அகத்தியர் அருளிய பேய் விரட்டும் தந்திரம்?

Author: தோழி / Labels: , ,

கோழியில் இருந்து முட்டை வந்ததா?, அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்பது மாதிரி பேய், பிசாசு, பூதம், பிரம்மராட்சதர்கள் என்கிற ஒன்றின் இருப்பு அல்லது இல்லாமை குறித்த விவாதங்கள் முடிவில்லாத ஒன்று. என் வரையில் இது முழுக்க முழுக்க உளவியல் மற்றும் தன்னம்பிக்கை சார்ந்த ஒரு விஷயமாகவே கருதுகிறேன். மேலும் பிறருக்கு துன்பம் விளைவிக்க கூடிய எந்த ஒரு மனோபாவமும் பேய்தான்.

இந்த பேய்களைப் பற்றி சித்தர் பெருமக்கள் தங்களின் பாடல்களில் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றனர். அகத்தியரும் கூட தனது பாடலில் பேய்களின் குணாம்சம் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"கட்டடா பேயினது முறையைக்கேளு
காணுகிற குணங்காணும் கருத்தில் சொல்வேன்
இஷ்டமுடன் பெண்களையாண் ரூபமாக்கும்
மினிதான ஆணானால் மோகினியைக் காட்டும்
நட்டிரவில் சாய்பிதற்றும் கருவழிக்கும்
நளிர்சுரங்கள் பெரும்பாடு நடுக்கும்பித்தம்
முட்டெனவே பெண்புருஷன் கூடிவாழ்வாள்.
முறையையுட னதுபோகு முறையைக்கேளே."

- அகத்தியர் -

பேய் பிடித்த பெண்கள் தங்களின் இயல்புகளை இழந்து ஆண்களைப் போல முரட்டுத் தனமான இயல்புகளை வெளிக் காட்டுவர். இதைப் போல ஆண்களை பிடித்த பேய்கள் மோகக் கன்னியாய் வந்து அவர்களின் இந்திரியத்தை நஷ்டமாக்கும் என்கிறார். மேலும் கருவுற்ற பெண்ணின் கருவை அழிப்பதுடன், காய்ச்சலும், உடல் நடுக்கமும், பித்த உபரியும் தருமாம். ஆண்,பெண் கூடிவாழ விடாமல் செய்யுமாம். இப்படி கொடுமையான குணாம்சங்களைக் கொண்ட பேய், பிசாசு மற்றும் பிரம்ம ராட்சதர்களை விரட்டும் முறையையும் பின் வருமாறு சொல்லியிருக்கிறார்.


"கேளடா பிசாசினது பலத்தைப் பார்த்துக்
கிளர்பஞ்சா க்ஷரத்தினது கிருபைநோக்கி
ஆளடா கோழிபன்றி யாடுகாவு
ஆஇஅரிஓம் உருவைந் நூறுபோடு
தாளடா காரீயம் செம்புதங்கம்
தகடெழுதி யிடைக்கழுத்தில் சிரசில்கட்ட
பாழடா அலகையென்ற பேய்களெல்லாம்
பறக்குமடா பிரமராட்ச சும்பாரே."

- அகத்தியர் -

காரீயம் அல்லது செப்பு அல்லது தங்கத்திலான தகடுகளில் ஏதேனும் ஒன்றினை எடுத்து அதில் பஞ்சாட்சர மந்திரத்தை கீறி, அதனுடன் “அ, இ, அரி, ஓம்” என்கிற பீஜாட்சர மந்திரத்தையும் எழுதிட வேண்டுமாம். பிறகு பரமேஸ்வரனது திருவடிகளை தியானித்து பஞ்சாட்சர மந்திரத்தை 500 தடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார். அதன் பிறகு இந்த தகட்டை பாதிக்கப் பட்டவரின் இடுப்பு அல்லது கழுத்து அல்லது தலையில் கட்ட அவர்களை பீடித்திருக்கும் பேய், பிசாசு மற்றும் பிரம்மராட்சதர்கள் விலகி அவர்கள் சுகமாவார்கள் என்கிறார் அகத்தியர்.

