ஹோம குண்டத்தின் அமைப்பும்,வகைகளும்..

Author: தோழி / Labels: ,


சித்தர்கள் அருளிய ஹோமங்கள் சிலவற்றை இந்த வாரத்தின் நெடுகில் பகிர்ந்து கொள்கிறேன். கடந்த பதிவுகளில் ஹோமங்களில் பயன்படுத்தப் படும் பொருட்களைப் பற்றி பார்த்தோம். இன்றைய பதிவில் இந்த ஹோமகுண்டங்களைப் பற்றி பார்ப்போம். சித்தர்கள் ஹோம குண்டங்களை ஆறு வகையாக கூறியிருக்கின்றனர். ஒவ்வொரு தேவைக்கேற்ப இந்த ஹோமகுண்டங்களின் அமைப்புகள் மாறுபடுமாம்.

ஹோமங்கள் பூமியின் மீதுதான் செய்யப் படவேண்டும் என்கின்றனர். இந்த ஹோம கிரிகைகளில் வழிபடுபவர் கிழக்கு முகமாய் பார்த்து உட்காரவேண்டுமாம். மிக முக்கியமாக இந்த ஹோமங்களை எவரும் செய்திடலாம் என்கின்றனர். குறிப்பிட்ட இனத்தவர் மட்டுமே செய்திட வேண்டும் என்கிற இந்து மரபியலை சித்தர்கள் முழுமையாக நிராகரிக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஹோம குண்டங்களின் ஐந்து படிநிலைகளை கொண்டதாக அமைத்திட வேண்டுமாம். நடுவில் வட்டவடிவமான குழி அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர். ஹோம குண்டத்தின் மகத்துவத்தினை அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.

"தானான தீபமடா மந்திரபீடம்
சராசரத்துக் குயிரான மந்திரபீடம்
வானான அண்டமடா மந்திரபீடம்
மகத்தான ரவிமதியு மந்திரபீடம்
சிவாயகுரு பீடமென்ற பீடங்கள்போடே"


- அகத்தியர் -

ஹோம குண்டங்களை ஆறு வகையாக பார்த்தோம் அவையாவன...

முக்கோணம்..



நாற் கோணம்..



ஐங்கோணம்..




அறுகோணம்..



எண்கேணம்..




வட்டம்..





நாளைய பதிவில் ஹோமம் செய்வதைப் பற்றி பார்ப்போம்.

பிற்சேர்க்கை: ஹோமங்களின் அறிவியல் பற்றி நண்பர் ஒருவர் அனுப்பியிருக்கும் இணைப்பு ஒன்றினை பகிர்ந்திருக்கிறேன். பயனுள்ள தகவல்கள்.



சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

4 comments:

tamilvirumbi said...

Dear thozi,

You have aesthetically displayed
various types of kundams told by siththars.
Practically,square shape kundam is erected before starting homams.all the thoughts shared by you are beneficial to mankind.

ip said...

very much informative thozhi. Thanks

aburvarajabhiravi said...

thozhi eppadi thamizhizh ulle varuvathu theriyavillai viparam thanthu uthavavum khoma kundankal karkal ennikkai komakundala unmaiyana vadiva amaippu - utharanamaaka kovil kalil ulla kunta vadiva photo kaattalam varaipata madal seymuraiyil thukkakaala ththil pilaikalai earpaduththivida kuudum puriya uyhvinaal nadaimurai thakaval seythu palan arivippen-nanri

thamil said...

Dear thozhi,

pls explain 5 base of yagam and inform when will start the yagam.

Post a Comment