மலச்சிக்கல்....ஓர் எளிய தீர்வு.!

Author: தோழி / Labels:

அவரசயுகம் தந்த பெரியதொரு பாதிப்பு மலச்சிக்கல். உடலின் கழிவுகள் சிறுநீராகவும், வியர்வையாகவும், மலமாகவும்தான் வெளியேறுகிறது. இவற்றில் பாதிப்புகள் ஏற்படுமாயின் உடலியல் ரீதியாக பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.பெரும் பாலானவர்கள் பாதிக்கப் பட்டிருந்தாலும் எவரும் பொதுவில் விவாதிக்க தயங்கும் ஒன்றாகவே இருக்கிறது.பரபரப்பான வாழ்க்கை முறையினால் மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்கள் மற்றும் முறையற்ற உணவு பழக்க வழக்கங்களுமே இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம்.

ஆரோக்கியமான மனிதனின் ஒரு வாரத்திற்கு குறைந்தது பத்து முறையாவது மலம் கழிக்க வேண்டும்.நமது குடலில் கழிவுகள் தேங்குவது கூடாது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்கள், நார்சத்து மிக்க உணவு பொருட்களை தொடர்ந்து சாப்பிடுபவர்கள், அழுத்தங்கள் இல்லாத எளிய வாழ்க்கை முறையை பின்பற்றுவோர் போன்றவர்களுக்கு மலச்சிக்கல் வருவதில்லை.

இன்றைக்கு ஆங்கில மருத்துவத்தில் மலமிளக்கிக்கான மாத்திரைகள் உலகளாவிய அளவில் பெரிய வர்த்தகத்தை ஈட்டித் தருகின்றன. சித்தர்கள் எளிய முறையில் இந்த பிரச்சினையில் இருந்து நிரந்தரமாக விடுபடும் ஒரு வழியினை கூறியிருக்கின்றனர்.

காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் மூன்று குவளை(டம்ளர்) வெதுவெதுப்பான நீரில் சுமார் ஒன்றரை தேக்கரண்டி கல் உப்பினை கரைத்து, குடிக்க வேண்டும். (நம்மால் சகித்துக் கொள்ளும் அளவிற்கு உப்பை சேர்த்துக் கொள்ளலாம்.). இதன் பிறகு சிறிது நேரம் வீட்டிற்குள் நடைபழக வேண்டும். அடுத்த கொஞ்ச நேரத்தில் ஒரே மூச்சில் சிறுகுடல், மற்றும் பெருங்குடலில் சேர்ந்திருக்கும் அத்தனை கழிவுகளும் வாரிச்சுருட்டி வெளியேறிவிடும்.

இந்த முறையை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு செய்தல் வேண்டும். ஆறாவது நாள் முதல் காலையில் உங்களை அறியாமலே வயிற்றைப் புரட்டிக் கொண்டு வரும்..... மூன்று முதல் ஆறு மாதத்திற்கு ஒரு முறை இதை செய்வதால் குடல் சுத்தமாவதுடன், சுரப்பிகளும் புத்துணர்ச்சி பெறும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

19 comments:

டவுசர் பாண்டி... said...

உங்கள் பதிவு குறுகிய காலத்தில் பெரிய அளவில் சென்றடைந்திருக்கிறது.இது வரையில் ஒரு லட்சம் பக்கங்கள் வாசிக்கப் பட்டிருப்பது பெரிய விஷயம்தான்.

சிறக்கட்டும் உங்கள் பணி....

வாழ்த்துகள்.

Murugeswari Rajavel said...

உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் தோழி.

teenmoon5 said...

இந்த நூல் அனைத்தும் உண்மையாகவே சித்தர்களால் எழுத்தபட்டதுதானா .
பழந்தமிழ் நூல்கள் படிக்கும் ஆர்வம் எனக்குண்டு, ஆனால் பெரும்பாலான நூலில் இருக்கும் தமிழ் சொற்களும், சித்தர் நூல்களில் இருக்கும் தமிழ் சொற்களும் வித்தியாசமாக இருகின்றன.

இலக்கணம் தவறியும், சமற்கிருத சொற்கள் அதிகம் கலந்தும், ஏறத்தாழ ஒரு 600, 700 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கில் இருந்த தமிழில் எழுதப்பட்டதாக தோன்றுகிறது.

நானும் தமிழன் தான், இது எனக்கு ஏற்பட்ட ஐயமே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை.

நரசிம்மரின் நாலாயிரம் said...

great! service! thanks

தோழி said...

@teenmoon5

சித்தர்கள் மற்றும் அவர்களின் படைப்புகள் விவாதத்திற்கு அப்பாற்பட்டவைகள் இல்லை. உங்களைப் போலவே இம்மாதிரியான கேள்விகள் எனக்கும் இருந்தன.! தொடர்ச்சியான தேடலில் நான் கண்டறிந்தவைகளை தனியொரு பதிவாக விரைவில் பகிர முயற்சிக்கிறேன்.. நன்றி.

RAMANATHAN said...

மலச்சிக்கல் நீங்க வழி முறைகள் கூறிய சித்தர்கள், பெரியோர் முதல் குழந்தை வரை அனவைரும் துன்புறும் வயிற்று உபாதையால் ஏற்படும் பேதி போன்றவைகள் தீர ஏதும் வழி முறைகள் வகுத்துள்ளனரா ?

யோகம் said...

தோழி, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த முறையைப் பயன்படுத்தலாமா ?

தோழி said...

@யோகம்

இங்கே பகிரப்படும் தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப் பட்ட பின்னரே பதிவிடுகிறேன்...

மருத்துவம், உடல்நலம் சார்த விவரங்களை தகுந்த மருத்து ஆலோசனையுடன் பின்பற்றுவதே நலம் ...

nagen said...

இந்த அவசரகால உலகத்தில் முதல் பிரச்னை இந்த மலச்சிக்கல் தான்
அதற்கு ஒரு தீர்வு தந்தமைக்கு மிக்க நன்றி.

yuvarajappu said...

mikka nandri padhipalarukku niraiya seithigak ullana suvaiyaga by Yuvaraj koovathur

Surya said...

By having lot of salt will increases salt level or not... plz answer...

RAVINDRAN said...

Is that salt is must please tell me

parameswaran said...

அன்பு தோழி,வணக்கம். தங்களது பதிவுகள் நன்றாக உள்ளன.சித்த மருத்துவம் பற்றி நறையத் தகவல்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி!!!BY-PARAMESDRIVER / KONGUTHENDRAL.BLOGSPOT.COM

அமுத சுரபி said...

தங்கள் அறிவுரைக்கு எனது மனமார்ந்த நன்றி

THIRUMAL said...

thali mudi thirumba walara athum marunthu erunthal sollungal tholi ennaku ellam wathile walukkai willunthu wittathu.

raja said...

thanks a lots and i wish you and your works

Antony Gnanaprakasam said...

innum sirithu vilakkamaga irunthal miga nanadraga irukkum.

Syed Ahmed said...

உங்கள் பதிவு மிக அருமை

Syed Ahmed said...

பதிவுக்கு வாழ்த்துக்கள்

Post a Comment