உலோகங்கள் பற்றிய நம் முன்னோர்களின் அறிவு மற்றும் நுட்பங்கள் இன்றைக்கும் நமக்கும் ஆச்சர்யம் தரக்கூடியவை.அவர்கள் உருவாக்கிய தரத்தில் இன்றைக்கும் நம்மால் உருவாக்கிட இயலவில்லை என்பதே அவர்களின் அறிவின் பெருமைக்கு சாட்சி.உலோகம் என்பது தமிழ் வார்த்தை இல்லை. பழந்தமிழர்கள் உலோகத்தை ”பொன்” என்றே அழைத்தனர்.
இரசவாதத்தில் உலோகவியலின் பங்களிப்பு பற்றி விரிவாக கூறப் பட்டிருக்கிறது.இந்த உலோகங்களை மூலப் பொருளில் இருந்து தனியே பிரித்தெடுக்கும் முறைகளும், அவற்றை உருக்கி பிரித்தெடுக்கும் உருக்குலை,வார்ப்புலை, கற்களன்கள் அமைப்பது பற்றிய விவரங்கள், இந்த உலைகளை பயன்படுத்தும் முறை மற்றும் பக்குவங்கள் என ஏராளமான தகவல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன.
உலோகங்களின் தன்மைகள், பன்புகள், பயன்கள்,வகைகள் என உலோகவியலின் கூறுகளை விவரிக்கும் சித்தர்கள், உலோகங்களை ஒன்றோடொன்று இனைப்பதன் மூலம் உருவாகிடும் அலோகங்களைப் பற்றி கூறிடும் தகவல்கள் மிகவும் ஆச்சர்யமானவை. ஒரு உலோகத்தை வேதி வினைகளின் மூலம் மற்றொரு உலோகமாய் மாற்றிடும் முறையும், உயர் உலோகத்தை தாழ்ந்த உலோகமாய் தரமிறக்கும் அல்லது தாழ்ந்த உலோகத்தை உயர் உலோகமாய் தரம் உயர்த்தும் முறைகள் சித்தர்களிடையே புழக்கத்தில் இருந்திருக்கிறது.
ஓர் உதாரணத்திற்கு சொல்வதென்றால் பஞ்சலோக சிலைகளின் உருவாக்கத்தில் பயன்படுத்த சரியான உலோக கலவை விகிதம் இன்னதென வரையறுப்பதில் இன்று வரை நம்மிடையே குழப்பங்கள் நீடிக்கிறது.இன்று நாம் உருவாக்கிடும் பஞ்சலோக சிலைகள் நிச்சயமாக பழந்தமிழர்கள் உருவாக்கிய சிலைகளின் தரத்தில் இல்லை என்பதே நிஜம்.
போகர் தனது ”போகர்7000” என்கிற நூலில் உலோகங்களின் வகைகளைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.
"சொலென்று பூமாது தானும் கேட்க
சுருதிமகா விட்டுணுவும் சொல்லலுற்றார்
புல்லென்ற பூருவத்தில் பொன்வெள் ளிசெம்பு
பேரான காரீயம் வெள்ளீயந் தானும்
துல்லென்ற த்துதநாகத் தினோடு தான்
துளுவான நல்லிரும்பு கருப்பி ரும்பு
ஏல்லென்ற எக்குவாகும் திராவுந்தானும்
ஏற்றமான வெங்கலமும் பித்தளை யுந்தானே"
பூதேவிக்கு, மஹா விஷ்ணு உலோகங்களைப் பற்றி உரைப்பதாக இந்த பாடலை அமைத்திருக்கிறார். இதன் படி பொன், வெள்ளி, செம்பு, காரீயம், வெள்ளீயம், துத்த நாகம், நல்லிரும்பு, கருப்பிரும்பு, எக்கு எனப்படும் திரா, வெங்கலம், பித்தளை. என்று பதினொரு வகை உலோகங்கள் உள்ளதாக சொல்லியிருப்பதாக சொல்கிறார்.
மற்றொரு பாடலில்...
"தானான பதினோன்று லோகந்தானும்
தனித் தனியே உற்பத்திக் குணா குணமே
வேனான லட்சணங்கள் குருச்செந் தூரம்
மிக்கன சத்து வகை களங்கு தானும்
பேனான பிரித்துமே தான் ஒவ்வொன்றாக
பிசமாக சொல்லுகிறேன் பின்பு கேளு
பானான பூரூவத்தில் சிவபிரான் தானும்
பார்வதியும் இருவருமாய் பகன்றார் காணே"
தனிமங்களான பதினோரு உலோகங்களை உற்பத்தி செய்வதில் துவங்கி அவற்றின் குணாதிசயங்கள்,பன்புகள், பயண்கள் உட்பட, இவற்றைக் கொண்டு தயாரிக்கப் படும் செந்தூரம், களங்கு போன்றவைகளைப் பற்றிய விவரங்களை கயிலாய மலையில் சிவனும்,பார்வதியும் கூறியதை தெளிவாக கூறுகிறேன், கேள் என்கிறார்.
நவீன உலோகவியலுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாத சித்தர்களின் உலோகவியல் பற்றிய மேலதிக விவரங்களுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
இரசவாதத்தில் உலோகவியலின் பங்களிப்பு பற்றி விரிவாக கூறப் பட்டிருக்கிறது.இந்த உலோகங்களை மூலப் பொருளில் இருந்து தனியே பிரித்தெடுக்கும் முறைகளும், அவற்றை உருக்கி பிரித்தெடுக்கும் உருக்குலை,வார்ப்புலை, கற்களன்கள் அமைப்பது பற்றிய விவரங்கள், இந்த உலைகளை பயன்படுத்தும் முறை மற்றும் பக்குவங்கள் என ஏராளமான தகவல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன.
