ஆருட சமாதி...

Author: தோழி / Labels:

கொங்கணவர் அருளிய ஆறு வகையான சமாதி நிலைகளில் இன்று இறுதி நிலையாக கூறப் பட்டுள்ள “ஆரூட சமாதி” பற்றி பார்ப்போம். இந்த நிலையினை பின்வருமாறு விவரிக்கிறார் கொங்கணவர்...

"அணைந்து முன்னே தேவதைகள் வந்தாலுந்தான்
அதைச்சட்டை பண்ணாதே யகண்டமாய் நில்
லணைந்து நின்ற வத்துவித நெறியிற்கூடி
யப்பனே சஞ்சார சமாதிக்குள்ளு
மணைந்து நின்று திடப்பட்டாற் பின்புகேளு
அப்பனே சகலத்தி லசத்தியம் போக்கி
யணைந்துநின்று சுட்டசட்டி விட்டாற் போலே
யாச்சரியந் தேவதைக ளசத்தாய்க் காணே"


- கொங்கணவர் -

"அசத்ததாகக்தேவதையை மனதிலெண்ணி
யசையாத மலைபோலே யசைவுமற்று
நிசத்தான காற்றுப்போல் தேவதைக ளென்று
நிச்சயித்து நன்றாக நில்லு நில்லு
பசத்தான வத்துவித நிலைநாமென்று
பாராகத் திடப்பட்டு நில்லுநில்லே
உசத்தாகச் சாதகத்தி நிலையைக் கூட்டி
யுத்தமனே யாரூட சமாதியாச்சே"


- கொங்கணவர் -


உலகில் இருக்கும் அனைத்துப் பொருட்களும் என்னிடம் இருந்தே உண்டாயிற்று, நான் தான் அனைத்து பொருட்களிலும் நிறைந்திருக்கிறேன் என்பதாக உணர்வதுடன், தானே பிரம்மம், தானே அனைத்திற்க்கும் ஆதாரமானவன் என்ற உயரிய நிலையில் இருந்துகொண்டு, உன் முன்னால் தேவதைகள் தோன்றினாலும் கூட அவற்றை பொருட் படுத்தாமல் நீயே பிரம்மமாய் இருக்கும் நிலையான சஞ்சார சமாதியில் எல்லாம் மாயை என்பதை தெளிந்த பின்னர் மேலான தேவதைகள் முதல் வேறு எவரும் உன் முன்னால் வந்து நின்றாலும் அவற்றை காற்றைப் போல் நினைத்து அவை அனைத்துமே உன்னிடம் இருந்து தோன்றியதே என்ற உண்மையை உணர்ந்து மலை போல அசைந்து கொடுக்காது நீயே பிரம்மம் என்ற நிலையில் இருத்தல் ஆருட சமாதி எனப்படும். இதுவே இறுதி முடிவான நிலையும் ஆகும் என்கிறார் கொங்கணவர்.

யோகத்தின் மிக உயரிய நிலையில் கூட இத்தனை படி நிலைகள் இருக்கின்றன என்பது ஆச்சர்யமான தகவல்தானே... என் வயதிற்கு இதெல்லாம் மிகப் பெரிய விஷயங்கள். இவற்றை முழுதாய் உணர்ந்து எழுதிடும் மனப் பக்குவம் எனக்கு இன்னமும் வரவில்லை. அதற்கான பயணம் மிக நீண்டது.

இத்துடன் இந்த தொடர் நிறைவுக்கு வருகிறது. வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

6 comments:

tamilvirumbi said...

Dear Thozi,
you have rendered a very good briefing with your usual gusto.It is explained in the following way as you have told in your saying.(Possession of all powers of the Creator): After practicing the Sanchara Samadhi for a considerable period, one can attain the Aaruda Samadhi. He will overcome bias and personal opinions, since will be oblivious of his own person. The disciple will realize that it is all the picturization of the mind, of whatever it perceives through the astral self, and will get detached from the five basic elements, the Panchaboodhas willfully and merge himself with the great divine light and transform into a part of Sivajodhi, the final God form, a flood of light, is termed as Aaruda Samadhi by the great sage Agathiar in his AGATHIAR SOWMIYA SAGARAM.

WITH A BOUQUET of THANKS

RAVINDRAN said...

வாழ்துக்கள்

Elangai Tamilan said...

தோழி,
தங்களின் இன்றைய பதிவு மிகவும் நன்றாக இருந்தது.தாங்கள் ,தமிழ்விரும்பி ,இடும் பின்னூட்டத்தை தமிழில் இடுமாறு கூறமுடியுமா?.சில விளக்கங்கள் ,நன்றாக உள்ளது ,அதான்,
தங்களிடம் விண்ணப்பித்தேன்.

--

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

இராஜராஜேஸ்வரி said...

interesting.

Praveen Kumar said...

மிகவும் அருமை ,எனக்கும் கூட இதல்லாம் பெரிய விஷயங்கள்தான் , நானும் அந்த பக்குவத்தை எட்டவில்லை .

ramvijay said...

very nice article .keep on going .

Vijay

Post a Comment