அருளும், பொருளும் நல்கும் அரிய யந்திரம்

Author: தோழி / Labels: ,



இந்த புத்தாண்டு நாளில் முயற்சியுடையோர் வாழ்வில் அருளும், பொருளும் நல்கும் யந்திரம் ஒன்றினை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த யந்திரம் கருவூராரால் தனது கருவூரார் மாந்திரீக காவியம் என்ற நூலில் அருளப் பட்டிருக்கிறது.தொழில் முனைவோருக்கும், செய்தொழில் வெற்றிகள் வேண்டுவோருக்கும், பொருள் தேடும் முய்ற்சியில் சுண்ங்கியிருப்போருக்கும் இந்த யந்திரம் உதவுமென்கிறார் கருவூரார்.

மேலே இருக்கும் படத்தில் இருக்கும் அறுங்கோனமும் அதனூடாக அமைந்திருக்கும் ஸ்ரீம் எனற எழுத்துக்களைக் கொண்ட எளிய யந்திரம்தான் இது. மையத்தில் பலன் வேண்டுவோரின் பெயரை பொறித்தால் இந்த யந்திரம் முழுமையடைந்து விடும். இந்த யந்திரத்தினை கீறும் முறையினை கருவூரார் பின்வருமாறு விளக்குகிறார்.

மூன்ற்ங்குல சதுரமான தங்கம் அல்லது வெள்ளி அல்லது செப்புத் தகடு இந்த யந்திரம் கீறிட உகந்தது.தகட்டில் யந்திரத்தை கீறிட செப்பாலான ஆணியினை பயன் படுத்திட வேண்டுமாம். உடல் சுத்தியுடன் கிழக்கு முகமாய் அமர்ந்து குருவினை வணங்கி இந்த யந்திரத்தை தகட்டில் கீறிட வேண்டும் என்கிறார்.

இவ்வாறு கீறிய தகட்டினை தாம்பாளம் ஒன்றில் பட்டுத் துணி விரித்து அதில் வைத்து செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் பூசைகளை தொடங்க வேண்டுமாம். விளக்கேற்றி வைத்து, கிழக்கு முகமாய் அமர்ந்து பின் வரும் மந்திரத்தை 108 தடவைகள் செபித்து சிவப்பு நிற மலர் தூவி பூசைகளை செய்திட வேண்டும்.

"ஓம் ஸ்ரீம் ஐம் செளம் லம் மகா லட்சுமி சுவாஹா"

இவ்வாறூ தொடர்ந்து பதினோரு நாட்கள் இம்மாதிரி பூசை செய்து வந்தால் யந்திரம் உருவேற்றப் பட்டு சக்தி கொண்டதாக ஆகிவிடுமாம். இத்தகைய சக்தி வாய்ந்த யந்திரத்தினை வர்த்தகம் அல்லது தொழில் ஸ்தாபங்களில் வைத்து தினமும் காலையில் பூக்கள் தூவி மேலே சொன்ன மந்திரத்தினை மூன்று தடவைகள் மட்டும் கூறி வந்தால் அந்த இடத்தில் அருளும், பொருளும் பெருகும் என்கிறார் கருவூரார்.

மிகவும் எளிதான இந்த யந்திரத்தை பயன்படுத்தி பலனடைய எல்லாம் வல்ல குருவருள் துனை நிற்கட்டும்.

மீண்டுமொரு முறை எனது இதயம் நிறை புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

21 comments:

மங்கை said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.. மென்மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துக்கள்...

skarthee3 said...

iniya puthaandu vaazthukkal!!

Guruvadi Saranam said...

தோழி,
நல்ல தகவல்.
மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்.

Shiva said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

கருவாச்சி said...

தோழி

இந்த புத்தாண்டில் மென் மேலும் தொடரட்டும் உங்கள் சேவை

149 said...

thanks

sury said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

சுப்பு ரத்தினம்.

Ramesh said...

Good information about yantra..Wish u very happy and prosperous new year

சாமீ அழகப்பன் said...

நல்ல பதிவு தோழி.மந்திரத்தகடுகள் ஏரண்டத் தைலம் தொட்டு பொட்டு வைத்தால்தான் வேலை செய்யும்.அது பற்றியும் உங்களிடம் குறிப்புக்கள் இருக்கும்.இருந்தால் அது பற்றியும் எழுதினால்தான் எந்திரங்களை செய்து பயன் அடைய முடியும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Elangai Tamilan said...

