சதுரகிரியின் அற்புத மூலிகைகள்!

Author: தோழி / Labels: ,

சதுரகிரி மலையில் இருக்கும் அரிய விருட்சங்கள் மற்றும் மூலிகைகளின் பட்டியலை நேற்றைய பதிவில் பார்த்தோம். இனி வரும் நாட்களில் குறிப்பிட்ட சில அரிய மூலிகைகள் மலையின் எந்தப் பகுதியில் இருக்கிறது என்பதையும், அவற்றின் தன்மை மற்றும் மகத்துவத்தினைப் பற்றி பார்ப்போம்.

மிகவும் ரகசியமாய் பாதுகாக்கப்படுகிற சதுரகிரியின் தகவல்களை நான் பொதுவில் வைப்பதினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி சில நண்பர்கள் தங்களின் ஆதங்கத்தினை தெரிவித்திருந்தனர். நான் தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஒரு கருத்தினையே அந்த நண்பர்களுக்கு பதிலாக வைத்திட விரும்புகிறேன். குருவருளால் மட்டுமே எதுவும் சாத்தியமாகும். நற்சிந்தனையும்,குருவருளும் வாய்க்கப் பட்டவர்களுக்கு மட்டுமே சித்தர் பெருமக்களால் சபிக்கப் பட்ட இந்த ரகசியங்கள் கைகூடும்.

வாருங்கள் மூலிகைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

முண்டகவிருட்சம்

சதுரகிரி மகாலிங்க மூர்த்தியின் சன்னிதிக்கு வடதிசையில் ஒரு நாளிகை தூரம் நடக்க முண்டகவனம் என்னும் ஒரு வனம் இருக்கிறது. அந்த வனத்தின் வட மேற்கு மூலையில் இந்த முண்டக விருட்சங்கள் வளர்ந்திருக்கும். தோற்றத்தில் ஆல விருட்சம் போல் இருந்தாலும், இதன் இலைகள் சிறியதாகவும் காய்கள் கலத்திக்காய் போலவும் இருக்கும். இந்த மரத்தை தட்டினால் பால்வருமாம்.

அந்தப் பாலை தினமும் அரைக்காற் படியாக முப்பது நாளைக்கு சாப்பிட மூர்ச்சை ஆகுமாம். அப்போது ஒருவர் அருகில் இருந்து பசுப்பலை நன்கு காய்ச்சி தேன்விட்டு கலந்து ஒருகரண்டி வீதம் அடிக்கடி மூர்ச்சையானவருக்கு பருகத் தர வேண்டுமாம் அப்படி தொடர்ந்து பருக மூர்ச்சை தெளியுமாம். மூர்ச்சை தெளிந்து ஒருவாரத்தில் காயசித்தி உண்டாகி விடுமாம்.உடல் தங்கநிறமாகுமாம், மலஜலம் பேதிக்குமாம்.

அழுகண்ணி

மேலே சொன்ன முண்டகவிருட்சத்திற்க்கு பக்கத்தில் வட்டப்பாறை ஒன்று இருக்கிறதாம், அதன் மேற்குப் பகுதியில் கசிவுத்தரையும் அதில் நெரி கற்களும் நிறைந்த ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்தில் அழுகண்ணி என்ற மூலிகைகள் வளர்ந்திருக்கும். அதன் இலை பலாச்சுளை போல் இருக்கும். பூமஞ்சள் நிறமாகவும் காய் செந்தட்டிக்காய் போலவும் இருக்கும். இதை சாப நிவர்த்தி செய்து பிடுங்கி அதன் வேரை சூரணித்து பசு நெய்யுடன் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் நரை, திரை, மூப்பு, பிணி இன்றி நெடுங்காலம் வாழலாமாம்.