உலோகங்களின் தன்மைகள், பன்புகள், பயன்கள்,வகைகள் என உலோகவியலின் கூறுகளை விவரிக்கும் சித்தர்கள், உலோகங்களை ஒன்றோடொன்று இனைப்பதன் மூலம் உருவாகிடும் அலோகங்களைப் பற்றி கூறிடும் தகவல்கள் மிகவும் ஆச்சர்யமானவை. ஒரு உலோகத்தை வேதி வினைகளின் மூலம் மற்றொரு உலோகமாய் மாற்றிடும் முறையும், உயர் உலோகத்தை தாழ்ந்த உலோகமாய் தரமிறக்கும் அல்லது தாழ்ந்த உலோகத்தை உயர் உலோகமாய் தரம் உயர்த்தும் முறைகள் சித்தர்களிடையே புழக்கத்தில் இருந்திருக்கிறது.
ஓர் உதாரணத்திற்கு சொல்வதென்றால் பஞ்சலோக சிலைகளின் உருவாக்கத்தில் பயன்படுத்த சரியான உலோக கலவை விகிதம் இன்னதென வரையறுப்பதில் இன்று வரை நம்மிடையே குழப்பங்கள் நீடிக்கிறது.இன்று நாம் உருவாக்கிடும் பஞ்சலோக சிலைகள் நிச்சயமாக பழந்தமிழர்கள் உருவாக்கிய சிலைகளின் தரத்தில் இல்லை என்பதே நிஜம்.
போகர் தனது ”போகர்7000” என்கிற நூலில் உலோகங்களின் வகைகளைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.
"சொலென்று பூமாது தானும் கேட்க
சுருதிமகா விட்டுணுவும் சொல்லலுற்றார்
புல்லென்ற பூருவத்தில் பொன்வெள் ளிசெம்பு
பேரான காரீயம் வெள்ளீயந் தானும்
துல்லென்ற த்துதநாகத் தினோடு தான்
துளுவான நல்லிரும்பு கருப்பி ரும்பு
ஏல்லென்ற எக்குவாகும் திராவுந்தானும்
ஏற்றமான வெங்கலமும் பித்தளை யுந்தானே"
பூதேவிக்கு, மஹா விஷ்ணு உலோகங்களைப் பற்றி உரைப்பதாக இந்த பாடலை அமைத்திருக்கிறார். இதன் படி பொன், வெள்ளி, செம்பு, காரீயம், வெள்ளீயம், துத்த நாகம், நல்லிரும்பு, கருப்பிரும்பு, எக்கு எனப்படும் திரா, வெங்கலம், பித்தளை. என்று பதினொரு வகை உலோகங்கள் உள்ளதாக சொல்லியிருப்பதாக சொல்கிறார்.
மற்றொரு பாடலில்...
"தானான பதினோன்று லோகந்தானும்
தனித் தனியே உற்பத்திக் குணா குணமே
வேனான லட்சணங்கள் குருச்செந் தூரம்
மிக்கன சத்து வகை களங்கு தானும்
பேனான பிரித்துமே தான் ஒவ்வொன்றாக
பிசமாக சொல்லுகிறேன் பின்பு கேளு
பானான பூரூவத்தில் சிவபிரான் தானும்
பார்வதியும் இருவருமாய் பகன்றார் காணே"
தனிமங்களான பதினோரு உலோகங்களை உற்பத்தி செய்வதில் துவங்கி அவற்றின் குணாதிசயங்கள்,பன்புகள், பயண்கள் உட்பட, இவற்றைக் கொண்டு தயாரிக்கப் படும் செந்தூரம், களங்கு போன்றவைகளைப் பற்றிய விவரங்களை கயிலாய மலையில் சிவனும்,பார்வதியும் கூறியதை தெளிவாக கூறுகிறேன், கேள் என்கிறார்.
நவீன உலோகவியலுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாத சித்தர்களின் உலோகவியல் பற்றிய மேலதிக விவரங்களுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



7 comments:
its okey... but if u dont mind .. its better if share the information with more depth on a particular subject.
its better to learn a subject in full than getting introduction on many.
so pls continue any one .. varma or manayadi sasthira or metalargy.. any one but with deeper and deeper in same subject ...
Thozi,
First of all,I am sending my heart-felt thanks to you.Abstract information about metallurgy
is given in a simple and an understandable way
for a layman himself.Please keep up publishing
without any falter.I will continue my sustenance till my end.
Vinoth
அவங்க என்ன இங்க மெட்டலர்ஜி க்லாஸா எடுக்கறாங்க...முன்னோர்களின் அறிவு.. நமக்கே தெரியாமல் நம்மிடம் இருக்கும் பொக்கிஷம்..
இவ்வளோ விஷயம் பகிர்ந்துக்கறதே பெரிய விஷயம்னு நான் நினைக்கிறேன்..வேற யாராவதா இருந்தா இத்தனை அறிய தகவல்களை பகிர்வதற்கு யோசிப்பார்கள்... சித்தர்கள் பாட்டுக்கள் மட்டுமல்ல...அதோடு தொடர்புடைய மற்ற விவரங்களை தெளிவான தமிழில் பகிர்வது தான் ஆச்சிரியமான விஷயம்/
@மங்கை
நல்ல பதில்.
siddharkalai patri pugala varthaigale illai
siddhargalai pugala varthai illai
siddharkalai patri pugala varthaigale illai
Post a Comment