வாலை பூசையின் ரகசியம்...

Author: தோழி /

பாலாம்பிகையான வாலையை அனைத்துக்கும் ஆதாரமானவள். இந்த ஆதார சக்தியினை வழிபட அகாரம், (சிகாரம்) உகாரம், மகாரம் என்ற மூன்றேழுத்து ஓங்கார மந்திரமே மூல மந்திரமாகும். வாலையை தங்கள் உடலில் இனங்கண்டு, இந்த ஓங்காரத்தின் உட்பொருளை உணர்ந்து அதன் வழி நின்று சித்தியடைவதுதான் வாலைபூசையின் நோக்கம்.

இதன் மகத்துவத்தினை கொங்கணவர் பின் வருமாறு கூறுகிறார்.

"மாதா பிதா கூட இல்லாமலே வெளி பல்லே
மண்ணும் விண்ணும் உண்டு பண்ணவென்று
பேதைப்பெண் ணாமுதல் வாலைப்பெண்ணாளென்று
புகுந்தா ளிந்த புவியடக்கம் "

- கொங்கணவர் -

"மனமு மதியு மில்லாவி டில்வழி
மாறுதல் சொல்லியே யென்ன செய்வாள்
மனமுறுதியும் வைக்க வேணும் பின்னும்
வாலை கிருபையுண் டாகவேணும்"

- கொங்கணவர் -

"வாலையின் அட்சரம் மூன்றாகும் அதை
வாய் கொண்டு சொல்பவர் யார் காணும்
மேல் ஒன்றும் கீழ் ஒன்றும் மத்திமமுங்கூட்டி
விரைந்து பாரடி ஞானப் பெண்ணே.!"

- வாலைக் கும்மி -

கருவூரார் தனது கருவூரார் பூஜாவிதி என்னும் நூலில் வாலை பூசை பற்றி இப்படி சொல்கிறார்..

"பத்து வயதாகும் வாலையவள்
மர்மம் வைத்து பூசை பண்ண
மதியுனக்கு வேணுமடா அதிகமாக
கனரிது சிறு பிள்ளை கன்னி கன்னி
ஆமிவளை அறிந்தவர்கள் சித்தர் சித்தர்
அறிந்ததுமே மன அடக்கம் வந்து சேரும்
நாட்டிலே சொன்னாயானால் நகைப்பர்"

வாலையின் மந்திரம் அ+உ+ம் என்னும் ஓங்கார அட்சரங்களும், அதை மாற்றி வரும் ம்+உ+அ (முருகா) என்னும் அட்சரங்களுமே ஆகும். இதுவே வாலை பூசையின் இரகசிய மந்திரமும், வாலைப் பூசையின் சூட்சுமமும் ஆகும்.

வாலையின் யந்திரம் - முக்கோண பீடம்
வாலையின் மந்திரம் - அ+உ+ம் , ம்+உ+அ.

ஆகவே, அகிலமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த வாலை தெய்வத்தை புற நிலையில் அல்லாமல் அக நிலையில் தெரிந்து கொண்டு , உணர்வைவும், நினைவையும் ஒன்றாக்கி, சித்தத்தில் பரம்பொருளுடன் சேர இவ் வாலைப் பூசையை கைக்கொண்டு சித்திபெற வழிகாட்டுகிறார்கள் சித்தர்கள்.

ஆர்வமும், தீவிரமும் உள்ள எவரும் சித்தர்கள் வழி சென்று சித்தி பெறலாம்.

இந்த வாலை பூசை முறைகளை சிறந்த குருவின் வழிகாட்டல் மூலம் பெற்று நாமும் பயனடைந்து மற்றவர் பயனடைய வழி காட்டுவோமாக...!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

13 comments:

யாதவன் said...

நல்ல படைப்பு
நல்ல முயற்சி பாராடுக்கள்

praveen said...

தங்களின் பதிவுகள் அத்தனையும் , மிக அருமை , இவையெல்லாம் தங்களுக்கு எங்கு கிடைகிறது . நானும் தங்களிடம் திக்கு வாய் போக வழி கேட்டு பல நாட்கள் ஆகிறது !

Tharsan said...

தோழிக்கு எனது முதற்கண் வணக்கத்தினை தெருவித்துகொல்கிற்றேன்.
வாலை என நீங்கள் கூறுவது வாலயம் , வாலாயம் எனவும் கூறுவது உண்டா?

Altruist said...

"aim" enbadhudhan baalayin mandhiram...illayaa?

தோழி said...

@Tharsan

வாலை என்பதும் வாலயம் என்பது வெவ்வேறானவை..
வாலை என்பது சித்தர்களின் தெய்வம்..

தோழி said...

@Altruist

வாலையின் மந்திரம் பதிவில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன்..

shiva said...

good one!

-கிமூ- said...

BAALAYIN MANDIRAM "OM" "MURUGA" ENRU VARUMO!?

suban said...

@தோழி/a

suban said...

can you please tell me which book you find this info if you dont mind telling that. also for the vaalai manthiram does it starts like om and ends like sivaha. pleaes let us know. in detail if you can thanks

Balaji said...

வாலை என்பது தெய்வமாகுமா? தோழி ஒரு வேளை அது முழு முதற்பொருளை குறிக்களாம்..பத்து வயது என்பது ஆதாரமான பத்து முக்கிய நாடிகளை குறிக்களாம்.நாடிகளை சுத்திகரித்து கைகொள்வதன் மூலம் வாலையை (முழுமை)அடையளாம் என்பதாகுமா?

THIRUMAL said...

உடல் உயரமாக வளர சித்தர்கள் மருந்து ஏதும் சொல்ல வில்லையா ? எது மருந்து இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ் . நன்றி

jagadeesh said...

பொடலங்காய் சாப்பிடவும்.

Post a Comment