தாய்மை அடைந்த பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான எளிய தீர்வுகளை, அறிவியல் வளர்ச்சியடையாத அந்த கால கட்டத்தில் சித்தர்கள் மிகவும் தெளிவாக கூறியிருக்கின்றனர்.
"பிலமாக முதல்மாதங் கெர்ப்பமாகிற்
பெண்வயிறு நொந்திட்டால் மருந்து கேளு
சிலைநுதலே சந்தனமு மிலாமிச் சோடு
சேர்த்து நீ சமன் பாலில் கரைத்துக் கொள்ள
விலகாமல் ஆரோகங்கள் வயிறு நொந்தால்
வெள்ளோத்திரம் நெய்தல் கிழங்கு மஞ்சிட்டி
துளையாதே நீயரைத்து பாலில் கொள்ள
சுகமாகு மூன்றாந் திங்கள் கேளே"
- அகத்தியர் -
தாய்மை அடைந்த முதல் மாதத்தில் வயிறு வலித்தால், சந்தனம் மற்றும் இலாமிச்சை வேரைச் சமனளவு சேர்த்து பாலில் கலந்து கொடுக்க குணமாகும். வலி நீங்காது இருப்பின், வெள்ளி லோத்திரம், நெய்தல் கிழங்கு, மஞ்சிட்டி, இவற்றை சேர்த்தரைத்து பாலில் கொடுக்க குணமாகும்.
மூன்றாம் மாதத்தில் வயிறு வலித்தால் சீரகம், தாமரை வளையம், கச்சேலம், சந்தனம் இவற்றை பாலில் அரைத்துக் கொடுக்க குணமாகும்.
நான்காம் மாதத்தில் வயிறு வலித்தால் நெருஞ்சி வேருடன் வாழைக்கட்டை, தாமரை, நெய்தல்வேர், சந்தனம் இவற்றை பசும் பாலில் சேர்த்துக் கொடுக்க குணமாகும்.
ஐந்தாம் மாதத்தில் தோன்றும் சூலை வலிக்கு சந்தனம், நெய்தல்வேர் இவற்றை பசும் பாலில் சேர்த்துக் கொடுக்க குணமாகும்.
ஆறாம் மாதத்தில் ஏற்படும் வயிறு வலிக்கு காட்டிலுள்ள விளாங்காயின் சாற்றையும், நெய்தல் வேரையும், இடித்து சக்கரை, பால் கலந்து கொடுக்க குணமாகும்.
எட்டாம் மாதத்தில் வரும் வலிக்கு காரையிலை, சந்தனம், வெட்டிவேர், திப்பிலி ஆகிய மூலிகைகளை அரைத்து பாலில் கலந்து கொடுக்க குணமாகும்.
இவை மட்டுமல்லாமல் பிறக்கும் குழந்தை அழகாகவும், நீடித்த ஆயுளுடனும், திடகாத்திரமாகவும் பிறக்க பல்வேறு வழிமுறைகளை சித்தர்கள் அருளிச் சென்றுள்ளனர்.
அடுத்த பதிவில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறியும் முறையினையும், குழந்தை பிறக்கும் தேதியை கணிப்பதையும் காணலாம்.
"பிலமாக முதல்மாதங் கெர்ப்பமாகிற்
பெண்வயிறு நொந்திட்டால் மருந்து கேளு
சிலைநுதலே சந்தனமு மிலாமிச் சோடு
சேர்த்து நீ சமன் பாலில் கரைத்துக் கொள்ள
விலகாமல் ஆரோகங்கள் வயிறு நொந்தால்
வெள்ளோத்திரம் நெய்தல் கிழங்கு மஞ்சிட்டி
துளையாதே நீயரைத்து பாலில் கொள்ள
சுகமாகு மூன்றாந் திங்கள் கேளே"
- அகத்தியர் -
தாய்மை அடைந்த முதல் மாதத்தில் வயிறு வலித்தால், சந்தனம் மற்றும் இலாமிச்சை வேரைச் சமனளவு சேர்த்து பாலில் கலந்து கொடுக்க குணமாகும். வலி நீங்காது இருப்பின், வெள்ளி லோத்திரம், நெய்தல் கிழங்கு, மஞ்சிட்டி, இவற்றை சேர்த்தரைத்து பாலில் கொடுக்க குணமாகும்.
மூன்றாம் மாதத்தில் வயிறு வலித்தால் சீரகம், தாமரை வளையம், கச்சேலம், சந்தனம் இவற்றை பாலில் அரைத்துக் கொடுக்க குணமாகும்.
நான்காம் மாதத்தில் வயிறு வலித்தால் நெருஞ்சி வேருடன் வாழைக்கட்டை, தாமரை, நெய்தல்வேர், சந்தனம் இவற்றை பசும் பாலில் சேர்த்துக் கொடுக்க குணமாகும்.
ஐந்தாம் மாதத்தில் தோன்றும் சூலை வலிக்கு சந்தனம், நெய்தல்வேர் இவற்றை பசும் பாலில் சேர்த்துக் கொடுக்க குணமாகும்.
ஆறாம் மாதத்தில் ஏற்படும் வயிறு வலிக்கு காட்டிலுள்ள விளாங்காயின் சாற்றையும், நெய்தல் வேரையும், இடித்து சக்கரை, பால் கலந்து கொடுக்க குணமாகும்.
எட்டாம் மாதத்தில் வரும் வலிக்கு காரையிலை, சந்தனம், வெட்டிவேர், திப்பிலி ஆகிய மூலிகைகளை அரைத்து பாலில் கலந்து கொடுக்க குணமாகும்.
இவை மட்டுமல்லாமல் பிறக்கும் குழந்தை அழகாகவும், நீடித்த ஆயுளுடனும், திடகாத்திரமாகவும் பிறக்க பல்வேறு வழிமுறைகளை சித்தர்கள் அருளிச் சென்றுள்ளனர்.
அடுத்த பதிவில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறியும் முறையினையும், குழந்தை பிறக்கும் தேதியை கணிப்பதையும் காணலாம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



6 comments:
எனக்கு இரண்டு குழந்தைகள்... இதையெல்லாம் முன்பே படிக்காமல் இருந்துவிட்டேன்... இனி தேடிப் படிக்கவேண்டும் ...
எல்லா தாய்மார்களுக்கும் பயன் படும் தகவல்கள். நல்ல பதிவு . இதன் தொடர்ச்சியை எதிர்நோக்குகிறேன்
இயற்கையான வைத்திய முறைகள்.
பாதிப்பில்லாமல் இருக்கும்.இன்றைய இளம் தலைமுறையினர் விரும்புவார்களா என்பது ...?
Thozhi, I had a kid recently. But I dint get enough milk to feed my baby :(
I tried to feed him for one month and took tablets to increase milk secretion but nothing worked.
I wasn't able to pierce even a drop of milk out. still stubbornly fed him only breast milk for one full month, but the milk production hasn't incresed.
Please let us know the reasons for this and any medicines to promote the milk secretion.
My father's health wasn't good at the final month of my delivery and had many mental tensions, would these stop milk secretion??
தோழி ..ஆயுர்வேதத்தில் இதனை 'மாசானு மாச' என்ற தலைப்பில் மிக நன்றாக இதைபோல விளக்கி உள்ளார்கள் ..உங்களது பதிவு மிக்க அருமை ..
@amudha
உங்களுக்கு என்னால் உதவ இயலுமென நினைக்கிறேன்.. தயவு செய்து மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்...
Post a Comment