன்றி
அன்புடன் ஜீவா
Dear thozi,
I have breezed through your article with a great zeal.Thanks a lot.Remaining rudraksham
faces mantra,I will display shortly.
Dear Thozi,
Do you have a collection of texts:
1) Pokar 12000
2) Iramadevar Karpam 1000
???????????
நன்றி
Post a Comment