மனிதனின் பிறப்பில் இருந்து இறுதி மூச்சு வரையில் அவனது வாழ்க்கையினை நவக்கிரகங்கள்தான் தீர்மானிக்கின்றன என சோதிடவியல் தீர்மானமாய் கூறுகிறது. கோசார பலன்கள் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தினையும் தீர்மானிக்கிறது என்றும் இந்த பலன்கள் அவரவர் பூர்வ புண்ணியபலன், நற் செயல்கள், நற் சிந்தனைகளுக்கு ஏற்ப மாறுபடுமாம். இதைத் தவிர நவக்கிரகங்களுக்கு பரிகாரம் செய்வதன் மூலமும் பாதிப்புகளின் தீவிரத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் எனவும் கூறப் பட்டிருக்கிறது.
நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்படுகிறது. இந்த நவமணிகளை அணிவதன் மூலம் அந்த கிரகத்தின் நற் தன்மைகள் கதிர் வீச்சுக்களாய் நம் உடலில் ஊடுருவி குறிப்பிட்ட கிரகத்தின் பாதிப்புகளை சமன் செய்வதுடன் அதிர்ஷ்டத்தையும் வழங்குவதாக குறிப்புகள் கூறுகின்றன.
இன்றும் கூட தமிழர்கள் வீடு கட்ட துவங்கும் போது நவமணிகளை வீட்டின் தலைவாயிலில் புதைப்பதை காணலாம். இவை தவிர கோவில்களில் நவமணிகள் பெரும் அளவில் கருவறைகளிலும், கோபுர அஸ்திவாரங்களில் புதையுண்டிருப்பதாக குறிப்புகள் காணப் படுகின்றன. இவையெல்லாம் இந்த நவமணிகளின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துவதாகும். நம்பிக்கை என்பதற்கு அப்பால் இதனால் உண்டாகும் பலன்களை அனுபவ ரீதியாய் உணர்ந்திருந்ததால், இதன் அருமைகளை முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்க வேண்டும்.
இதன் அடிப்படையில்தான் அதிர்ஷ்ட கல் வியாபாரம் என இன்று பலரும் செய்து பெரிய அளவில் பொருளீட்டிக் கொண்டிருக்கின்றனர். சில போலியான வியாபாரிகளின் மிகையான விளம்பரங்கள், தவறான வழிகாட்டுதல்களில் சிக்கி அநேகர் பணத்தையும் நிம்மதியையும் இழந்து வருகின்றனர். அத்தகையவர்களின் அனுபவம் இந்த கற்கள் குறித்தான அவ நம்பிக்கையையும், ஆவேசங்களையும் உருவாக்கி விட்டது.
நிஜத்தில் ஒவ்வொரு ஜாதகரின் கிரக அமைப்பு, அவற்றின் சாதக பாதகங்களை வைத்து மட்டுமே நவமணிகளை பரிந்துரைக்க முடியும்.அதாவது பிறந்த ராசி, ராசிஅதிபதி, நட்சத்திரம், தசாபுத்தி, போன்றவற்றைக் கருத்தில் கொண்டே யாருக்கு எந்தவகை ரத்தினம் பொருந்தும் என்று குறிப்பிடமுடியும். மற்ற படி தனியாக ஒரு ராசியையோ, நட்சத்திரத்தையோ முன்வைத்து கற்களை குறிப்பிடுதல் தவறாகும்.
இவ்வாறு பரிந்துரைக்கப் பட்ட ரத்தின வகைகளை பொதுவாக ஆண்கள் தங்கள் வலது கை மோதிரவிரலிலும், பெண்கள் இடதுகை மோதிர விரலிலும் அணிதல் வேண்டும். சிறு குழந்தைகளாயின் கழுத்தில் அணியலாம். இவ்வாறு அணியும் போது அந்தக் கல்லானது உடலில் படும் வண்ணம் அமைத்துக் கொள்வதே சிறப்பு.முறையாக தேர்ச்சி பெற்றவர்கள் மூலமாக பரிந்துரைக்கப் பட்டு அணியப் படும் கற்கள் நல்ல பலன்களை தந்திருப்பதை நான் கண் கூடாக கண்டிருக்கிறேன்.
தூய கற்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
பலரும் கூறுவதைப் போல ஏன் இந்த கற்கள் பூரண பலன் தருவதில்லை?
இந்த கற்கள் பலன் தரவைக்க சித்தர்கள் அருளிய நடைமுறைகள் என்ன?
விவரங்கள் அடுத்த பதிவில்.....
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



4 comments:
தோழி....உங்கள் பதிவுகள் நம்பிக்கை அற்றவர்களையுயும் நம்பிக்கைக்குள் கொண்டு வந்துவிடும்.உங்கள் ஆணித்தரமான பதிவுகள் அப்படித்தானிருக்கிறது !
மிக அருமை! வெறும் செய்தியை மட்டும் சொல்லாமல், அதை இப்பொழுது நடைமுறையில் உள்ள பிரச்சனைகளோடு தொகுத்து இடுகைகளை அமைக்கரீர்கள். வாழ்த்துக்கள்.
rasi vaiththu kalparri kuruvathu poi enru aaniththaramaaka sonathtarkku vaalththukkl
'நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
-சிவவாக்கியர் பாடல்-494
Post a Comment