தன்னை அறியும் தேடலின் படி நிலைகளை அறிமுகப் படுத்துவதே இந்த தொடரின் நோக்கம். தன்னையறிதலுக்கு ஆயிரத்தெட்டு விதமாக விளக்கம் சொல்லலாம். ஆனால் அடிப்படைகளை புரிந்து கொள்ளாமல் விளக்கங்களின் பின்னால் போவதில் பயனில்லை என்பதால் நானறிந்த வகையில் படிநிலைகள் சிலவற்றையே இந்த வாரத்தில் தொகுத்திருக்கிறேன்.
தன்னையறிதல் என்பது குருவருளின் துனையோடு முயற்சியும், பயிற்சியும் கைகூடியவர்களுக்கு மட்டுமே வாய்த்திடும் அற்புதம். ஐம்புலன்களை நெறிப்படுத்தி, மன இயக்கத்தை ஒழுங்கில் கொண்டு வர முயல்வதே தன்னையறிதலின் அதாரம். மனதை ஒழுங்கில் கொணர்வதும் அதை தக்க வைப்பதும் தொடர் நிகழ்வு ஆகும்.
மனம் ஒடுங்கினால் தெளிவுகள் தோன்றி அவை ஒன்றில் நிலைக்கும். அப்போது தோற்ற மயக்கங்கள் விலகும். இத்தனை நாளாக நிலையானதாய் நாம் நினைத்துக் கொண்டிருந்த நிலையற்றவைகளைப் பற்றிய புரிதல்கள் உருவாகும். நம்மில் இருந்து நாம் விலகி நமது நிலையினை தரிசிக்கும் ஒரு படிநிலையாக இதனை சித்தர்கள் கூறியிருக்கின்றனர்.
பதஞ்சலி அருளிய “பதஞ்சலி யோகம்” என்கிற நூல் தன்னையறிதலையும் அதன் படி நிலைகளையும் தெளிவாய் விளக்குகிறது. இதனை அடிப்படையாக கொண்டே பலரும் தன்னையறிதல் குறித்த தமது அனுபவங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர். இன்றைக்கும் கூட பலரும் பல பெயரில் தன்னையறிதலை வியாபாரமாக செய்து கொண்டிருக்கின்றனர். தன்னையறிதல் விலை கொடுத்து வாங்கக் கூடிய ஒரு பொருள் அல்ல, நாலைந்து வகுப்புகளுக்குச் செல்வதால் மட்டும் கைகூடும் வித்தையும் அல்ல.
தன்னையறிதல் என்பது தொடர் அனுபவத்தில் மட்டுமே உணர்ந்து ஒழுகிட வேண்டிய தத்துவம். தன்னை ஒன்றாக்கி, ஒன்றில் கலந்து ஒன்றாய் நிற்கும் அற்புதம்...
இத்துடன் இந்த தொடரை தற்காலிகமாய் நிறைவு செய்கிறேன். பிரிதொரு சந்தர்ப்பத்தில் இவற்றை தனித் தனியே விரிவாய் எழுதிட முயற்சிக்கிறேன்.
அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்..
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



8 comments:
மிக அருமை.
மிகவும் அருமையாண விளக்கம் தோழி
Thozi,
For the time being,You have stopped this topic Self-Intuition.It is a vast subject to discuss.In a nutshell,you have given some
valuable points about mind in downtoearth approach.I reciprocate my thanks for sharing your thoughts.I have heard about one thing from my colleague is that Mind control can only get if fifth place from lagna in a horoscope to be occupied by benefic planet.
Otherwise, whatever attempts,We have made, we can not come through.Is it True?
நல்ல தகவல் . நன்றி
useful to people
useful to people
நல்ல பகிர்வு..
On behalf of thozhi horescope has no significance in self realisation. Guru's grace and deekshai is important which comes if there is total surrender with faith.
Post a Comment