சித்தமருத்துவத்தில் விலங்கினங்கள்!

Author: தோழி / Labels:

சித்த மருத்துவத்தில் “அகமருந்து”, “புறமருந்து” என இரண்டு வகைகள் உள்ளன. நோயின் தன்மை மற்றும் தீவிரத்திற்கேற்ப இந்த மருந்துகள் அளிக்கப் படும். இவை 64 வகையாக அறியப் பட்டிருக்கிறது. இந்த மருந்துகள் அனைத்துமே இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே தயாரிக்கப் பட்டன.

இந்த வகையில் விலங்குகள், பற்வைகள், பூச்சி புழுக்கள் கூட மருந்தாக்கத்தில் பயன் படுத்தப் பட்டன. விலங்குகளின் கொம்புகள்,உடல் பாகங்கள், எச்சில்,மலம், விந்து,எலும்பு,எண்ணை, பிச்சு, தோல், குளம்பு, தந்தம் என பல்வேறு பொருட்கள் மருத்துவம், மாந்திரீகம், வசியம் போன்றவைகளுக்கு சித்தர்களால் பயன் படுத்தப் பட்டன.

அந்த வகையில் சில மிருகங்களில் இருந்து பெறப்பட்ட பொருட்களைப் பற்றி பார்ப்போம்.


கஸ்தூரி...

கவரி மானின் மார்புப் பகுதியில் கஸ்தூரி என்னும் பொருள் அமைந்திருக்கும். இதனை எடுத்து பதப் படுத்தி உபயோகின்றனர்.

கோரோசனை..

பசுவின் ஈரலுக்கு அருகிலுருக்கும் கொழுப்பு போன்ற பொருள்தான் கோரோசனை. மஞ்சள் நிறத்திலிருக்கும் இதை எடுத்து காயவைத்து பயன் படுத்துவர்.

புனுகு...

பூனைகளில் பலவகை உண்டு அவற்றில் புனுகு என்றொரு வகைப் பூனையின் விந்தே புனுகு என்ற பெயரில் பயன்படுகிறது.

சவ்வாது..

இதுவும் ஒருவகை பூனையின் விந்தே ஆகும் தூய சவ்வாது கொழ கொழப்பாய் இருக்கும்.

அம்பர்

கடலில் வாழும் திமிங்கிலத்தின் புணர்ச்சியின் பொது வெளிப்படும் இந்த பொருள்,கடலில் மிதந்து கரை ஒதுங்கும். இதை எடுத்து காய வைத்து பயன்படுத்துவர்.

இதைப் போல மயில் எண்ணை, பறவைகளின் முட்டைகள்,உடும்பு,முதலை போன்றவற்றில் இருந்து பெறப்பட்ட நெய், பாம்பின் விஷம், புறாவின் எச்சம் என பல்வேறு ஆதாரங்கள் சித்தர் பாடல்களில் விரவிக் கிடக்கிறது. இவற்றை சுத்தி செய்து தங்களின் தேவைகளுக்கு சித்தர்கள் பயன் படுத்தினர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

12 comments:

jagadeesh said...

அப்படியென்றால், மருந்திற்காக விலங்குகளை கொல்லலாம் என்கிறார்களா?

Narasimmarin Naalaayiram said...

நன்றி

பிரவின்குமார் said...

புதுமையான தகவல்கள்..!! முன்பு மருந்துக்கு....
இப்பலாம் விருந்துக்காகதான் விலங்குகளையும் பறவைகளையும் பயன்படுததுறாங்க..!!!

agamudali said...

நன்றி.அகத்திய மாமுனி ''முனீஸ்வர மற்றும் ஐயனார்'' வழிபாடு பற்றி ஏதேனும் கூறியிருக்கிறாரா?

அகோரி said...

நல்ல தகவல்
நன்றி
அன்புத் தோழி

தோழி said...

@agamudali

இது தொடர்பாக தனியொரு பதிவில் விளக்கங்களை பகிர்ந்து கொள்கிறேன். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

sathy said...

what is saaba nivarthi... how to do it... what is the mantra used for saaba nivarthi during plucking a plant... please reply madame..

RAVINDRAN said...

நன்றி

Ashvinji said...

அற்புதமான செய்திகளை பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். தோழி உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன். நன்றி.

Pakkiyanathan Gopiraj said...

Most People love chicken biriyani boss! Is that make any sense? Sorry no offence?

Pakkiyanathan Gopiraj said...

Most People love chicken biriyani boss! Is that make any sense? Sorry no offence?

francesco said...

thanks

Post a Comment