ஏதோ ஒரு வேகத்தில் இலக்கில்லாமல் துவங்கிய இந்த வலைமனையின் வளர்ச்சி நான் கொஞ்சமும் எதிர்பாராதது.மிக நிச்சயமாக இதெல்லாம் குருவருளினால் மட்டுமே சாத்தியமாயிற்று.சித்தர்களைப் பற்றி பெரியவர்கள் பலர் இங்கே விரிவாகவும், தெளிவாகவும் எழுதிக் கொண்டிருக்கிற வேளையில் ,வயதில் மிக இளையவளான எனது பதிவுகள் கவனிக்கப் படுமா என்கிற கவலைகள் நிச்சயமாக இருந்தது. திட்டமில்லாமல் எழுதிக் கொண்டிருந்த என்னை நெறிப்படுத்திய பெருமை இந்த பதிவுகளை தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்களையே சேரும்.
தினமும் ஒரு பதிவு எழுதுவதன் சாத்தியம் குறித்து பல நண்பர்கள் ஆச்சர்யம் தெரிவித்திருந்தனர்.எனது படிப்பின் ஊடே தினசரி பதிவுகள் எழுதுவது சாத்தியமில்லாத ஒன்று.சனிக் கிழமைகளில் அடுத்த வாரத்திற்கு என்ன எழுதுவது என தீர்மானித்து, புத்தகங்களை தேடி குறிப்பெடுத்து, ஞாயிற்று கிழமைகளில் ஒரே மூச்சில் எழுதி அதை ஆறு பதிவுகளாய் பிரித்து நாளும் நேரமும் குறிப்பிட்டு வலையேற்றுவதுடன் என் வேலை முடிந்து விடுகிறது.ப்ளாக்கர் அவற்றை தினம்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் பதிப்பித்து விடுவதால் வாரம் ஆறு பதிவுகள் சாத்தியமாகிறது.
அழிந்து கொண்டிருக்கும் தகவல்களை அனைவருக்கும் பொதுவாய் பகிர்வதன் பலனாய்,நாடு கடந்து கிடைத்த பல நல்ல நட்புகளும்,பெரியவர்களின் மனமார்ந்த ஆசிகளும்,தமிழகத்து பத்திரிக்கை ஒன்றில் எனது கட்டுரைகள் இடம் பிடித்ததும், பதிப்பகம் ஒன்றில் இருந்து வந்திருக்கும் விசாரணை என இந்த வலை மனையின் மூலம் எனக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரமானது, பெரிதான வெளியுலக தொடர்பில்லாத சாமான்ய தமிழ் பெண்ணுக்கு மிகப் பெரிய வெகுமானம்.
கடந்த ஒன்பது மாதங்களில் இந்த வலைமனையின் வளர்ச்சியினை கீழே உள்ள படம் விளக்கிடும். தற்போது இந்த வலை மனையினை தினசரி அறுநூறு பேர் வரையில் பார்வையிடுகின்றனர்.

இந்த தகவல் பகிர்வை இன்னமும் முனைப்பாக தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கொண்டு சேர்ப்பதன் மூலம் நமது முன்னோர்களின் அருமையினை அனைவரும் உணரச் செய்திட இயலும். சித்தர்கள் அருளிய தகவல்களின் மீது மேலதிக ஆய்வுகள், விவாதங்கள் நடத்துவதன் மூலம் பல அரிய பேருண்மைகளை நாம் வாழும் சமூகத்திற்கு தந்திட இயலும்.
சுயநலமில்லாத பொது நலமே ஒரு சமூகத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். என்னுடைய சிறுமுயற்சினால் சித்தர் பெருமக்களின் தெளிவுகளை தினசரி அறுநூறு பேருக்கு கொண்டு சேர்க்க முடிகிறதென்றால், நீங்கள் ஒவ்வொருவரும் மனது வைத்தால் இந்த தகவல்களை இன்னும் பல ஆயிரம் தமிழர்களுக்கு கொண்டு சேர்த்திட இயலும்.
