6,1,1.
கூடுமென்றே நினைத்து குதூகல மடைந்திடாதே
நாடிய வாறீரென்றும் நஷ்டமேயாகுமப்பா
பாடுபட்டே நீ சேர்த்த பொருளது ஒழியுமப்பா
வாடிடவேண்டா மின்னும் வாரமிரெண்டேக வேணும்.
ஆறும், அடுத்தடுத்து இரண்டு முறை ஒன்றும் விழுந்திருப்பதால் நன்மை உண்டாகுமென குதூகலமடையாதே. பாடுபட்டு சேர்த்த பொருள் அழியும். இரண்டு வாரம் கழிந்தால் நன்மை உண்டாகும் என்கிறார்.
6,1,2.
வேணமென்றே நீ செய்யும் வேலையில் லாபமுண்டாம்
பூணுமாரொன்றும் ரெண்டும் புகழுறவிந்தாலே
தோணுமே பலிக்குமெண்ணம் தொந்தார்த்தமொழிந்து போகும்
காணுவாயிதனினுண்மை கந்தனின் கருணையுண்டாம்.
ஆறும், ஒன்றும், இரண்டும் வீழ்ந்ததால் செய் தொழிலில் லாபமுண்டாகும். மனதில் நினைத்த எண்ணமெல்லாம் பலிக்கும். குடும்பத்திலுள்ள தொந்தார்த்தங்க ளெல்லாம் ஒழிந்து போகும். இன்னும் சில நாளில் இதனுண்மை காண்பாய் என்கிறார்.
6,1,3.
கருணையு முனக்குயேது கிரகங்களெல்லாம் தீது
ஆறு ஒன்றும் மூன்றும் விழ அதிர்ஷ்டமும் போச்சுதப்பா
பொருளது விரையமாகும் பொல்லாப்பு அதிகமாகும்
உருபடாதுந்தன் செய்தி ஒன்றுக்கும் மஞ்சிடாதே.
ஆறம், ஒன்றும், மூன்றும் விழுந்தால் உந்தன் எண்ணம் பலிதம் ஆகாது. கைப்பொருள் விரையமாகும். பொல்லாப்பு அதிகரிக்கும், நீ எண்ணிய எண்ணங்கள் உருப்படாது இருந்தாலும் அஞ்சாதே என்கிறார் அகத்தியர்.
அஞ்சிடவேண்டாமப்பா ஆறும் ஒன்றாலும் வீழ்ந்தால்
வஞ்சகம பீடை நோயும் வறுமையும் ஒழிந்துபோகும்
துஞ்சவே தானியங்கள் துணைவரும் வந்து சேர்வார்
கொஞ்சநாள் போனதானால் கொடுக்கல்வாங்கலிலே லாபம்.
உனக்கு ஆறும், ஒன்றும், ஆறும் விழுந்ததால் உனைத் தொடர்ந்த பீடையும், நோயும், வறுமையும், வம்பு வழக்குகளும், பகைவர்களின் வஞ்சமும் ஒழியும். நிலம் செழித்து தானிய விளைச்சல் பெருகும். புதிய சினேகிதர்களும் சேருவார்கள். அதனால் லாபமுண்டாகும் என்கிறார்.
6,2,1.
பாங்கவே மனையும்மாடும் ஆறுரெண்டொன்றால் லாபம்
ஓங்குமே சிறுவர்கட்கு உயர்தரக் கல்வியெல்லாம்
பாங்குள மனையைவிட்டு பரதேசம் போனபேரும்
தேங்கிடா வந்தேசேர்வார் தீர்ந்திடும் உனது துன்பம்
ஆறும், இரண்டும், ஒன்றும் விழுந்ததால் எந்த காரியத்திலும் நல்ல லாபமுண்டாகும். குடும்பத்தில் சிறுவர்களுக்கு கல்வி ஞானமும் ஓங்கும். சொந்தமாய் வீடும், கால்நடைகளும் அமையும். மனங்கலங்கிச் சொன்றவராயினும் சீக்கிரத்தில் வீடுவந்து சேருவார்கள். உனது கவலைகள் ஒழியும் என்கிறார் அகத்தியர்.
6,2,2.
துன்பமே மிகவுண்டாகும் தொகுத்தாறு மீறிரெண்டால்
அன்பு பேரானால் அடுத்துமே பகையுமாவார்
நன்றி நீ செய்தபோது நலமொன்றும் ஏற்படாது
தன்மையுமழிந்து போகு தரித்திரனாக்குமாமே.
இப்பொழுது ஆறும் அடுத்தடுத்து இரண்டும் வந்ததால் அன்புள்ள சினேகிதர் ஆயினும் பகையாவார்கள். நீ நன்மையை செய்தாலும் அதனால் நலம் ஏதும் விளையாது. உனது தன்மை அழிந்து தரித்திரம் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.
6,2,3.
ஆக்குமே தனவானாக ஆறிரெண்டு மூன்று வீந்தால்
போகுமே கவலையெல்லாம் பொன் பொருள் மிகவே சேரும்
தேக்குமே உனக்கு நன்மை தேகத்தின் பிணியும் நீங்கும்
நோக்குமே நன்மையாக நல்லதோர் கிரகமெல்லாம்.
ஆறும், ரெண்டும், மூன்றும் வீழ்ந்ததால் இந்த அமைப்பு உன் கவலையெல்லாம் அகற்றி செல்வத்தை கொண்டு தரும்.நோய் நொடிகள் விலகிடும்.கிரக அமைப்புகளினால் நலமுண்டாகும் என்கிறார்.
6,2,6.
கிரகத்தின் கோளாறின்று காட்டிடும் கவலையாலே
உரமுள்ள ஆறும் ரெண்டும் உடனாறும் வீழ்ந்ததப்பா
பரபரப்பதிகமாகும் பாவியென்ற சுவர்கள்
சிறப்புடன் சிலநாள் போக சேமமே பெறுகுவாயே.
ஆறும், இரண்டும், ஆறும் விழுந்ததால் கிரக கோளாறின் காரணமாய் கவலையும், பதட்டமும் அதிகரிக்கும். நற்பெயருக்கு களங்கமுண்டாகும். இந்த நிலமை சில நாளில் மாறிடும் என்கிறார் அகத்தியர்.
இதன் தொடர்ச்சியினை நாளைய பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். தவிரவும் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த தொடரை முழுமையா மின்னூலாகவும் நாளை பகிர்கிறேன்... காத்திருங்கள்!
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



2 comments:
Thanks:) its right only. iam also done now.
nice one useful for all :)
தோழி ,
தாங்களின் இன்றைய பதிவிற்கு மிக்க நன்றி.
--
Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com
Post a Comment