அகத்தியர் அருளிய “கிரக தோஷம்” போக்கும் ஹோமம்!

Author: தோழி / Labels: ,

நண்பர்களே, இனிவரும் நாட்களில் சித்தர்கள் அருளிய ஹோமங்கள் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன். ஹோமங்கள் என்றால் ஏதோ ஒரு சிலரால் மட்டுமே செய்விக்க கூடியது என்பதாகவே நம்மில் பலர் அறிந்து வைத்திருக்கிறோம். அந்த கருத்துக்களை சித்தர் பெருமக்கள் உடைத்தெறிகிறார்கள்.

குருவருளை வேண்டி வணங்கி இந்த ஹோமங்களை யாரும் செய்திடலாம். தேவையற்ற செலவு பிடிக்கும் காரியம் எதுவும் இதில் இல்லை. அந்த வகையில் முதலாவதாக நவகிரகங்களின் பாதிப்புகளில் இருந்து நீங்க உதவும் ஹோமத்தைப் பற்றி பார்ப்போம்.

சோதிட இயலில் நவகிரகங்களின் பாதிப்புக்கு உள்ளாகாத சாதகர்களே இருக்க முடியாது. இந்த பாதிப்புகளின் தீவிரத்தை தணித்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு பரிகாரங்களும் கூறப்பட்டிருக்கிறது. பெரிய பொருட் செலவில் செய்யும் பரிகாரங்கள் மட்டுமே தேவையான பலனைத் தரும் என்பது மாதிரியான ஒரு கருத்தோட்டம் நம்மில் பரவியிருக்கிறது. செலவு பிடிக்காததும் அதே நேரத்தில் நல்ல பலனைத் தரக்கூடியதுமான ஒரு ஹோம முறையினை அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.

"காணவே இன்னமொரு கருமானங்கேள்
கருணைவளர் புலத்தியனே கருணை கூர்ந்து
பேணவே ஓமகுண்டம் நன்றாய்ச் செய்து
பிலமான அக்கினியை லரசால்செய்து
பூணவே புவனையுட மந்திரந்தன்னால்
புத்தியுடன் எள்ப்பொரிகொண் டோமாமம்பண்ணு
தோணவே கிரகமதில் நின்றதோஷந்
சுத்தமுட நீக்குமடா நித்தம்பாரே"


- அகத்தியர் -

என்கோண வடிவத்தில் ஹோம குண்டம் ஒன்றினை அமைத்து, அதன் முன்னர் ஹோமம் செய்பவர் கிழக்குமுகமாய் அமர்ந்து கொள்ள வேண்டும். பின்னர் குருவினையும், குலதெய்வத்தினையும் வணங்கிய, அரச மரத்தின் குச்சிகளைக் கொண்டு ஹோம குண்டத்தில் தீ வளர்க்க வேண்டும் என்கிறார். இந்த தீயை வளர்க்கும் போது அக்கினியின் மூல மந்திரத்தை சொல்லியவாறே தீயை உருவாக்க வேண்டும் என்கிறார். அக்கினியின் மூல மந்திரம் பின் வருமாறு.

"ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா"

தீயை நன்கு வளர்த்த பின்னர் அடுத்த கட்டமாக “புவனை”யின் மந்திரமாகிய "ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா" என்ற மந்திரத்த்தை உச்சரித்தவாறே எள் பொரியினை நெருப்பில் இட வேண்டும் என்கிறார். இந்த மந்திரத்தை 1008 தட்வை உச்சரித்து எள் பொரியினை நெருப்பில் போட நவகிரகங்களினால் உண்டாகும் தோஷங்கள் யாவும் நிவர்த்தியாகும் என்கிறார் அகத்தியர்.

எளிதாய் இருக்கிறதல்லவா... ஆர்வமுள்ளவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம். நாளைய பதிவில் புத்திரபாக்கியம் தரும் ஹோமம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

10 comments:

Praveen Kumar said...

மிக பயனுள்ள தகவல் நன்றி

chandru2110 said...

உண்மையிலேயே மிகவும் எளிதானா செயல் முறை, ஹோமங்கள் மீதுள்ள தவறான மாயைகளை விளக்குகிறது உங்கள் கட்டுரை. இது போன்று பல ஹோமங்களுக்கு உங்களிடம் எதிர் பார்க்கிறோம்.
நல்லது.

tamilvirumbi said...

Dear thozi,

Marvellous presentation.What a simple way you have enumerated to do grahadosha homam! The simple methods explained will be easily adaptable to everyone.Thankas a lot.

குறும்பன் said...

நல்ல இடுகை.
கண் பார்வை (திருஸ்டி) மற்றும் செய்வினை நீங்க மற்றும் உடல் நலம் பெற ஒமம் அல்லது மந்திரம் அல்லது வழிபாடு இருந்தால் சொல்லுங்களேன்.

jagadeesh said...

thankyou.. easy and useful information..

map said...

thank you very much thaara dosham parigaram irunthal miga uthaviyaga irukkum

RAVINDRAN said...

நன்றி நன்றி நன்றி


நன்றி நன்றி நன்றி


நன்றி

RAVINDRAN said...

நன்றி

omsivasivaom said...

arumai miga arumai thanku

omsivasivaom said...

arumai miga arumai thanku

Post a Comment