தசதீட்சை வரிசையில் இன்று ஐந்தாம், ஆறாம் மற்றும் ஏழாவது தீட்சைகளைப் பற்றி பார்ப்போம்.இவை ஒவ்வொன்றாக செய்து சித்தியடைந்த பின்னரே அடுத்தடுத்த தீட்சையை முயற்சிக்க வேண்டும். இந்த வரிசையை எக்காரணம் கொண்டும் மாற்றக் கூடாதென்கிறார் மச்சமுனிவர்.
ஐந்தாம் தீட்சை
தானது அஞ்சாந் தீட்சையைக் கேளு
ஆனது தம்மென் நன்புட னீயும்
வானுட நோக்கி மகிழ்ந்துருக் கொண்டால்
ஊனுடன் தேகம் உறுதியு மாமே.
நான்காவது தீட்சையை செபித்து சித்தியடைந்த பின்னர்,ஐந்தாவது தீட்சையாக "தம்" என்ற மந்திரத்தை முழுமனதுடன் ஒரு மண்டலம் செபித்து வர தேகம் உறுதி மிக்கதாகுமாம்.
ஆறாம் தீட்சை
உறுதியா மாறாந் தீட்சையைக் கேளு
நெறி தவறாமல் நேர்மையில் நின்று
சுருதியி லங்கென் றுடர்ந்துருக் கொண்டால்
பருதி போல் தேகம் பக்குவமாமே.
ஐந்தாவது தீட்சை செபித்து அந்த மந்திரம் சித்தியான பின்னர்,ஆறாவது தீட்சையாக "லங்" என்ற மந்திரத்தினை முழு மனதுடன் ஒருமண்டலம் செபித்து வர தேகமானது பருத்தியைப் போல பக்குவமாகுமாம்.
ஏழாம் தீட்சை
பக்குவ மேழாந் தீட்சையைக் கேளு
திக்கும் பொருளாய்த் தானேரம் மென்று
சிக்குமிடந் தன்னில் சென்றுரு செபித்தால்
திக்கு விசையஞ் செய்யலு மாமே.
ஆறாவது தீட்சை முறையாக செபித்து முடிந்ததும், ஏழாவது தீட்சையாக "ரம்" என்ற மந்திரத்தை முழு மனதுடன் ஒருமண்டலம் செபிக்க அனைத்து பகுதிகளுக்கும் சென்று வரும் வல்லமை சித்திக்குமாம்.
ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா!
அடுத்த பதிவில் மிச்சமிருக்கும் மூன்று தீட்சைகளையும் பகிர்ந்து கொள்கிறேன். காத்திருங்கள்..
Post a Comment



4 comments:
HARD WORK IS THE KEY TO SUCCESS
GOOD LUCK
RAVI J
தோழி,
தாங்கள் கூறிய அனைத்து திக்ஷைகளுக்கும் மிக்க நன்றி.நமது வினை பயனால் சித்திக்கவில்லைஎன்றல்,இதனை தொடர்ந்து செய்ய இயலுமா ?
--
Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com
தோழி,
தாங்கள் கூறிய அனைத்து திக்ஷைகளுக்கும் மிக்க நன்றி.நமது வினை பயனால் சித்திக்கவில்லைஎன்றல்,இதனை தொடர்ந்து செய்ய இயலுமா ?
--
Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com
நன்றி
Post a Comment