சித்தர்களின் பார்வையில் மந்திரம் என்பது ஒலியியல் மற்றும் அதிர்வுகளின் அடிப்படையில் அமைந்த நுட்பம். இந்த கலையினை முறையாக எவரும் கற்றுக் கொண்டு பயன் படுத்திட இயலும். தகுந்த குருவின் வழி நடத்துதலின் பேரில் யாரும் கற்றுக் கொள்ளக் கூடியது. இவற்றை நல்லவற்றிற்கும் பயன் படுத்தலாம், தீயவற்றிற்கும் பயன்படுத்தலாம். இதனை உணர்ந்தே சித்தர்கள் மந்திரக் கலையை நல்லொழுக்கமும் பரோபகார சிந்தனையும் கொண்டவர்கள் மட்டுமே கையாள வேண்டும் என்பதற்க்காக தங்களுக்குள் மிகமிக இரகசியமாக வைத்திருந்தனர்.
அப்படி இருந்தும், பிற்காலங்களில் சுயநலவாதிகளும், பேராசைக்காரர்களும் இந்தக் கலையைக் கையாளத் தொடங்கியதால் மந்திரக்கலை என்றாலே மக்கள் அஞ்சி கலங்கும் ஒரு நிலை உருவாகியது. இன்றைக்கும் சில நபர்கள் தங்களை சித்தர்களின் பிரதிநிதிகள் என்றும், நலமருளும் தேவதைகள் தங்களின் மந்திர சக்திக்கு கட்டுப் பட்டவை என்று பொதுமக்களை நம்பச் செய்து,அவர்களின் அறியாமையை மற்றும் இயலாமையை பயன்படுத்தி கொள்ளையடிப்பதை கண்கூடாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
கருவூர்ச் சித்தர் அன்றைக்கே இத்தகைய போலி மந்திர வாதிகளை தனது ”அட்டமாசித்து” என்னும் நூலின் ஆரம்பத்திலேயே மக்களுக்கு அடையாளம் காட்டி விடுகிறார்...
- கருவூரார் -
நன்மை தரும் பல விசயங்களுக்குப் பயன் படுத்த வேண்டிய இந்த மந்திரக்கலை நிதர்சனத்தில் மக்களை அமானுஷ்யத்தின் பிடியில் வைத்து அச்சமூட்டவும், பொருள் பறிக்கவும், பெண்களை வஞ்சிக்கும் வகையில் பயன் படுத்தப் படுகிறது என்பது கவலையளிக்கும் ஒன்று. இதன் பொருட்டே சித்தர்கள் இந்த அரிய கலையை அதிகம் பரப்பி விடாமல் தமக்கு நம்பிக்கையான சிடர்களிடம் மட்டுமே உபதேசித்தனர்.
மந்திரங்கள் என்பது ஒரு வகையில் கணித சூத்திரங்களைப் போன்றதே..., இவற்றை வெறுமனே மூட நம்பிக்கைகள் என ஒதுக்கி விடாது, இந்த துறையில் மேலதிக ஆய்வுகள் செய்யப் பட்டால் பல விஷயங்களை பற்றிய அளப்பறிய தெளிவுகள் கிடைக்கலாம். மனித குலத்திற்கு எத்தனையோ நன்மைகளை செய்யும் விஷயங்களை உருவாக்கிடும் சாத்தியங்கள் மந்திரக் கலையில் இருக்கின்றது.
விவரம் அறிந்த எவரும் மந்திரங்களை உருவாக்கிட இயலும், ஆனால் அவற்றை பிரயோகிக்கும் முறையில்தான் மந்திரக் கலையின் வெற்றி பொதிந்திருக்கிறது. மந்திரங்களை முறையாக பயன்படுத்தி அவற்றை செயலாக்கம் செய்யும் முறையினைத்தான் மாந்திரீகம் என்கின்றனர்.
சித்தர்கள் மந்திரங்களின் தன்மைகளைப் பொறுத்து அவற்றை எட்டு வகையாக பிரித்திருக்கின்றனர். மேலும் மந்திரக் கலையினை கையாளுவோரின் தகுதிகள் பற்றியும் வரையறுத்துக் கூறியிருக்கின்றனர்.
அந்த விவரங்கள் நாளைய பதிவில்....
