போகர் தெரியும்!, யாரிந்த யோகர்?

Author: தோழி / Labels:

இந்த பதிவின் நாயகரான யோகர், அருட்சித்தர் போகர் அளவுக்கு பிரபலமானவரோ அல்லது அறியப்பட்டவரோ இல்லை. ஆனால் ஈழத்து மண்ணின் பதினென் சித்தர்களில் ஒருவராக போற்றி வணங்கப் படுபவர்.

நறுக்குத் தெறித்தார் போல கருத்துகக்ளை கூறவல்லவர் யோகர். சிவ தத்துவத்தினை பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

"சிவத்தியானஞ் செய் செய் செய்
சிவமே நாமெனல் மெய் மெய் மெய்
அவனி அனைத்தும் பொய் பொய் பொய்
அதனை அரிந்து உய் உய் உய்"

- யோகர் சுவாமிகள் -

மற்றொரு பாடலில் தான் குருவருள் பெற்றதைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

"யாரடாநீ யென்று அதட்டினான்
அன்றேயான் பெற்றேன் அருள்"

இவ்வாறு குருவின் ஒரு வார்த்தையாலேயே குருவருள் கைகூடிய சிறப்புப் பெற்றவர் யோகர்சுவாமிகள்.

தியானம் பற்றிய யோகர் சுவாமிகளின் அறிவுறுத்தல் தெளிவானதும், தீர்க்கமானதும் ஆகும்."ஒருவன் மனதினை அடக்கி வெற்றி கொள்ள வேண்டும் எனத் தீவிரமாக விரும்புவானானால், அவன் தியானத்தைத் தினந்தோரும் செய்துவரக் கடவன்" என்கிறார்.

பதமாசன இருக்கை, தூய்மையான இடம், அமைதியான சூழல் ஆகியனவே தியான சாதனைக்கு ஏற்ற ஆயத்த நிலைகள் என்றும்... இதைப் போலவே மிதமான உணவு, மிதமான நித்திரை, மிதமான தேக அப்பியாசம் ஆகியவற்றை வாழ்க்கை முறையாக கூறுகிறார்.

மேலும் தியானம் என்பது ”எதையும் எண்ணிக் கொண்டிருப்பதல்ல என்றும், அது "எதனையும் எண்ணாது சும்மாயிருக்கும் ஒரு நிலை” என்று கூறுகிறார். இதனை...

"சித்திரக்காரன் தீட்டிய தீபம் போல்
நித்திய வஸ்துவில் நினைப்பும் மறப்புமற
முத்தியி லிருக்கும் முறை"

இவரைப் பற்றி பெரிய அளவில் தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால் ஈழத்து சித்தர் மரபில் முக்கியமானவராய் போற்றப் படுகிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

4 comments:

அகோரி said...

நன்றி தோழி

Lingeswaran said...

I have written a article in my blog about the siththars of ilangai. Kindly visit www.lingeswaran-ise.blogspot.com.

naveenkumar said...

HI Thozhi,

ivar than thandauthapani ( nava pasana) vadivamathavar,ivarudaya sedar pulipani ivarai patri solavm please.

Naveen

manikanda raju said...

very nice

Post a Comment