சாமுத்ரிகா லக்ஷணம் என்பதற்கான சரியான தமிழ் வார்த்தை என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. ஆகையால் இந்த பெயருடனே இந்த தொடரினை துவங்குகிறேன். தெரிந்தவர்கள் கூறினால் திருத்திக் கொள்கிறேன்.
சாமுத்ரிகா லக்ஷனம் அல்லது அங்க லக்ஷணம் பற்றி இந்து மரபியலில் சமஸ்கிருதம்,தெலுங்கு,தமிழ் மொழிகளில் பழமையான நூல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. இவற்றுள் தமிழில் சித்தர் பெருமக்கள் தங்கள் பாடல்களில் தெரிவித்திருக்கும் கருத்துக்களை மட்டுமே இந்த தொடரில் தொகுத்தளிக்க இருக்கிறேன்.
மனிதர்களின் குணாதிசயங்களை அவர்களின் ஜீன்கள் நிர்ணயிப்பதாக நவீன அறிவியல் கூறுகிறது.ஒருவரின் தோற்றம், இயல்பு,குணாதிசயங்கள் போன்றவைகளில் பரம்பரையின் பாதிப்புகள் தொடர்கிறது எனவும் பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிறுவப் பட்டிருக்கிறது.நமது முன்னோர்கள் இதை இன்னமும் எளிமையாக் “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்றார்கள்.
சாமுத்ரிகா லக்ஷணத்தை சோதிட இயலோடு தொடர்புடைய ஒரு கலையாகவே பலரும் கருதுகின்றனர். பழந் தமிழர்களைப் பொறுத்தவரையில் இது ஒரு வாழ்வியல் நடைமுறையாகவே இருந்திருக்கிறது. பிறப்பில் இருந்து இறப்பு வரையான அத்தனை அம்சங்களின் ஊடாக இந்த கலையின் பயன் பாட்டில் இருந்திருக்கிறது. மனித வளர்ச்சியில் ஊடாக உடலில் ஏற்படும் வளர்ச்சி, மாற்றங்கள் என இவை ஏற்படுத்தும் தாக்கங்களை மிக விரிவாகவே சித்தர்கள் தங்களின் பாடல்களில் பதிந்து வைத்திருக்கின்றனர்.
அகத்தியர், தேரையர்,போகர் போன்றவர்களின் பாடல்களில் இந்த அங்க லக்ஷணம் பற்றிய விவரிப்புகள் நிறைய காணக் கிடைக்கின்றன. ஆண், பெண் என இரு பாலாருக்கும் தனித்தனியே கூறியிருக்கின்றனர். ஒருவரின் அங்க அமைப்பு அவரின் இயல்புகளையும், அவர்களுக்கான பலன்களையும் தீர்மானிப்பதாக கூறுகின்றனர். தாங்கள் சந்தித்த பல் வேறு மனிதர்களை அவர்களின் இயல்புகளை ஆய்ந்தறிந்தே இதனை எழுதியிருக்க வேண்டுமென நம்புகிறேன்.
நமக்கு கிடைத்திருக்கும் இந்த தகவல்களைக் கொண்டு மேலதிக ஆய்வுகளும், விவாதங்களும் இந்த கலையை மேலும் செம்மைப் படுத்த உதவும். என்னுடைய தனிப்பட்ட அவதானிப்பில் இந்த கலையை திருமண பொருத்தம், குழந்தை பிறப்பு, நோய்களுக்கான அறிகுறிகளை கண்டறிதல் போன்றவைகளில் சிறப்பாக பயன்படுத்தக் கூடிய வாய்ப்பிருப்பதாக கருதுகிறேன்.
அநேகமாய் பழக்கத்தில் இருந்து மறைந்து விட்ட இந்த கலையினைப் பற்றி இனி வரும் நாட்களில் விரிவாக பார்ப்போம்.
சாமுத்ரிகா லக்ஷனம் அல்லது அங்க லக்ஷணம் பற்றி இந்து மரபியலில் சமஸ்கிருதம்,தெலுங்கு,தமிழ் மொழிகளில் பழமையான நூல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. இவற்றுள் தமிழில் சித்தர் பெருமக்கள் தங்கள் பாடல்களில் தெரிவித்திருக்கும் கருத்துக்களை மட்டுமே இந்த தொடரில் தொகுத்தளிக்க இருக்கிறேன்.
மனிதர்களின் குணாதிசயங்களை அவர்களின் ஜீன்கள் நிர்ணயிப்பதாக நவீன அறிவியல் கூறுகிறது.ஒருவரின் தோற்றம், இயல்பு,குணாதிசயங்கள் போன்றவைகளில் பரம்பரையின் பாதிப்புகள் தொடர்கிறது எனவும் பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிறுவப் பட்டிருக்கிறது.நமது முன்னோர்கள் இதை இன்னமும் எளிமையாக் “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்றார்கள்.
சாமுத்ரிகா லக்ஷணத்தை சோதிட இயலோடு தொடர்புடைய ஒரு கலையாகவே பலரும் கருதுகின்றனர். பழந் தமிழர்களைப் பொறுத்தவரையில் இது ஒரு வாழ்வியல் நடைமுறையாகவே இருந்திருக்கிறது. பிறப்பில் இருந்து இறப்பு வரையான அத்தனை அம்சங்களின் ஊடாக இந்த கலையின் பயன் பாட்டில் இருந்திருக்கிறது. மனித வளர்ச்சியில் ஊடாக உடலில் ஏற்படும் வளர்ச்சி, மாற்றங்கள் என இவை ஏற்படுத்தும் தாக்கங்களை மிக விரிவாகவே சித்தர்கள் தங்களின் பாடல்களில் பதிந்து வைத்திருக்கின்றனர்.
அகத்தியர், தேரையர்,போகர் போன்றவர்களின் பாடல்களில் இந்த அங்க லக்ஷணம் பற்றிய விவரிப்புகள் நிறைய காணக் கிடைக்கின்றன. ஆண், பெண் என இரு பாலாருக்கும் தனித்தனியே கூறியிருக்கின்றனர். ஒருவரின் அங்க அமைப்பு அவரின் இயல்புகளையும், அவர்களுக்கான பலன்களையும் தீர்மானிப்பதாக கூறுகின்றனர். தாங்கள் சந்தித்த பல் வேறு மனிதர்களை அவர்களின் இயல்புகளை ஆய்ந்தறிந்தே இதனை எழுதியிருக்க வேண்டுமென நம்புகிறேன்.
நமக்கு கிடைத்திருக்கும் இந்த தகவல்களைக் கொண்டு மேலதிக ஆய்வுகளும், விவாதங்களும் இந்த கலையை மேலும் செம்மைப் படுத்த உதவும். என்னுடைய தனிப்பட்ட அவதானிப்பில் இந்த கலையை திருமண பொருத்தம், குழந்தை பிறப்பு, நோய்களுக்கான அறிகுறிகளை கண்டறிதல் போன்றவைகளில் சிறப்பாக பயன்படுத்தக் கூடிய வாய்ப்பிருப்பதாக கருதுகிறேன்.
அநேகமாய் பழக்கத்தில் இருந்து மறைந்து விட்ட இந்த கலையினைப் பற்றி இனி வரும் நாட்களில் விரிவாக பார்ப்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...