வெற்றிலையில் மை போட்டால்....!?

Author: தோழி / Labels:

முந்தைய காலங்களில் ஏதேனும் களவெடுக்கப் பட்டு விட்டாலோ, செய்வினை போன்றவைகளினால் யாரேனும் பாதிக்கப் பட்டிருந்தாலோ.... உள்ளூர் மாந்திரீகரிடம் போனால் அவர் வெற்றிலையில் மை போட்டு பார்த்து களவெடுத்தவர்களைப் பற்றியும், ஏவல் செய்தவர்களின் விவரங்களை சொல்லுவார்.இன்றும் கூட சில இடங்களில் இந்த வழக்கம் நடை முறையில் இருக்கிறது.

இந்த முறையின் சாத்திய, அசாத்தியங்களையோ அல்லது தர்க்க நியாயங்களை பற்றியோ அலசுவது இந்த பதிவின் நோக்கமன்று. இந்த முறையினைப் பற்றி புலிப்பாணி சித்தர் தனது “பலதிரட்டு சூத்திரம்” என்கிற நூலில் கூறியுள்ளதை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

"பாரப்பா நிலவானை மலைகள் தோறும்
பண்பாகத் தானிருக்கு மறிந்து பாரு
வாரப்பா வதினுடைய விரையைத் தானும்
வளமாகப் பத்துபல மெடுத்து வந்து
சீராப்பா தலைமஞ்சள் கொடியு மாவுஞ்
சிறப்பாக முப்பாக முப்பூவும் வராகள் கூட்டித்
தேரப்பா வில்லைதட்டி யுலரப் போடு
திறமாக யுலர்த்தியதைத் தயிலம் வாங்கே."

- புலிப்பாணி -

மலைகளில் நிலவாகை என்று ஒருவகை செடி வளர்ந்திருக்கும், அந்த செடியைக் கண்டு பிடித்து அதன் விதையில் பத்து பலம் எடுத்து அதனுடன் தலைமஞ்சள் கொடியின் மாவு ஒரு விராகனும், முப்பூ ஒரு விராகனும் சேர்த்து நன்றாக அரைத்து வில்லைகளாகத் தட்டி அந்த வில்லைகளை நன்கு உலரவைத்து பின்னர் அதில் இருந்து குழித்தைலம் இறக்கி எடுத்துக் கொள்..


"வாங்கியே ஆள்காட்டி முட்டை தன்னை
வளமான சிற்றண்டத் தயிலம் போலே
தாங்கியே வாங்கியந்தத் தயில நேரே
தயவாகத் தானெத்துச் சிமிழிதனில் வைத்து
ஓங்கியே களவுமுதற் சூன்யம் யாவும்
உற்றுப்பார் தோற்றுமடா கள்ள மெல்லாம்
நீங்கியெ யதுகண் பிடித்துக் கொண்டு
நினைவாகக் குருபாதம் பணிவாய்த் தானே"

- புலிப்பாணி -

ஆள்க்காட்டி என்ற குருவியின் முட்டைகளைக் கொண்டு சிற்றண்டத்தைலம் போல தைலம் இறக்கி, அந்த தைலத்துடன் முன்னர் செய்த குழித் தைலத்தையும் சம அளவில் கலந்து சிமிழ் ஒன்றில் சேமித்து வைத்தல் வேண்டும்.

களவு போனாலோ அல்லது யாராவது சூனியம் செய்வினை போன்றவை செய்தாலோ அவற்றை செய்தவர் யார் என்று அறிய ஒரு வெற்றிலை ஒன்றை எடுத்து அதில் சிமிழில் சேமித்த தைலத்தில் சிறிது எடுத்து தடவி குருநாதரை நினைத்து வணங்கி பார்த்தால் திருடியது, சூனியம் செய்வினை ஏவல் செய்தது யார் என்று அதில் தெளிவாகத் தெரியும் என்கிறார் புலிப்பாணி.

நாளைய பதிவில் சித்தர்களின் தரிச்னம் கிடைத்திட அகத்தியர் அருளிய முறை ஒன்றுடன் சந்திக்கிறேன்.

Post a Comment

5 comments:

பிரவின்குமார் said...

ஆச்சரியமான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி தோழி.

magesh said...

@பிரவின்குமார்

karthi said...

really nice

RAVINDRAN said...

nice

Babu said...

Where I get it ?
Or can you prepare and send to me ?

Post a Comment