அகத்தியர் அருளிய “புத்திரபாக்கியம்” தரும் ஹோமம்!

Author: தோழி / Labels: ,

திருமணமான பலர் தங்களுக்கு புத்திரபாக்கியம் தள்ளிப் போவதைக் கண்டு மனம் வெதும்பி வாடுவதைப் பார்த்திருக்கிறோம். இன்றைய நவீன அலோபதி மருத்துவம் எத்தனையோ உயரங்கள் வளர்ந்து இக் குறையினை நிவர்த்திக்க நல்லபல தீர்வுகளைத் தந்திருக்கிறது.

எனினும் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு காலகட்டத்தில், குழந்தையின்மைக்கான தீர்வாக அகத்தியர் இந்த ஹோமத்தினை முன்வைக்கிறார். இதன் சாத்திய, அசாத்தியங்கள் ஆய்விற்கும், விவாதத்திற்கும் உட்பட்டவை.

இந்த ஹோமத்திற்கு நாற்கோண வடிவத்திலான ஹோம குண்டத்தினை பயன் படுத்திட வேண்டும். ஹோமம் செய்பவர் கிழக்கு முகமாய் அமர்ந்து செய்திடல் வேண்டும். கணவணும், மனைவியும் ஒருங்கே அமர்ந்து செய்தால் இன்னமும் சிறப்பு. இந்த ஹோமத்தினை எவ்வாறு செய்திட வேண்டுமென்பதை அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

சித்ததான சித்துகளுக் குறுதியான
சிவசிவா புவனைதிரு மந்திரந்தன்னை
பத்தாசை வைத்து மன துறுதிகொண்டு
பாலுடன் சந்தனமொடு தேனுங்கூட்டி
சுத்தான மனம்நிறுத்தி யேகமாகி
கருத்தாய்நீயும் சிறப்புட னோமம்பண்ண
வத்தாத பாக்கியசந் தான பாக்கியம்
வளருமடா ஒன்றுபத்தாய் மனங்கண்டாயே.


- அகத்தியர் -


கருங்காலி மரம் மற்றும் நாவல் மரத்தின் குச்சிகளைக் கொண்டு ஹோம குண்டத்தில் தீயை வளர்க்க வேண்டும். தீ வளர்க்கும் போது அக்கினியின் மூலமந்திரத்தை உச்சரித்து வரவேண்டும்.

அக்கினியின் மூலமந்திரம்...

"ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா"

தீ நன்கு எரிய துவங்கிய பின்னர் புவனையின் மந்திரத்தைச் சொல்லி பசும்பால், சந்தனம், தேன் கலந்த கலவையினை நெருப்பில் விடவேண்டும் என்கிறார். இந்த முறையில் புவனையின் மந்திரத்தை 1008 தடவைகள் சொல்லிட வேண்டுமாம். புவனையின் மூல மந்திரம்...

"ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா"

இப்படி செய்தால் புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிட்டும் என்கிறார் அகத்தியர். ஹோமம் செய்த மறு மாதமே கரு உண்டாகி பத்தாம் மாதத்தில் மகப்பேறு சித்திக்குமெனவும் கூறுகிறார். இந்த ஹோமத்தினை யாரும் இதை வீட்டில் செய்யலாம் என்கிறார் அகத்தியர். சுவாரசியமான தகவல்தானே...

நாளைய பதிவில் நீண்ட ஆயுளைத் தரும் ஹோமம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

11 comments:

பாலா said...

அன்புள்ள தோழியே ,

அருமையான பதிவு, அகத்தியமே சத்தியம் .

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

மூர்த்தி said...

;-))) gr8

Ramesh said...

ஆண்மை குறைவு உள்ளவர்களாக இருந்தாலும் பலிக்குமா?

Praveen Kumar said...

நல்ல தகவல் , என் அத்தைக்கு குழந்தை இல்லை , தாங்கள் கூறிய இந்த ஹோமமத்தை கண்டிப்பாக அவர்களை செய்யசொல்வேன் நன்றி

Karikalan said...

@பாலா

Karikalan said...

hi

Sasikumar C said...

Thozhi...

Wonderful...Simply great.

tamilvirumbi said...

Dear thozi,
Thanks a lot for your magnanimity.Nowadays,In India,most of the employed couples,they don't have patience to cook at home.They are running after fast foods.Because of fast foods consumed by them,there has been prevalent deficit of nutrients in their constitution.Due to this problem, motility ratio in male's sperm is less.
That is why childless couples are existing as per the doctors'.Will the endurance to do this homam for getting a child be possible for them?.If it is possible also,they will not pursue.Your pathivu will direct them to do this perfectly.

santhana said...

மஹரிஷிக்கு வணக்கம்,
ஈழத்து சித்தர்கள் பற்றி தகவல்கள் கிடைத்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்,
குறிப்பாக திருகேதீஸ்வரம் மாந்தை என்னும் இடத்தில் ஒளி தேகம் அடைந்த மஹாமஹரிஷி பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள் Please..

RAVINDRAN said...

நன்றி

Ananth Sozhan said...

In which it has been mention? 1200?

Post a Comment