சஞ்சார சமாதி..

Author: தோழி / Labels:

கொங்கணவர் அருளிய ஆறு வகையான சமாதி நிலைகளில் இன்று ஐந்தாவது வகையான “சஞ்சார சமாதி” பற்றி பார்ப்போம். இதனை பின் வருமாறு கூறுகிறார் கொங்கணவர்.

"இருக்கிற தாகையினால் ரெண்டுக்கும் பேத
மியல்பான வகண்டவிர்த்தி சமாதி மார்க்கந்
தருக்கிறதோர் சஞ்சார சமாதி கேளு
சார்ந்து நின்ற வகண்டவிர்த்தி விட்டேயப்பா
வருக்கிறதா யெழுந்திருந்து பிரபஞ்சத்தைப் பார்த்தே
யடைவாக விவகரிக்குங் காலமெல்லா
மருக்கிறதோர் பிரபஞ்ச மெல்லாஞ் சமுத்திரத் தலைபோல்
மருவிநின்ற நுரைபோல மாயந்தானே"


- கொங்கணவர் -

"மாயமுற்றுச் சிலந்தியி னல்வலையைப்போல
மயங்கிநின்ற கூர்மத்தி னங்கம்போலத்
தோயமுற்ற வாகாச மேகம்போலச்
சொப்பனமாம் பிரபஞ்சத்தி லறிவைப் போல
வாயமுற்று நம்மிடத்தே யுண்டாச்சப்பா
வாச்சரிய நம்மிடத்தே யிருந்துகொண்டு
காயமுற்று அறிவழிந்து போறதாலே
கலந்து நம்மை விடவொன்றுங் கண்டிலேனே"

- கொங்கணவர் -

நேற்றைய பதிவில் விவரித்து இருந்த அகண்டவிர்த்தி சமாதியை விட்டு எழுந்து வெளியுலகமான பிரபஞ்சத்தில் உலாவும் போதும், பிரபஞ்சத்தில் கடமைகள் மற்றும் வேலைகளில் ஈடுபடும் பொழுதும் சமுத்திர அலையால் உண்டான கடல் நுரையைப் போல அனைத்துமே மாயை என்பதை நினைவில் கொள்ளல் வேண்டும்.

சிலந்திப் பூச்சியானது தான் உருவாக்கும் ஒருவகையான பசைத்தன்மை கொண்ட பொருளால் வலையை உண்டாக்கிக் கொண்டு அதில் தானே அதில் வசிப்பதை போலவும், கூர்மம் என்று அழைக்கப்படும் ஆமையானது தன்னுடன் தோன்றிய ஓட்டினுள் தன்னை அடக்கிக் கொள்வது போலவும், கனவு போன்ற இந்த பூலோகவாழ்கை அழிவடையும் தன்மை உடையது என்றும் உணர்ந்து, என்னை தவிர வேறொன்றும் இல்லை என்பதை நினைவில் நிறுத்தி பூலோக வாழ்வியல் விவகாரங்களில் ஈடுபடும்போது எதுவும் உன்னை சலனப்படுத்தாது என்பதை உணர்ந்திருக்கும் நிலையே சஞ்சார சமாதி என்கிறார்.

நாளைய பதிவில் இறுதி நிலையான “ஆரூட சமாதி” பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

4 comments:

tamilvirumbi said...

Dear Thozi,
The explanation is given by you carries crystal clear instances. I am sharing my thoughts in the way rishi agathiar has told in Agathiyar Sowmiya Sagaram-1200.It is as follows
I Told thee what is Nirvigarpa Samadhi, and now,I will tell you clearly what Sanchara Samadhi is; Perceiving the elements of the cosmos as one’s organs,Perceiving the secrets of body, the abode of astral-self,
Tuning it to a feel of divine, by diligent breath technique,Adhering to that technique while walking and staying,Learning the secrets of Creator across the broad world,
Is termed Sanchara Samadhi, the unique quest of Wisdom!

The continuation of the above verse explains that the practitioner conquers the barriers of space, during this phase of Samadhi and as such he can travel to places as directed by his will, in order to obtain knowledge of different sorts.

A bountiful of thanks to you,Thozi.

Elangai Tamilan said...

தோழி,
இன்றைய பதிவு நன்றாகவும் இருந்தது.நன்கு புரியும்படியாகவும் இருந்தது ,தாங்கள் கூறிய உவமைகள் மூலமாக .மிக்க நன்றி .

--

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

பாலா said...

அன்புள்ள தோழி ,
அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் சஞ்சார சமாதிக்கு .

சிலந்தி பூச்சி மற்றும் ஆமை அருமையான விளக்கங்கள் .

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

RAVINDRAN said...

நன்றி

Post a Comment