தொழுகண்ணி

மேலே சொன்ன அழுகண்ணி மூலிகை இருக்கும் இடத்திற்கு மேல் புறமாக தொழுகண்ணி என்னும் மூலிகை இருக்கிறது, அதன் இலை அலரி இலை போலிருக்கும், பூ வெண்மை நிறமாகவும் , தூர் கறுப்பு நிறமாகவும் இருக்கும், இது சூரியனை நோக்கியபடி இருக்கும். இந்த குறிப்புகளைக் கொண்டு இதனை தேடி அறிந்து, இலையில் கொஞ்சமும், முன்னர் கூறிய அழுகண்ணி இலையில் கொஞ்சமும் சம அளவில் எடுத்து சூரணித்து அந்த சூரனத்தில் திரிகடிப் பிரமாணம் எடுத்து பசும் பாலில் போட்டு அருந்தினால் காயசித்தி உண்டாகுமாம்.

நாளைய பதிவில் மேலும் கற்பக விருட்சம் மற்றும் சஞ்சீவி மூலிகையின் அற்புதங்களைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

8 comments:

சங்கர் குருசாமி said...

Very Informative... Thanks for sharing... Continue your good work...

Guruvadi Saranam said...

Thozi,

Very Nice.

TKS
S.Rajendran
Bangalore.

Elangai Tamilan said...

தோழி,
தங்களின் இன்றைய பதிவுகள் மிக அருமை.தாங்கள் கூறிய தகவல்களை பார்த்தால்,ஒரு மாதம் சதுரகிரியேல்,தங்கினால் கூட,நம்மால் ,பூரணமாக அறிய இயலாது என்று எண்ணுகிறேன்.
நான் தெரிந்த சில மூலிகைகைகள் பற்றி
சேங் கொட்டை, தில்லை, தும்புலா போன்ற மருத்துவ
குணம் கொண்ட மரங்களில் பூ பூக்கும் காலங்களில்போகக்கூடாது.
காரணம், இப்பூக்கள் மிகவும் வீரியமுள்ள நச்சுத்தன்மை கொண்டவை என்பதால், அவற்றின் மேல்பட்டுவரும் காற்றைச் சுவாசிப்பதால் மயக்கம் உண்டாகலாம்.

சில, பல சமய்ங்களில் உயிருக்கே அது ஆபத்தாக முடியலாம்.
சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது.

இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும்.
அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும்.

விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும்
அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.
அதேபோல் 'ஏர் அழிஞ்ச மரம்' என்றொரு மரம் உண்டு.

இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன்
கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும்.
இடையில் மழை, காற்றினால் மரத்தை
விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல்
தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில்
வந்து ஒட்டிக்கொள்ளும்.

தமிழ்நாட்டில் பல போலி சாமியார்கள்
பெண்களை மிகவும் சுலபமாக ஏமாற்றி
வசியம் செய்து அவர்களை வசப்படுத்திக்
கொள்வதை தினம் தினம் கேள்விப்பட்டு
இருப்பீர்கள்.

இந்த 'ஏர் அழிஞ்ச மரத்தின்' கொட்டைகளை எடுத்து
எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும்
மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.




பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும்,
சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள்,
மூலிகைகள், இலைகள் இம்மலையில்மேல் உள்ளன.
இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற
அரிய கனிவகைகள் இருக்கின்றன.



--

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

Elangai Tamilan said...

இந்த 'ஏர் அழிஞ்ச மரத்தின்' கொட்டைகளை எடுத்து
எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும்
மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.




பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும்,
சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள்,
மூலிகைகள், இலைகள் இம்மலையில்மேல் உள்ளன.
இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற
அரிய கனிவகைகள் இருக்கின்றன.



--

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

149 said...

உங்கள் உடைய முயற்ச்சி வியக்கவைக்கிறது.
தீனா

praveen said...

நன்றி

நாகேந்திரன் said...

அன்புள்ள தோழி,இன்றைய பதிவு என்னை வியப்பில் ஆழ்த்திவிட்டது படிக்க படிக்க
சுவாரசியமாக இருக்கிறது மீண்டும் நாளை காத்திருக்கிறேன் உங்களின் பதிவுக்காக.

praveen said...

நன்றி

Post a Comment