பாய்ச்சிகை எனப்படும் நான்கு முக மரக் கட்டையினை மூன்று தடவைகள் உருட்டுவதன் மூலம் கிடைக்கும் எண்களைக் கொண்டு அதற்கான பலன்களை அகத்தியர் அருளியிருக்கிறார் அந்த வகையில் இன்றும் 1,1,1 முதல் 1,6,6 வரையிலான எண்களுக்கான பலனைக் காண்போம்.
1,1,1.
மும்முறையொன்றேவந்தால் முடிந்திடும் நினைத்த எண்ணம்
அயபுவி மீது நீயும் அரசனைப் போல வாழ்வாய்
பம்பு சூனியமும் நீங்கும் பலவித லாப முண்டாம்
தம்பிரான் சாக்ஷியாக தாக்ஷிதானிலைபாரே.
மூன்று முறையும் ஒன்று விழுந்தால் எண்ணிய எண்ணம் நிறைவேறும். மன்னன் போல் வாழ்வாய். பம்பு, சூனியம் நீங்கும் பலவிதத்தில் லாபமுண்டாகும். ஒருவித கவலையும் ஏற்படாது.
1,1, 2.
பாரப்பா ஒன்று மொன்றும் பதறியே இரண்டும் வீழ்ந்தால்
சீரது வழிந்து போகும் சிக்குகள் பலவுண்டாகும்
பேரது கெடுக்கவுந்தன் பெண்டீரும் துணையே யாவாள்
கூறவே நினைத்த யெண்ணம் கூடாது நாள் தானாகவே.
ஒன்றும் ஒன்றும் இரண்டும் விழுமானால் உன் குடும்பத்தில் சீரழிவும்,சிக்கல்களும் உண்டாகும். உனது புகழைக் கெடுக்க உன் மனைவியே துணையாயிருப்பாள். நீ நினைத்த எண்ணமும் முடிவதற்கு வெகுநாள் ஆகும் என்கிறார்.
1,1,3.
தானாகும் ஒன்றும் வீழ்ந்து தனித்தொன்றும் மூன்றும் வீழ்ந்தால்
ஆணாக பிறக்கும் பிள்ளை அதனாலேயே யோமுண்டாம்
வீணான கவலையெல்லாம் விலகிடும் கொண்டமும் நோயம்
தோணாது கஷ்டம் நீங்கும் துணையது முருகனுண்டாம்.
முதலில் ஒன்று விழுந்து, மறுபடியம் ஒன்றும் மூன்றும் விழுமானால் மனையில் ஆண் குழந்தை பிறக்கும். ஆதனால் அதிர்ஷ்டம் பெருகும். ஆபத்துக்கள் விலகும். கெண்டமும், நோயும் நீங்கும், முருகனின் கருணையால் கஷ்டம் நீங்கும் என்கிற ார்.
1,1,6.
உண்டப்பா கெடுதியுண்டு ஒன்றுடனொன்று மாறும்
நின்றிட விழுமானால் நிலைக்காது நினைத்த எண்ணம்
அன்றியும் அரசராலே அவகேடு வந்து நேரும்
சென்றிடும் செல்வமுற்றும் சொல்வது விஷம்போலவே.
ஒன்றின் பின் ஒன்றும், ஆறும் விழுமானால் உனது எண்ணம் பலிதமாகாது. அரசாங்க விரோதமும் அதனால் பலவிதத்தில் பொன் பொருள் விரையமாகும். உன் வாக்கு விஷம் போலிருக்கும் என்கிறார்.
1,2 ,1.
விஷபாம்பை போலே பார்ப்பார் ஒன்றுரெண்டொன்று வீழ்ந்தால்
பசப்பு வார்த்தைகள் பேசிபறிப்பாருள் பொருளை எல்லாம்
நிஜமாக உரைத்திட்டாலும் நியாயமுணக்கிராது
கசங்கிட கடனில் தொல்லை காட்டிடும் கவலையாமே.
ஒன்று இரண்டு ஒன்று என விழுமானால் உன் சொந்தங்களும், நட்பும் உன்னை விஷப் பாம்பினை பார்ப்பது போல பார்ப்பார்கள்.நீ உண்மையை உரைத்தால் அது உறுதியாக இருக்காது. கடன்காரர்களின் தொல்லையும் காட்டும். கவலையும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.
1,2,2.
கவலையேன் ஒன்றும் ரெண்டும் இரண்டுமே விழுகுமானால்
ஷதவணையில்லாமல் சேரும் நாள் பொருளும் ஜீவன்
குவலயத் தன்னிலுந்தன் குணத்தை பாராட்டுவார்கள்
துவக்கிடும் நோயும் நீங்கும் துணைவராலே சகாயம்.