அப்படி இருந்தும், பிற்காலங்களில் சுயநலவாதிகளும், பேராசைக்காரர்களும் இந்தக் கலையைக் கையாளத் தொடங்கியதால் மந்திரக்கலை என்றாலே மக்கள் அஞ்சி கலங்கும் ஒரு நிலை உருவாகியது. இன்றைக்கும் சில நபர்கள் தங்களை சித்தர்களின் பிரதிநிதிகள் என்றும், நலமருளும் தேவதைகள் தங்களின் மந்திர சக்திக்கு கட்டுப் பட்டவை என்று பொதுமக்களை நம்பச் செய்து,அவர்களின் அறியாமையை மற்றும் இயலாமையை பயன்படுத்தி கொள்ளையடிப்பதை கண்கூடாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
கருவூர்ச் சித்தர் அன்றைக்கே இத்தகைய போலி மந்திர வாதிகளை தனது ”அட்டமாசித்து” என்னும் நூலின் ஆரம்பத்திலேயே மக்களுக்கு அடையாளம் காட்டி விடுகிறார்...
"வணங்கு வாயுலகினிலே மாந்திரீகர்
மகிதலமும் என்வசமே என்று சொல்வார்
கணங்களெல்லாம் எந்தனுக்குச்சித்தியென்பார்
கண்ணதனில் கண்டேனே தெய்வமென்பார்
குணமான வக்கிரத்தின் மாறெல்லாம்
குறிகண்டு மாறுவோரென்று சொல்வார்
இணங்காதே கோடிகோடி உருவே செய்தொம்
என்றல்லோ வெடுத்துரைப்பார் மட்டிமாடே"
மகிதலமும் என்வசமே என்று சொல்வார்
கணங்களெல்லாம் எந்தனுக்குச்சித்தியென்பார்
கண்ணதனில் கண்டேனே தெய்வமென்பார்
குணமான வக்கிரத்தின் மாறெல்லாம்
குறிகண்டு மாறுவோரென்று சொல்வார்
இணங்காதே கோடிகோடி உருவே செய்தொம்
என்றல்லோ வெடுத்துரைப்பார் மட்டிமாடே"
- கருவூரார் -
நன்மை தரும் பல விசயங்களுக்குப் பயன் படுத்த வேண்டிய இந்த மந்திரக்கலை நிதர்சனத்தில் மக்களை அமானுஷ்யத்தின் பிடியில் வைத்து அச்சமூட்டவும், பொருள் பறிக்கவும், பெண்களை வஞ்சிக்கும் வகையில் பயன் படுத்தப் படுகிறது என்பது கவலையளிக்கும் ஒன்று. இதன் பொருட்டே சித்தர்கள் இந்த அரிய கலையை அதிகம் பரப்பி விடாமல் தமக்கு நம்பிக்கையான சிடர்களிடம் மட்டுமே உபதேசித்தனர்.
மந்திரங்கள் என்பது ஒரு வகையில் கணித சூத்திரங்களைப் போன்றதே..., இவற்றை வெறுமனே மூட நம்பிக்கைகள் என ஒதுக்கி விடாது, இந்த துறையில் மேலதிக ஆய்வுகள் செய்யப் பட்டால் பல விஷயங்களை பற்றிய அளப்பறிய தெளிவுகள் கிடைக்கலாம். மனித குலத்திற்கு எத்தனையோ நன்மைகளை செய்யும் விஷயங்களை உருவாக்கிடும் சாத்தியங்கள் மந்திரக் கலையில் இருக்கின்றது.
விவரம் அறிந்த எவரும் மந்திரங்களை உருவாக்கிட இயலும், ஆனால் அவற்றை பிரயோகிக்கும் முறையில்தான் மந்திரக் கலையின் வெற்றி பொதிந்திருக்கிறது. மந்திரங்களை முறையாக பயன்படுத்தி அவற்றை செயலாக்கம் செய்யும் முறையினைத்தான் மாந்திரீகம் என்கின்றனர்.
சித்தர்கள் மந்திரங்களின் தன்மைகளைப் பொறுத்து அவற்றை எட்டு வகையாக பிரித்திருக்கின்றனர். மேலும் மந்திரக் கலையினை கையாளுவோரின் தகுதிகள் பற்றியும் வரையறுத்துக் கூறியிருக்கின்றனர்.
அந்த விவரங்கள் நாளைய பதிவில்....
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



3 comments:
மிக அருமை . இந்த கலைகளெல்லாம் அழியாமல் பாதுகாத்திட, உங்களைப் போன்ற சான்றோர் பெருமக்கள் கூடி ஆய்வு செய்திட வேண்டும். வாழ்க வளமுடன்.
ரொம்ப நல்லா தொகுத்து இருக்கீங்க பாராட்டுக்கள்
நல்ல பதிவு .
Post a Comment