இந்த பதிவில் கொங்கணவர் வகைப் படுத்திய பரசிவத்தி ரசமணி ம்ற்றும் நாதவேதை ரமணியின் பயன்களை பற்றி பார்ப்போம்.
பரசிவத்தி ரசமணி.
"ஆன்மீகப் பரசி வத்தில்
அறிவெல்லாம் தீபம் போலாம்
தாமினி வெள்ளியாய்க் காட்டும்
தனி மணி சித்திக் கேளு
வாமினி செனங்கள் செத்து
மறு சென்மம் எடுத்த தெல்லாம்
ஓமினி யுள்ளே யாற்றி
உண்மையைக் கட்டும் காணே"
- கொங்கணவர் -
பரசிவத்தி என்னும் மணியானது, அறிவுச் சுடரோளியைப் பிரகாசிக்கச்செய்யும் இதனால் பரம்பொருளானது ஜோதி ரூபமாக கண்களுக்கு தோன்றும் என்றும், மனிதர்களது முன்ஜென்மமும், பின்னர் எடுக்கப் போகும் மறு ஜென்மங்களும் தெரியவரும் என்கிறார் கொங்கணவர்.
நாத வேதை ரசமணி.
"காணு நீ நாத வேதைக்
காட்டுகின்ற முறைமைக் கேளு
பூணு நீ சூதங் கட்டிப்
புகட்டிச் சாரணைகள் செய்து
தோணு நீ வில்லை போல
சுகப்பட வார்த்துத் தட்ட
வாமினி சாத்தான் கேட் கில்
அம்மட்டும் வேதையாமே"
- கொங்கணவர் -
"வேதையாம் பரிசம் தன்னில்
விளங்கிய மணியைக் கேளு
ஆதையாம் லோகஞ் செங்கல்
அடைவுடன் சுக்கான் மண்ணும்
பாதையாய் காட்டு முன்னே
பளிச்சென்று தங்கமாகும்?"
- கொங்கணவர் -
நாத வேதை என்பது ரசத்தை மணியாகக் கட்டி அதற்க்கு முறையான சாரணைகள் செய்து அதை வில்லை போல் தட்ட அந்த சத்தம் எவ்வளவு தெளிவாக கேட்க்குமோ அந்த நேரத்தில் தங்கமாகும் என்றும் இதை பரிச மணியாக மாற்றினால் அது செங்கல், சுக்கான் கல், மணல், போன்றவற்றின் முன் காட்டினால் அவற்றை தங்கமாக்கும் தன்மை பெரும் என்றும் சொல்கிறார் கொங்கணவர்.
ஆகவே இவற்றின் மூலம் இரச மணிகளை முறையாக செய்து முடித்ததால் எவ்வளவு சிறப்பான பயன்களைப் பெறலாம் என்பதை கொங்கணவர் வார்த்தைகள் மூலமே அறிந்து கொண்டோம்.
பரசிவத்தி ரசமணி.
"ஆன்மீகப் பரசி வத்தில்
அறிவெல்லாம் தீபம் போலாம்
தாமினி வெள்ளியாய்க் காட்டும்
தனி மணி சித்திக் கேளு
வாமினி செனங்கள் செத்து
மறு சென்மம் எடுத்த தெல்லாம்
ஓமினி யுள்ளே யாற்றி
உண்மையைக் கட்டும் காணே"
- கொங்கணவர் -
பரசிவத்தி என்னும் மணியானது, அறிவுச் சுடரோளியைப் பிரகாசிக்கச்செய்யும் இதனால் பரம்பொருளானது ஜோதி ரூபமாக கண்களுக்கு தோன்றும் என்றும், மனிதர்களது முன்ஜென்மமும், பின்னர் எடுக்கப் போகும் மறு ஜென்மங்களும் தெரியவரும் என்கிறார் கொங்கணவர்.
நாத வேதை ரசமணி.
"காணு நீ நாத வேதைக்
காட்டுகின்ற முறைமைக் கேளு
பூணு நீ சூதங் கட்டிப்
புகட்டிச் சாரணைகள் செய்து
தோணு நீ வில்லை போல
சுகப்பட வார்த்துத் தட்ட
வாமினி சாத்தான் கேட் கில்
அம்மட்டும் வேதையாமே"
- கொங்கணவர் -
"வேதையாம் பரிசம் தன்னில்
விளங்கிய மணியைக் கேளு
ஆதையாம் லோகஞ் செங்கல்
அடைவுடன் சுக்கான் மண்ணும்
பாதையாய் காட்டு முன்னே
பளிச்சென்று தங்கமாகும்?"
- கொங்கணவர் -
நாத வேதை என்பது ரசத்தை மணியாகக் கட்டி அதற்க்கு முறையான சாரணைகள் செய்து அதை வில்லை போல் தட்ட அந்த சத்தம் எவ்வளவு தெளிவாக கேட்க்குமோ அந்த நேரத்தில் தங்கமாகும் என்றும் இதை பரிச மணியாக மாற்றினால் அது செங்கல், சுக்கான் கல், மணல், போன்றவற்றின் முன் காட்டினால் அவற்றை தங்கமாக்கும் தன்மை பெரும் என்றும் சொல்கிறார் கொங்கணவர்.
ஆகவே இவற்றின் மூலம் இரச மணிகளை முறையாக செய்து முடித்ததால் எவ்வளவு சிறப்பான பயன்களைப் பெறலாம் என்பதை கொங்கணவர் வார்த்தைகள் மூலமே அறிந்து கொண்டோம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



0 comments:
Post a Comment