என்ன மாதம்?, என்ன பலன்!

Author: தோழி / Labels:

ஒரு மனிதனின் குண நலன்களை அவர்தம் மரபணுக்கள் தீர்மானிக்கிறது என்றும், எண்ணம், செயல், சிந்தனை மற்றும் திறமைகளை அவர்கள் வாழும் சூழல் தீர்மானிக்கிறதென நவீன அறிவியல் கூறுகிறது.

நந்தீசரோ தனது “நந்தீசர் ஞான சூத்திரம்” என்ற நூலில், ஒருவர் பிறந்த மாதத்தினை வைத்து அவரின் குணாதிசயத்தின் தன்மைகளை பின்வருமாறு வரையறுத்திருக்கிறார்.

"பாரான சித்திரையில் வித்தையில்லை
பண்பான வைகாசி வித்தையுண்டு
நாரான ஆனிதனில் மெத்தநன்று
நலமான ஆடிதனில் தரித்திரனாவான்
வாரான ஆவணியில் கோபக்காரன்
வளமான புரட்டாசி ஞானயோகி
காரான வைப்பசியில் சித்தன்சித்தன்
கார்த்திகையில் தனாயிஸ் வரியோன்றானே"

- நந்தீசர் -

"தானென்ற மார்கழியில் லதிகாரத்தோன்
தைதனெலே யெளியவனாந் தண்மைபாரு
மானென்ற மாசிதனில் மகரசித்தந்தான்
மருவிவந்த பங்குனியில் ஞானியாவான்
வானென்ற பன்னிரெண்டு மார்க்கமையா
வளமாக சொல்லிவிட்டே னார்தான்சொல்வார்
நானென்ற வாணுவத்தை நீக்கிநோர்க்கு
நல்ல சிவராசபத மெய்தும் பாரே"

- நந்தீசர் -

  • சித்திரையில் பிறந்தவர்களுக்கு வித்தைகள் இலகுவில் பலிக்காது
  • வைகாசியில் பிறந்தவர்களுக்கு சிறப்பாக வித்தைகள் எல்லாம் பலிக்கும்
  • ஆனியில் பிறந்தவர்களுக்கு எல்லாம் நன்றாக கைகூடும்
  • ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் தரிதிரர்களாவார்கள்
  • ஆவணியில் பிறந்தால் கோபக்காரர்களாக இருப்பர்.
  • புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் ஞான யோகியாக இருப்பர்.
  • ஐப்பசியில் பிறந்தவர்கள் சித்தர்களாவார்கள்.
  • கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்கள் ஐஸ்வர்யம் உடையவர்களாவர்.
  • மார்கழி மாதத்தில் பிறந்தவர்கள் அதிகாரத்தில் இருப்பார்கள்.
  • தை மாதத்தில் பிறந்தவர்கள் எளிமையானவர்கள்
  • மாசி மாதத்தில் பிறந்தவர்கள் மகர சித்தர்கள் ஆவார்கள்.
  • பங்குனியில் பிறந்தவர்கள் ஞானியாவர்கள்.

என பன்னிரண்டு பேருக்குமான பலன்களைச் சொல்லிவிட்டேன், இதை யாரும் சொல்லமாட்டார்கள் எனச் சொல்லும் நந்தீசர், ”நான்” என்ற ஆணவத்தை அடக்குபவர் எல்லாரும் சிவபதமடைவர் என்கிறார்.

நாளை இந்த தளத்தின் முன்னூறாவது பதிவு. எனது புதிய முயற்சி ஒன்றினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Post a Comment

16 comments:

kavitha said...

அருமையான பதிவு தோழி

:))

அகோரி said...

நல்வாழ்த்துக்கள்..

அகோரி said...

நல்வாழ்த்துக்கள்..

அகோரி said...

நல்வாழ்த்துக்கள்..

Annamalai said...

vadamozhi ezhuthu kadaisi variyil ullathay
evvaaru?(muthal paadal)
annamalai.

Shiva said...

சுலபவழி,மாதத்தை வைத்தே பலன். நந்தீஸ்வரர் சொன்னது எனக்கு சரியாக உள்ளது.

srini said...

உண்பது இருபொழுதொழிய முப்பொழுதும் உண்ணோம்.
உறங்குவது இராவொழியப் பகலுறக்கம் செய்யோம்.
பெண்கடமை திங்களுக்கு ஓர்கால் அன்றி மருகோம்.
பெருந்தாகம் எடுத்திடினும் பெயர்த்து நீர்-அருந்தோம்.
மண்பரவு கிழங்குகளில் கருணை-அன்றிப் புசியோம்
வாழை-இளம் பிஞ்சொழியக் கனி-அருந்தல் செய்யோம்.
நண்பு-பெற உண்டபின்பு குறுநடையும் கொள்வோம்.
நமனார்க்கு இங்கு-ஏது கவை நாம் இருக்கும் இடத்தே -தேரையர்

Itharku konjam artham solungalen please......

Thanks
Srini

மகேஷ் ராஜ் said...

வாழ்த்துக்கள்

பிரவின்குமார் said...

வழக்கம்போல் மிகவும் சிறந்த பதிவு..!! தொடரட்டும் தங்கள் சேவை தோழி..!!

JILLU-nu ORU YUVA said...

பாரட்ட வார்த்தைகள் இல்லாமல் திணறுகிறேன் ,

praveen said...

நன்றி தோழி , நான் மார்கழி மாதத்தில் பிறந்தேன் . நந்தீசிர் கூறுவது கூற்று பலிக்க இன்னும் இருபது வருடங்கள் ஆகும் என நினைக்கிறேன் .

vijayakumar said...

பயணம் இனிதே தொடர " நமசிவாய " த்தை பற்றிடவும் .

ஜிஜி said...

பதிவு நல்லா இருக்கு.
வாழ்த்துக்கள்..

கருவாச்சி said...

thank u very use full

omsh14 said...

டியர் தோழி என்ன காரணம் சித்தரயில் வித்தைகள் ஏன் இலகுவில் பலிக்காது சொல்லவும்
shankar g my email omsh14@gmail.com

Sasikumar C said...

Brilliant nice article...

Post a Comment