இரசவாதம் - அட்சய ரசமணி, கெவுன ரசமணி...

Author: தோழி / Labels: , ,

கொங்கணவர் அருளிய அட்சய ரசமணி மற்றும் கெவுன ரசமணிகளைப் பற்றி இந்த பதிவுகளில் பார்ப்போம்.

அட்சய ரசமணி.


"ஆமினி அட்ச யத்தின்
அம்மணி விபரம் கேளு
தாமினி தனங்கள் கூச்சு
தனித்த தானியங்கள் கூச்சு
சாமினி அன்னம் கூச்சு
சிறந்திடும் பொருள்கள் கூச்சு
அட்சய மணியை வைக்க
எடுக்கவும் தொலயா தாமே"

- கொங்கணவர் -

அட்சய மணியின் விபரத்தை சொல்கிறேன் கேள். தனம், தானியம், அன்னம், சிறப்பான பொருட்கள் இவைகள் மீது இந்த மணியை வைத்தால் எடுக்க எடுக்க அவை குறையாது இருக்கும் என்கிறார் கொங்கணவர்.


கெவுன ரசமணி.


"தொலையாத கவுன மோடுஞ்
சூழ் மணிக் குணத்தைக் கேளு
அலையாத மனது தானு
மகண்டத்தை அடுக்கக் காட்டும்
நிலையாத சமாதி யெல்லாம்
நிலைக்கவும் நேர்மை காட்டும்
கலையாத உமிழ் நீர் வாங்கி
காயமும் சித்தியாமே"

- கொங்கணவர் -


ஆகாய வழியாக கவுனம் ஓடக் கூடிய மணியின் குணத்தைக் கேளு, மனதை நிலைப்படுத்திக் கொண்டு இந்த மணியை வாயிலிட்டுக் கொண்டு நினைத்தவுடனே அண்டத்தை சுற்றி வரலாம், அத்துடன் சமாதிநிலை உடனே கைகூடும் என்றும், இதை வாயிலிட்டு உமிழ்நீரை உண்டு வந்தால் காய கற்பமாகும் என்கிறார் கொங்கணவர்.

அடுத்த பதிவில் பரசிவத்தி ரசமணி மற்றும் நாதவேதை ரசமணிகளின் பயனை பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

1 comments:

nagen said...

அட்சய ரசமையை நான் கேள்விபட்டதும் இல்லை
பார்த்ததும் இல்லை, இருந்தாலும் உங்கள் தகவல்
பயனுள்ளதாக இருக்கிறது .

Post a Comment