இந்த பதிவில் கொங்க்ணவர் வகைப் படுத்திய காமதேனு ரசமணி, போக ரசமணி, சந்தான ரசமணிகளைப் பற்றி பார்ப்போம்.
காமதேனு ரசமணி.
"அறிந்தி லேன் காம தேனு
மணியின் மார்க்கன் கேளு
மனதுள்ளே நினைத்த தெல்லாம்
நீட்டியே முன்னே வைக்கும்
குறைந்தொன்றும் போகதப்பா
இதனை நீ வாயில் வைத்தால்
அறைந் தின்தறூ விற்சொன்னேன்
அப்னே கண்ட பின்பே "
- கொங்கணவர் -
காம தேனு என்னும் மணியைப் பற்றிக் கூறுகிறேன் இந்த மணியை வாயில் போட்டுக் கொண்டு நாம் எதை எல்லாம் நினைக் கின்றோமோ அதெல்லாம் அப்படியே நினைத்த வுடன் எந்த வித குறையுமில்லாமல் எங்கள் முன்னே தோன்றும் என்று சொல்லும் கொங்கணவர் இந்த மணியை தான் செய்து அதன் பலன் அறிந்த பின்னரே கூறுகிறேன் என்கிறார்.
போக ரசமணி.
"கண்டபின் போகினிப்பாம்
கடுமணிக் குணத்தைக் கேளு
தாண்டிய புஷ்ப மாம்பை
தணித்திடு வாசமெல்லாம்
ஒண்டிய கட்டில் மெத்தை
உறவாகும் பெண்கள் சூழ
கொண்டிடும் போகம் பண்ண
கொடுத்தி டும்பாரு பாரே"
- கொங்கணவர் -
போக மணியின் குணத்தை சொல்கிறேன், நறுமணமுள்ள மலர்கள், வாசனத்திரவியங்கள், கட்டில், பஞ்சு மெத்தை, உறவாகும் பெண்கள், ஆகியவைகளை நினைத்தவுடன் கொடுக்கும் வல்லமை பெற்றது இந்த மணி என்கிறார் கொங்கணவர்.
சந்தான ரசமணி.
"பாரு நீ சந்தா னத்தின்
பருமணி மார்க்கம் கேளு
வாரு நீ துண்டு துண்டாய்
மனிதரை வெட்டிப் போட்டு
சேரு நீ குளிகை காட்டி
செனதிலே பொருந்திப் பேசும்
காரு நீ மணி யினாலே
கடும் யோகா சித்தியாமே"
- கொங்கணவர் -
சந்தான மணி பற்றி சொல்கிறேன் கேள், மனிதர்களை துண்டு துண்டாக வெட்டிப் போட்டு விட்டு அவற்றை மீண்டும் பொருத்தி இந்த மணியைக் காட்டிய மறுகணம் அத்துண்டுகள் ஒன்றாக சேர்ந்து உயிர் பெற்று பேசும், அத்துடன் இந்த மணியால் கடும் யோகா சித்தியும் கிடைக்கப்பெறும் என்கிறார் கொங்கணவர்.
அடுத்த பதிவில் அட்சய ரசமணி மற்றும் கெவுன ரசமணி பற்றிய விவரங்களை பார்ப்போம்.
காமதேனு ரசமணி.
"அறிந்தி லேன் காம தேனு
மணியின் மார்க்கன் கேளு
மனதுள்ளே நினைத்த தெல்லாம்
நீட்டியே முன்னே வைக்கும்
குறைந்தொன்றும் போகதப்பா
இதனை நீ வாயில் வைத்தால்
அறைந் தின்தறூ விற்சொன்னேன்
அப்னே கண்ட பின்பே "
- கொங்கணவர் -
காம தேனு என்னும் மணியைப் பற்றிக் கூறுகிறேன் இந்த மணியை வாயில் போட்டுக் கொண்டு நாம் எதை எல்லாம் நினைக் கின்றோமோ அதெல்லாம் அப்படியே நினைத்த வுடன் எந்த வித குறையுமில்லாமல் எங்கள் முன்னே தோன்றும் என்று சொல்லும் கொங்கணவர் இந்த மணியை தான் செய்து அதன் பலன் அறிந்த பின்னரே கூறுகிறேன் என்கிறார்.
போக ரசமணி.
"கண்டபின் போகினிப்பாம்
கடுமணிக் குணத்தைக் கேளு
தாண்டிய புஷ்ப மாம்பை
தணித்திடு வாசமெல்லாம்
ஒண்டிய கட்டில் மெத்தை
உறவாகும் பெண்கள் சூழ
கொண்டிடும் போகம் பண்ண
கொடுத்தி டும்பாரு பாரே"
- கொங்கணவர் -
போக மணியின் குணத்தை சொல்கிறேன், நறுமணமுள்ள மலர்கள், வாசனத்திரவியங்கள், கட்டில், பஞ்சு மெத்தை, உறவாகும் பெண்கள், ஆகியவைகளை நினைத்தவுடன் கொடுக்கும் வல்லமை பெற்றது இந்த மணி என்கிறார் கொங்கணவர்.
சந்தான ரசமணி.
"பாரு நீ சந்தா னத்தின்
பருமணி மார்க்கம் கேளு
வாரு நீ துண்டு துண்டாய்
மனிதரை வெட்டிப் போட்டு
சேரு நீ குளிகை காட்டி
செனதிலே பொருந்திப் பேசும்
காரு நீ மணி யினாலே
கடும் யோகா சித்தியாமே"
- கொங்கணவர் -
சந்தான மணி பற்றி சொல்கிறேன் கேள், மனிதர்களை துண்டு துண்டாக வெட்டிப் போட்டு விட்டு அவற்றை மீண்டும் பொருத்தி இந்த மணியைக் காட்டிய மறுகணம் அத்துண்டுகள் ஒன்றாக சேர்ந்து உயிர் பெற்று பேசும், அத்துடன் இந்த மணியால் கடும் யோகா சித்தியும் கிடைக்கப்பெறும் என்கிறார் கொங்கணவர்.
அடுத்த பதிவில் அட்சய ரசமணி மற்றும் கெவுன ரசமணி பற்றிய விவரங்களை பார்ப்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



2 comments:
dear tholi,
superb and extraordinary concepts.
is there any possibility to tell us how to prepare this.
thank you and thank god for showing you..
endrum priyamudan
pagirvirkku nantri thozhi!!
Post a Comment