முகுள முத்திரை!, சுரபி முத்திரை!

Author: தோழி / Labels: ,

முகுள முத்திரை


வெகு இலகுவான முத்திரைகளில் இதுவும் ஒன்று நான்கு விரல் நுனிகளையும் பெரு விரல் நுனியுடன் இணைப்பதே முகுள முத்திரை. அதிகமாக அழுத்த்தம் தராமல் சற்று தளர்வாக பிடித்தல் வேண்டும்.

நமது உடலில் ஏதாவது ஒரு பாகம் நோய்வாய்ப் பட்டிருந்தால் அந்த பகுதியில் இந்த முத்திரையைப் பிடித்து ஐந்து நிமிடங்களா வரை மன சக்தியை அந்த உறுப்பின் மேல் செலுத்துவதன் மூலம் அந்த உறுப்பு உறுதி அடைவதுடன் நோயும் படிப்படியாகக் குறையுமாம்.

பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து உடலில் நோய்வாய்ப் பட்ட இடத்தில் பிடிக்கும் போது அந்த இடத்திற்கு தேவையான ஆற்றலை வழங்குவதே இந்த முத்திரையின் தத்துவமாகும்.


சுரபி முத்திரை


இந்த முத்திரையானது சற்று சிக்கலானது. அவதானமாக செய்ய வேண்டும்.

பெருவிரல்கள் இரண்டும் தொடாமல் படத்தில் உள்ள மாதிரி இருத்தல் வேண்டும், வலது ஆள்காட்டி விரல் நுனி இடது நடுவிரல் நுனியுடனும், வலது நடுவிரல் நுனி இடது ஆள்காட்டி விரல் நுனியுடனும், வலது மோதிரவிரல் நுனி இடது சுண்டு விரல் நுனியுடனும், வலது சுண்டு விரல் நுனி இடது மோதிரவிரல் நுனியுடனும் இணைந்து இருத்தல் வேண்டும் இதுவே சுரபி முத்திரையாகும். விரல்களில் அதிக அழுத்தம் தேவையில்லை.

ஆரம்பத்தில் இந்த முத்திரை செய்வது சிரமமாக இருந்தாலும் படிப்படியாக பழக்கப்பட்டுவிடும். நன்கு பழக்கப் பட்ட பின் இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்..

இந்த முத்திரை உடலை வலுவடையச் செய்யும் சிறுநீரகக் கோளாறு நிவர்த்தியாகும். சிந்தனை தெளிவாகும் உயர்ந்த எண்ணங்கள் மனதில் தோற்றுவிக்கும் என்கிறார். அத்துடன் இந்த முத்திரையானது யோகம் பயில்வோருக்கு மிகவும் உகந்தது என்றும் குறிப்பிடுகிறார்.

பார்வைக் கோளாறு நீங்கிட, நினைவாற்றல் அதிகரித்திட, பல்வலி போக்கிட உதவும் முத்திரைகளை நாளைய பதிவில் காண்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

3 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு

ம.தி.சுதா said...

இன்றும் புதுமையான தகவல்கள் சகோதரி தொடரட்டும் தங்கள் பணி....

Post a Comment