தோழி,
தங்களின் பதிவுகள் மிகவும் செறிவு மிகுந்தது.தங்கள் எல்லா வளமும் பெற்று ,தலைமுறை ஒரு கோடி கண்ட தமிழழை மேலும் பலபடுத்த வேண்டுகிறேன்

tamilvirumbi said...

என் அனைத்து நண்பர்களுக்கும்..

" பிரிந்துவிடும்
என்று தெரிந்தும்
மலரைச் சுமக்க
செடி
மறுப்பதில்லை...!

பிரியும் பூவாக
இல்லாமல்...!!
சுமக்கும்
செடியாக இருப்பேன்


காதல்
ஒருமுறைதான் வரும்.
ஒவ்வொரு பெண்ணிடமும்.

நட்பு அப்படியல்ல...
"உண்மையான நட்பு"

"அன்பில் முளைத்து
ஆறுதலில் கலந்து
இதயம்
ஈன்ற நட்பு
உயிரில் கலந்து
ஊக்கமளித்த நட்பு
என்றென்றும்
ஏங்கவைக்கும் நட்பு.
ஐயமின்றி
ஒற்றுமையாய்
ஓங்கி நிற்கும் நட்பு
ஔவை அதியமான் போல்".
நண்பர்களாய் இருப்போம்.



வாழ்க்கை...
ஒரு பக்கம் சகாரா...
மறு பக்கம் நயாகரா...
வாருங்கள் நந்தவனமாக்குவோம்.
அனைவரும் இன்புற்றிருக்க
ஆவண செய்வோம்.

அன்புடன்...

lalli said...

hi tholi,

eppadi irukeenga
aankila puthaandu vaalthukal tholi

வானவன் யோகி said...

தங்கள் சேவை போற்றற்குறியது.மென்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.

தாங்கள் குறிப்பிடும் விளக்கங்கள் அனைத்துமே மேலோட்டமானதாகவே தெரிகிறது.இன்னும் ஆழ்ந்து செல்ல/சொல்ல முயலவும்.

சக்கரத்தில் ”சாத்தியநாமா”மட்டுமே குறிக்கக் கூறப் பெற்றுள்ளது
மற்றபடி எந்திரங்கள் அனைத்தும் ”எட்டும்,இரண்டும்” இல்லாமலும் ஐங்கோல மை(அ)பஞ்சபூத மை சக்கரங்களில் இல்லாமலும் வேலை செய்யாது என்பது துணிபு.

இன்னும் பல முறைபாடுகள் இருப்பினும் தெளிந்தவர் மாத்திரம் தேடுதல்/தேருதல் நலம்.

KAMARAJ. A.D said...

dfsdfsAnbu Vanakkam
AruArulu porulum nalgum ariya yanthiram seivasseivatharkkaana pooja vidhi muraigal mattrumatrum padayal porutkal edhum idampera villavvillai edhenu irunthaal ezhuthavum Nanri

சுந்தரா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி :)

சங்கர் குருசாமி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

RAVINDRAN said...

very very useful and simple enthiram bless me for my success. with your kind permission let me have courage to do the enthram.

Raj said...

தோழி ,
கால சர்ப்ப தோசம் நீங்க சித்தர்கள் கூறும் பரிகாரம் என்ன?
தயவு செய்து கூறவும் .

ராஜ்குமார்

THIRUMAL said...

SUPER

babu said...

hello thozhi ur articles are super, please explain thirumoolar navakiri chakiram

Inquiring Mind said...

இந்த யந்திரத்தை இப்படி பொதுத் தளத்தில் விளக்கியிருக்கிறீர்களே.. தவறானவர்கள் தவறான தொழிலுக்கு பயன்படுத்தமாட்டார்கள் என்ற நிச்சயம் உள்ளதா?

அப்படி தவறாக பயன்படுத்தும்போதும் இந்த யந்திரம் வேலை செய்யுமல்லவா?

டா வின்சி கோட் நாவலை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.. அதிலும் இதே யந்திரத்தைதான் உப்யோகப்படுத்தியிருக்கின்றனர்..

ஒரு ரகசிய குழு, இந்த யந்திரத்தை பயன்படுத்தி, இன்று உலகத்தையே தன் கைக்குள் வைத்துக் கொண்டிருக்கிறது.. அதைப் பற்றி தங்களுக்கு தெரியுமா?

Post a Comment