இதனை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களிடம் என்னுடைய பணிவான வேண்டுகோள் இதுவே...இந்த வலைமனையின் விவரங்களை இயன்றவரையில் அறிந்தவர்கள், தெரிந்தவர்களுக்கு அறிமுகம் செய்திடுங்கள்.நாம் பெற்ற இன்பம் அனைவரும் பெற்றிட எல்லாம் வல்ல குருவருள் துனை நிற்கும்.
தினமும் ஒரு பதிவு எழுதுவதன் சாத்தியம் குறித்து பல நண்பர்கள் ஆச்சர்யம் தெரிவித்திருந்தனர்.எனது படிப்பின் ஊடே தினசரி பதிவுகள் எழுதுவது சாத்தியமில்லாத ஒன்று.சனிக் கிழமைகளில் அடுத்த வாரத்திற்கு என்ன எழுதுவது என தீர்மானித்து, புத்தகங்களை தேடி குறிப்பெடுத்து, ஞாயிற்று கிழமைகளில் ஒரே மூச்சில் எழுதி அதை ஆறு பதிவுகளாய் பிரித்து நாளும் நேரமும் குறிப்பிட்டு வலையேற்றுவதுடன் என் வேலை முடிந்து விடுகிறது.ப்ளாக்கர் அவற்றை தினம்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் பதிப்பித்து விடுவதால் வாரம் ஆறு பதிவுகள் சாத்தியமாகிறது.
அழிந்து கொண்டிருக்கும் தகவல்களை அனைவருக்கும் பொதுவாய் பகிர்வதன் பலனாய்,நாடு கடந்து கிடைத்த பல நல்ல நட்புகளும்,பெரியவர்களின் மனமார்ந்த ஆசிகளும்,தமிழகத்து பத்திரிக்கை ஒன்றில் எனது கட்டுரைகள் இடம் பிடித்ததும், பதிப்பகம் ஒன்றில் இருந்து வந்திருக்கும் விசாரணை என இந்த வலை மனையின் மூலம் எனக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரமானது, பெரிதான வெளியுலக தொடர்பில்லாத சாமான்ய தமிழ் பெண்ணுக்கு மிகப் பெரிய வெகுமானம்.
கடந்த ஒன்பது மாதங்களில் இந்த வலைமனையின் வளர்ச்சியினை கீழே உள்ள படம் விளக்கிடும். தற்போது இந்த வலை மனையினை தினசரி அறுநூறு பேர் வரையில் பார்வையிடுகின்றனர்.

இந்த தகவல் பகிர்வை இன்னமும் முனைப்பாக தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கொண்டு சேர்ப்பதன் மூலம் நமது முன்னோர்களின் அருமையினை அனைவரும் உணரச் செய்திட இயலும். சித்தர்கள் அருளிய தகவல்களின் மீது மேலதிக ஆய்வுகள், விவாதங்கள் நடத்துவதன் மூலம் பல அரிய பேருண்மைகளை நாம் வாழும் சமூகத்திற்கு தந்திட இயலும்.
சுயநலமில்லாத பொது நலமே ஒரு சமூகத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். என்னுடைய சிறுமுயற்சினால் சித்தர் பெருமக்களின் தெளிவுகளை தினசரி அறுநூறு பேருக்கு கொண்டு சேர்க்க முடிகிறதென்றால், நீங்கள் ஒவ்வொருவரும் மனது வைத்தால் இந்த தகவல்களை இன்னும் பல ஆயிரம் தமிழர்களுக்கு கொண்டு சேர்த்திட இயலும்.
இதனை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களிடம் என்னுடைய பணிவான வேண்டுகோள் இதுவே...இந்த வலைமனையின் விவரங்களை இயன்றவரையில் அறிந்தவர்கள், தெரிந்தவர்களுக்கு அறிமுகம் செய்திடுங்கள்.நாம் பெற்ற இன்பம் அனைவரும் பெற்றிட எல்லாம் வல்ல குருவருள் துனை நிற்கும்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


