இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

Author: தோழி / Labels:

இந்த சித்தர்கள் இராச்சியம் வலைத்தளம் அழகாகவும் சிறப்பாகவும் மிளிர பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கிவருபவரும், தமிழில் பங்கு வணிகம் என்னும் வலைத்தளத்தை ஸ்தாபித்து அதன் மூலம் ஆயிர கணக்கான பங்கு வணிகர்களுக்கு வழிகாட்டியாக இருப்பவரும், என் இனிய நண்பருமான திரு. எம். சரவண குமார் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகுவிமரிசையாகக் கொண்டாடுகிறார்.

ஆங்கிலத்தில் பங்குவணிகம் பற்றி பல தளங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழில்அப்படி தளங்கள் ஏதும் இல்லையே என்ற ஆதங்கத்தில் தமிழில் பங்குவணிகம் தளத்தை ஸ்தாபித்தவர். அண்மையில் அந்தத்தளம் தனது ஆயிரம் பதிவுகளைக் கடந்து சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது.

பங்கு வணிகத்தில் ஈடு பட்டுவரும் ஆயிரகணக்கானவர்களுக்கு உதவி வரும் எம்.சரவண குமார் அவர்கள் சீரும்,சிறப்புடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்...



எண்ணங்களைப் பழுக்கவிட்டு
முதிர்ந்த அனுபவத்தை

அடித்தளமாக்கி இளமைக்

காலத்திலேயே - பல

அத்தியாயங்கள் படைத்த

"பங்குவணிகனே"


அடிக்கடி உம்முடன்

அளவளாவி மகிழ்ந்து

அரிய தகவல் கற்றிட

இணையமெனும் தோழன்

இணைத்தான் எம்மை...


முதல் சந்திப்பிலேயே

பெரியோர் முதல் சிறியோர் வரை

சரிசமனாய் மதிக்கும் - உந்தன்

உயரிய பண்பு கண்டு

வியந்து தான் போனேன்..!


கைபிடித்து நடக்கும் குழந்தையாய்

கவரில் போகும் கடிதமாய்

இலட்சியம் நோக்கி

நடைபோட - பலருக்கு

பாதை போட்டுத்தந்து

வாழ வழிகாட்டி

வளர உரம் ஊட்டி

அழுத்திச் சொல்லித்தந்த

"ஆசானே"


வாழ்த்தும்

வயதுமில்லை..

வாழ்த்திய

அனுபவமும் இல்லை..

இளையவள் இவள்

வாழ்த்துகிறேன் ஏற்றிடுவீர்!


நீண்டதொரு நல் வாழ்வில்

நிலையான புகழை ஈட்டி

ஆண்டவர்கள் துணைகொண்டு

அடுக்கடுக்காய் வெற்றி கண்டு

காண்பவர் வியக்கும் வண்ணம்

பார் போற்றப் பல்லாண்டு வாழ்க...!!


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

16 comments:

கொல்லான் said...

பார் போற்றப் பல்லாண்டு வாழ்க...!!

rk guru said...

பங்கு வணிகம் இணையத்தை நானும் படிகிறேன் நல்ல பங்கு செய்திகளை வழங்குகிறார்கள். அதன் நிறுவனர் திரு. எம்.சரவண குமார் அவர்களுக்கு 'சித்தர்கள் இராட்சியம்' இனிய தோழியின் மூலம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

jagadeesh said...

உலகமே தெரிந்த உங்களைப்பற்றி எழுத புதிதாக இருக்கிறது.

உலகமே வாழ்த்தும் போது ஒரு சின்ன வண்ணத்துப்பூச்சியாக நானும் என் வாழ்த்துக்களை சமர்பிக்கிறேன்.
பிறந்த நாள் காணும் திரு.எம்.சரவண குமார்,வாழ்க வளமுடன்.

jagadeesh said...

அறிவு மழை பொழியும்,
எழில் வழியும்,
இருள் கழியும்,
தெளிவு மிகு உரைகள் பல ஒளிரும்,
திறன் மிளிரும்,
கடலின் அலை, மலையின் முடி
தழுவு முகில் வழியும்,
அறிவு மழை பொழியும்
அண்ணன் பரிசல் வாழ்க பல்லாண்டு....

அண்ணாமலை..!! said...

நண்பர் திரு. எம். சரவண குமார் அவர்களுக்கு எங்களது பிறந்தநாள் வாழ்த்துகளும்!

வாழ்க பல்லாண்டு!

D.R.Ashok said...

Thanks for sharing SHAREMARKET Site, ubayogamana pagirvu...


(no tamil fonts)

அண்ணாமலை..!! said...

உங்களது வாழ்த்துக்கவி மிக அருமையாக உள்ளது.
நண்பரின் சேவை அதனினும் பெரிது!
நன்றிகள் நண்பரே!

lalli said...

vaaltha vayathillai, vanagukiren


(no tamil font)


endrum priyamudan

Sriram, Bahrain said...

Thanks for sharing your friend Site Thozhi, which will be usefull for every one. Mr. Saravanakumar many more returns of the day and wishing you all the very best.

Sriram, Bahrain

தமிழ் அமுதன் said...

வாழ்த்து கவிதை அருமை ...!

நானும் பதிவு செய்து இருக்கிறேன்

எனது வாழ்த்துகளை..!

மித்திரன் said...

திரு. எம். சரவண குமார் அய்யா அவர்கட்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களும் உரித்தாக்கட்டும் ;))

chandru2110 said...

அய்யா அவர்களுக்கு எங்களின் மகிழ்ச்சியானா பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

winmani said...

மிக்க நன்றி நண்பரே..
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...
:)

தமிழ் மதுரம் said...

உங்களோடு இணைந்து நானும் வாழ்த்துகிறேன் தோழி!

harveena said...

saaaarrrrrr, wish u many more happy returns of the day,,,, cheers

Raji said...

வாழ்த்து கவிதை அருமை ...!
தோழி...!
"முதல் சந்திப்பிலேயே
பெரியோர் முதல் சிறியோர் வரை
சரிசமனாய் மதிக்கும் - உந்தன்
உயரிய பண்பு கண்டு
வியந்து தான் போனேன்..!"
முற்றிலும் உண்மை தோழி!
நானும் அப்படிதான் வியந்து போனேன்..!
நானும் உங்கள் பதிவு மூலம்
எம் குருவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறேன்.
நட்புடன்
Raji

Post a Comment