எளிமையான தந்திரம்!, எவருக்கேனும் உதவிட நினைத்தால் குருவினை வணங்கி பயனபடுத்தலாம்.

நாளைய பதிவில் குழந்தை பேறை அருளும் தந்திரம் ஒன்றைப் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

15 comments:

சி.பி.செந்தில்குமார் said...

எனக்குப்பேய்கள் மேல் நம்பிக்கை இல்லை.. ஆனா.... பெண்கள் மேல நம்பிக்கை இருக்கு.. ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

உங்கள் பதிவில் பிடித்த லைனை காப்பி பேஸ்ட் பண்ணி கமெண்ட்டலாம்னு பார்த்தா முடியல. ஏதோ தகிடுதித்தம் பண்ணி வெச்சிருக்கீங்க போல.

Lakshmi said...

Dear Sister,

What is "panjatchara Mandiram"? If u tell explicitly that will help for my life...
Thank you for ur valuable information

Lakshmi said...

It will be very grateful to get panchatchara mantra as early as possible

Lakshmi said...

Sister I would like to know "Panjatchara Mantra" Please inform as early as possible.
Thank you

Lakshmi said...

Please display "Panchatchara Mandiram"

Lakshmi said...

Dear Sister,
Please inform about "Panchatchara Mantra"
Thanks

-கிமூ- said...

@Lakshmi

NA MA SI VA YA
5 LETTER WORD = PANCHACHARAM
WE CAN ADD " OM " BEFORE NAMASIVAYA

jagadeesh said...

@Lakshmi
"நமசிவாய" இது சிவனின் தாரக மந்திரம். இந்த ஐந்தெழுத்து மந்திரத்தை பஞ்சாட்சர மந்திரம் என்பார்கள்.

jagadeesh said...

@Lakshmi
"நமசிவாய" இது சிவனின் தாரக மந்திரம். இந்த ஐந்தெழுத்து மந்திரத்தை பஞ்சாட்சர மந்திரம் என்பார்கள்.

murugavell said...

NA MA SI VA YA - PanchaChara Manthiram
Pancha - Five & Atcharam - Yezhuthu (Letter)
Panchacharam - Five Lettered Manthram

NA MA SI VA YA - Sthoola Panchacharam
SI VA YA NA MA - Sootchama Panchacharam
SI VA YA SI VA - Athi Sootchama Panchacharam
SI VA SI VA - Kaarana Panchacharam
So in all temples we write SIVA SIVA
There is no manthra beyond that

tamilvirumbi said...

அன்பு தோழியே ,

சிவாய நம என்று சிந்திதித்து இருப்போருக்கு அபாயம் ஏதும் இல்லை

இன்பம் துன்பம் said...

இந்த பதிவு சித்தர்களின் காலத்தில் இருந்தே.சித்திரை மதத்தில் தான்வருடப்பிறப்பு வருகிறது என்பது உறுதிபடுகிறது.நன்றி மகளே வாழ்க வளமுடன் மென்மேலும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள் இன்று வழக்கம் போல் கோவிலுக்கு சென்றேன்,ஸ்வீடன பிரசாதம் கிடைத்தது. மனதுக்கு நிறைவக இருந்தது.இது போல் எல்லாரும் மகிழ்ச்சியான வாழ்கையில் எல்லா வளமும் பெற்று,வாழ அன்னை கற்பகாம்பாள் துணையுடன் அன்னை அபிராமி அருள் புரிய வேண்டுகிறேன். எனது மகள் தோழிக்கும் சேர்த்துதான்

RAVINDRAN said...

நன்றி

SVK said...

Hi Thozhi,

Very nice articles !

Thanks

Post a Comment