தசதீட்சை வரிசையில் இரண்டாம்,மூன்றாம் மற்றும் நான்காம் தீட்சைகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த முதல் தீட்சையை முடித்த பின்னர் குருவருளை வேண்டி வணங்கி இரண்டாம் தீட்சையை செய்திடல் வேண்டும்.இதே வகையில் ஒவ்வொரு தீட்சையாக செய்துமுடிக்க வேண்டுமென்கிறார் மச்சமுணிவர்.
இரண்டாம் தீட்சை
தானது ரெண்டாந் தீட்சையைக் கேளு
ஆனது உம்மென் றள்புட னீயும்
வானது நோக்கி மண்டலஞ் செபித்தால்
கோனவ னருள்தான் குடியிருப்பாமே.
இந்த தீட்சையில் "உம்" என்ற மந்திரத்தை வானத்தை நோக்கியவாறு ஒரு மண்டலம் செபித்து வந்தால் இறையருள் சித்தியாகுமாம்.நேற்றைய பதிவில் கூறியுள்ள முறைப்படி இந்த மந்திரத்தை செபித்து வர வேண்டும்.
மூன்றாம் தீட்சை
குடியினில் மூன்றாந் தீட்சையைக் கேளு
முடியினில் சென்று முழுமனதாக
அடியினில் சிம்மென் றன்புட னீயும்
வடிவுடன் நன்றாய் வணங்கிடு முத்தியே.
இரண்டாவது தீட்சையை நிறைவேற்றிய பின்னர் இந்த மூன்றாவது தீட்சையை துவங்க வேண்டும். இந்த தீட்சையில் "சிம்" என்ற மந்திரத்தை, மனதை ஒரு முகப் படுத்தி அர்ப்பணிப்புடன் ஒரு மண்டலம் செபித்து வர சித்தியாகும் என்கிறார்.
நான்காம் தீட்சை
முத்தியில் நாலாந் தீட்சையைக்கேளு
அத்த னருளை யன்புட நோக்கி
உத்தம நம்மென் றுரிமையாய்ச் செபிக்கில்
சித்தஞ் சிவமாய்த் தானவ னாமே.
மூன்றாவது தீட்சையை செபித்து அது சித்தியான பின்னர் இந்த நான்காம் தீட்சையை துவங்கிட வேண்டுமென்கிறார்.இந்த முறையில் "நம்" என்ற மந்திரத்தை ஒரு மண்டலம் தடையின்றி செபித்து வர செபிப்பவரின் சித்தம் சிவமயமாகுமாம்.
அடுத்த மூன்று தீட்சைகளைப் பற்றி நாளைய பதிவில் காண்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



6 comments:
Genuine Success Comes Only to Those who are Ready for it
GOOD LUCK
RAVI J
Genuine Success Comes Only to Those who are Ready for it
GOOD LUCK
RAVI J
தோழி
தாங்கள் சித்தர் பாடல் மூலம் கருத்தை கூறும் போது மகவும் சிறப்பாக ஊள்ளது.
தோழி,
தாங்கள் கூறிய அனைத்து திக்ஷைகளுக்கும் மிக்க நன்றி.இதற்கு ,மானசீகமாக,குருவை ,நினனைத்து கொண்டு சொல்லலாமா ?
--
Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com
தோழி,
தாங்கள் கூறிய அனைத்து திக்ஷைகளுக்கும் மிக்க நன்றி.இதற்கு ,மானசீகமாக,குருவை ,நினனைத்து கொண்டு சொல்லலாமா ?
--
Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com
நன்றி
Post a Comment