ஒன்றும், இரண்டும், இரண்டும் விழந்தால் பலவிதமான லாபமுண்டாகும். கைவிட்டுப்போன பொருளாயினும், ஜீவனாயினும் தவணையில்லாமல் எட்டு நாளைக்குள் வந்து சேரும். உன்னை மிகவும் நல்லவனென்று புகழ்வார்கள். ஆரம்பமாகும் நோயும் நீங்கும். சினேகிதர்களால் உதவியுண்டாகும். என்கிறார்.
1 ,2,3.
சகாயத்தால் அபாயம் நேரும் சரியொன்றுமிரண்டும் மூன்றும்
விகாரமாய் தோன்றுவாய் நீ விண்பெய ரெடுக்கலாகும்
அகாலமாய் மரணசேதி அப்பனே கேட்பாய் நீயும்
சுகரசுக மிழந்தபோதும் தைரியந்தனை விடாதே.
ஒன்றும், இரண்டும், மூன்றும் விழுந்தால் உன் கிரகக் கோளாறினால் உன் முகமே விகாரமாகத் தோன்றும். பெயரும் புகழும் கெடும். பிறறுக்கு உதவினாலும் அதனால் அபாயமுண்டாகும். உறவினர்களுக்குள் திடீரென மரணச்சேதியும் கேட்பாய். மேலும் உனது சுகம் முற்றும் இழந்தாலும் உனது தைரியத்தை மட்டும் விடாதே என்கிறார்.
1,2,6.
தைரியத்தை விடாதே தனியொன்றும் மிரண்டுமாறும்
வைரயா யிருந்தபேரும் வணங்குவாருன்னைக் கண்டால்
சௌரியத் தொழிலில் பாபம் சஞ்சலம் பிணியும் நீங்கும்
பரிவுடன் பிறக்கும் பிள்ளை பலித்திடும் அதனால்யோகம்.
ஒன்றும், இரண்டும், ஆறும் விழுந்தால் பகையாயிருப்பவர்களும் உறவாக வந்து சேருவார்கள். தொழிலில் மேன்மையான லாபமும், பிணியும் ,கெண்டமும், பலவித கவலைகளும் நீங்கும்.ஆண்குழந்தை பிறக்கும். ஆதனால் லாபமுண்டாகும் என்கிறார்.
1,3,1.
யோகமுண்டு ஒன்றும் மூன்றும் உடனொன்றும் விழுகுமானால்
ஏகமாய்ப் பொருள் சேரும் இடரின்றியெண்ணங்கூடும்
சாகவே வாய்ந்த நோயும் சுகமாகும் மருந்தினாலே
வேகமாய் செய்திதோன்றும் வியாபாரம் விர்த்தியாமே.
ஒன்றும், மூன்றும், ஒன்றும் விழுந்தால் நல்ல யோக பலாபலன்களைத் தரும். வேண்டிய பொருள் வீடுவந்து சேரும். எண்ணம் பலிக்கும். மரணமாக்க வந்த நோய் மருந்தினால் நீங்கும். நன்மையான செய்தியும் விர்த்திகரமான வியாபாரமும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.
1,3,2.
ஆமப்பா விழுந்த எண்தான் ஒன்று மூன்றிரண்டேயாகும்
காமத்தையளித்த மங்கை கைவிடுவாளேயுன்னை
ஷேமத்தை கெடுக்கவுந்தன் சொத்துக்களொழிந்து போகும்
போமப்பா உந்தன் கீர்த்தி பூஜிப்பாய் நவக்கிரகத்தை.
ஒன்றும்,மூன்றும்,இரண்டு விழுமானால் உனக்கு அபிமான தாரமாகிய ஓர் மங்கை உன் பொருள்கள் அனைத்தையும் அபகரித்து உன்னை கைவிடுவாள். அதனால் உன் நலம் கெடும். உனக்கு அபகீர்த்தி உண்டாகும். பலவிதமான கவலைகளும் உண்டாகும். ஆனால் இன்று முதல் ஒன்பது நாள் நவக்கிரக பூஜை செய் என்கிறார்.
1,3,3.
கிரகங்கள் நல்லதாச்சு காணுமொன் றிருமூன்றாச்சு
மறைந்ததோர் பொருளுஞ்சேரும் மருந்தினால் நோயும் நீங்கும்
சிறப்புற மணமேகூடும் செய்தொழில் லாபங்காணும்
அறமது புரிந்துவாழ்வாய் அகஸ்தியர் மொழிமீறாதே.
ஒன்றும், மூன்றும்,மூன்றும் உதயமானால் காணமாற் போன பொருள் யாவும் கிடைக்கும். கனத்த நோயும் நீங்கும். கலியாணம் கூடும். தொழிலில் லாபமுண்டாகும். அகஸ்தியம் வாக்கை மீறாமல் தருமம் செய்து வாழ்வாய் என்கிறார்.
1,3,6.
மீறியேவுந்தனை வாக்கை மனைவி மக்களும் நடப்பார்
தூறியே மிகுபேர் நஷ்டம் துணைவரால் வந்துநேரும்
ககரியம் கைகூடாது கவலையே அதிகரிக்கும்
தூரியே நோய்கள் காட்டும் துலைதூரம் செய்திதோன்றும்.
