லிங்க முத்திரை

படத்தில் உள்ளது போல, இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்றாக இறுக்கமாகக் கோர்த்து, இடது பெருவிரலை மட்டும் நேராக நிமிர்த்து வைத்துக் கொள்ளவேண்டும். அத்துடன் இரண்டு உள்ளங்கைகளும் அழுத்தமாக இணைந்திருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும் இதுவே லிங்க முத்திரையாகும்.இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்..
தொடர்ந்து இந்த முத்திரையை செய்து வருவதன் மூலம் உடல் எடை அதிகமாக இருப்பின் குறைந்து, அளவான உடல் எடையினைக் கொடுக்கும். மேலும் இந்த முத்திரை ஜலதோசதிற்கு சிறந்த நிவாரணமாக அமையும் என்கிறார்.
வயிறு சம்பந்தமான நோயுள்ளவர்கள் இந்த முத்திரையை செய்யகூடாது என்றும் எச்சரிக்கிறார்.
ருத்ர முத்திரை...

படத்தில் உள்ளதைப் போல பெருவிரல் நுனி , சுட்டு விரல் நுனி மற்றும் மோதிரவிரல் நுனி ஆகியவற்றை ஒன்றாக இணைத்து, நடுவிரல், சுண்டு விரல் நேராக வைத்திருத்தல் வேண்டும். இதுவே ருத்ர முத்திரையாகும்.இதனை பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை செய்யலாம்.
உடல் வலிமை குன்றியவர்களுக்கு உடல்வலிமை மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அளிப்பதோடு, இருதயத்தையும் வலுப்படுத்தும் என்கிறார்.
பொதுவில் முத்திரைகளை யாரும் செய்யலாம், இதற்கென எந்த விதமான முன் தயாரிப்புகளும் தேவையில்லை. அமைதியான சூழலில் பத்மாசனத்தில் அமர்ந்து செய்வது இன்னமும் சிறப்பு. முத்திரைகளின் வகைக்கேற்ப குறைந்தது பத்து நிமிடம் முதல் முக்கால் மணி நேரம் வரை செய்ய வேண்டும். முத்திரைகளை தொடர்ந்து செய்து வருவதனால் மட்டுமே தேவையான பலன் கிட்டும். தகுந்த குருவின் மேற்பார்வையில் இவற்றை பழகி, பயன்படுத்துவது சிறப்பு.
தன்வந்திரி அருளிய முத்திரைகள் ஏராளமாய் இருந்தாலும், தேர்ந்தெடுத்த சில முத்திரைகளை மட்டுமே கடந்த ஐந்து தினங்களாக பதிவேற்றியிருக்கிறேன். எதிர்காலத்தில் முத்திரைகளை மின் நூலாக தொகுக்கும் எண்ணமும் இருக்கிறது.நேரமின்மை மற்றும் பதிவின் சுவாரசியம் கருதி இந்த பதிவுடன் முத்திரைகளை இடை நிறுத்திக் கொள்கிறேன், பிரிதொரு சந்தர்ப்பத்தில் இவற்றைத் தொடர்கிறேன்.
முற்றிலும் புதியதோர் தலைப்பில் அடுத்த பதிவு... காத்திருங்கள்...

படத்தில் உள்ளது போல, இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்றாக இறுக்கமாகக் கோர்த்து, இடது பெருவிரலை மட்டும் நேராக நிமிர்த்து வைத்துக் கொள்ளவேண்டும். அத்துடன் இரண்டு உள்ளங்கைகளும் அழுத்தமாக இணைந்திருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும் இதுவே லிங்க முத்திரையாகும்.இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்..
தொடர்ந்து இந்த முத்திரையை செய்து வருவதன் மூலம் உடல் எடை அதிகமாக இருப்பின் குறைந்து, அளவான உடல் எடையினைக் கொடுக்கும். மேலும் இந்த முத்திரை ஜலதோசதிற்கு சிறந்த நிவாரணமாக அமையும் என்கிறார்.
வயிறு சம்பந்தமான நோயுள்ளவர்கள் இந்த முத்திரையை செய்யகூடாது என்றும் எச்சரிக்கிறார்.
ருத்ர முத்திரை...

படத்தில் உள்ளதைப் போல பெருவிரல் நுனி , சுட்டு விரல் நுனி மற்றும் மோதிரவிரல் நுனி ஆகியவற்றை ஒன்றாக இணைத்து, நடுவிரல், சுண்டு விரல் நேராக வைத்திருத்தல் வேண்டும். இதுவே ருத்ர முத்திரையாகும்.இதனை பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை செய்யலாம்.
உடல் வலிமை குன்றியவர்களுக்கு உடல்வலிமை மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அளிப்பதோடு, இருதயத்தையும் வலுப்படுத்தும் என்கிறார்.
பொதுவில் முத்திரைகளை யாரும் செய்யலாம், இதற்கென எந்த விதமான முன் தயாரிப்புகளும் தேவையில்லை. அமைதியான சூழலில் பத்மாசனத்தில் அமர்ந்து செய்வது இன்னமும் சிறப்பு. முத்திரைகளின் வகைக்கேற்ப குறைந்தது பத்து நிமிடம் முதல் முக்கால் மணி நேரம் வரை செய்ய வேண்டும். முத்திரைகளை தொடர்ந்து செய்து வருவதனால் மட்டுமே தேவையான பலன் கிட்டும். தகுந்த குருவின் மேற்பார்வையில் இவற்றை பழகி, பயன்படுத்துவது சிறப்பு.
தன்வந்திரி அருளிய முத்திரைகள் ஏராளமாய் இருந்தாலும், தேர்ந்தெடுத்த சில முத்திரைகளை மட்டுமே கடந்த ஐந்து தினங்களாக பதிவேற்றியிருக்கிறேன். எதிர்காலத்தில் முத்திரைகளை மின் நூலாக தொகுக்கும் எண்ணமும் இருக்கிறது.நேரமின்மை மற்றும் பதிவின் சுவாரசியம் கருதி இந்த பதிவுடன் முத்திரைகளை இடை நிறுத்திக் கொள்கிறேன், பிரிதொரு சந்தர்ப்பத்தில் இவற்றைத் தொடர்கிறேன்.
முற்றிலும் புதியதோர் தலைப்பில் அடுத்த பதிவு... காத்திருங்கள்...
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



7 comments:
ok
முத்திரைகளை யாரும் செய்ய முடியாது?
நம் உடல் அமைப்பைப் பொறுத்தே எந்த முத்திரையாக இருந்தாலும் செய்யமுடியும்.
hi dholi how are you. very intresting collection. i hope you too, many more details you presant to us. karthick
i have more than 56 kind of mutra collectoin. It's powerful tool to make our humarous , mental , body & our precious SOUL. all peple use this with teachers (GURU) advice.
முத்திரைகள் செய்ய அர்வமாக உள்ளேன்.யெப்படி அரம்பித்து செஇய வெண்டும். விள்க்கவும்
hmm Ungal pathivu arumai
very nice indeed
Post a Comment