உனக்கு ஒன்றும், மூன்றும், ஆறும் விழுமானால் மனைவியும், மக்களும் உனது வாக்கை மீறி நடப்பார்கள். நண்பர்களினால் சண்டை பொருள் நஷ்டம் ஏற்படும். கவலைகள் அதிகரிக்கும். கொடுமையான நோயும், கெட்ட செய்திகளும் வரும்.காரியம் கைகூடாது போகும் என்கிறார் அகத்தியர்.
1,6,1.
தோன்றிடும் பகைதான் மெத்தடுர்ந்தொன்று மாரொன்றாகில்
ஆன்றோர்கள் தேடிவைத்த ஆஸ்தியுமழிந்து போகும்
கானபடும் கண்ணிதன்னில் மான்படும் கவலைபோலே
வான்பதிக்குள்ளே நீயும் வருந்தவே நேருமப்பா.
உனக்கு ஒன்றும், ஆறும், ஒன்றும் விழுந்தால் மிகவும் பகையுண்டாகும். பெரியோர்களின் பொருள் அழியும். வேடன் வைத்த கண்ணில் சிக்கிய மான் போல் கலங்கி நிற்கவும் நேரிடும். கடுமையான கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்.தைரியத்தை விடாதே! சீக்கிரத்தில் நன்மையடைவாய் என்கிறார்.
1,6,2.
அப்பனே ஒன்றும் ஆறும் உறுதியாய் இரண்டு வீழ்ந்தால்
தப்பாது முடியுமப்பா தானெதை நினைத்தபோதும்
ஒப்பிலா வாழ்வுண்டாக்கும் உள்ளுரிலடைவாய்லாபம்
கப்பியபகை நோய் நீங்கும் கங்கணப்ராப்தமாமே.
1,6,3.
ஆகுமே கவசம்பாரு அப்பனே ஒன்றார் மூன்றும்
சோகமே பெரிதாய் நிற்கும் சலிப்பினால் இடத்தை மாற்றும்
ஏகமாய் பொருளும் போகும் இடறான நோயுண்டாகும்
போகுமே தொழிலும் நஷ்டம் பொல்லாப்பு மடைகுவாய்.
உனக்கு ஒன்றும், ஆறும் ,மூன்றும் வந்ததால் குடும்பத்தில் கலகம் நேரும்.எதிலும் துயரமே மேலிடும். சலிப்பின் காரணமாய் இடமாறுதலும் பெரும் பொருள் சேதமும், கடுமையான நோயும் உண்டாகும். தொழில் முடக்கமாகும்,சினேகித பொல்லாப்பு மடைவாய் என்கிறார்.
1,6,6.
அடைகுவாய் லாபமப்பா ஆக ஒன்றாது மாறும்
தடையின்றி விழுந்தாலே தழைத்திட மகப்பேறாகும்
புடைசூழ குடம்பந்தன்னில் புகழான வாழ்வுண்டாகும்
இடையிலே துயர் வந்தாலும் ஏதொன்றுமுனை செய்யாதே.
இப்பொழுது ஒன்றும், ஆறும், ஆறும் வந்தால் குடும்பத்தில் புத்திர பாக்கியமுண்டாகும். பந்துக்களுடனே சுகஷேமத்துடன் வாழ்வாய். இதன் நடுவிலே கொஞ்சம் கஷ்டத்தையடைந்த போதும் அக்கஷ்டம் உன்னை பாதிக்காது. உன் ஆயுள்காலம் வரையில் ஷேமமாக வாழ்வாய் என்கிறார்.
இதன் தொடர்ச்சியினை நாளைய பதிவில் காண்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



9 comments:
Thanks for sharing such valuable informations on this Blogs...
Keep posting.
http://anubhudhi.blogspot.com/
தோழி,
இன்றைய பதிவிற்கு மிக்க நன்றி.இந்த பதிவை பொறுத்தவரை ,நாம் ,தயகட்டயை,உருட்டி பார்த்தால் தான் பலன்களை அறிய முடியும்.
Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com
மகளிர் தின வாழ்த்துக்கள்...
அன்புள்ள தோழி ,
தாங்களின் பணி மிகவும் சிறப்பு வாய்ந்தது . இந்த பதிவின் முடிவில் நாங்கள் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளும் படி எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் ரொம்ப உபயோகமாக இருக்கும்.
தங்களின் சித்தர் பணி என்றும் தொடர வாழ்த்தும் ..
http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.
valuable information.Thank you.
நன்றி
அற்புதமான அதே சமயம் நம்ப முடியாத அதிசியமாக உள்ளது
நன்றி
சாந்தி
அற்புதமான அதே சமயம் நம்ப முடியாத அதிசியமாக உள்ளது
நன்றி
சாந்தி
Such a wonderful information...
Post a Comment