ஈழத்து சித்தர்கள் - ஓர் அறிமுகம்...

Author: தோழி / Labels:

சித்தர் மரபியலில் அட்டமா சித்திகளையும் அடைந்த பதினெண் சித்தர்கள் மேலானவர்களாக போற்றி வணங்கிடப் படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் இந்திய துனைக் கண்டத்தினை சேர்ந்தவர்கள். காலத்தால் மிகவும் முந்தியவர்கள்.

பலரும் அறிந்திடாத தகவல் ஒன்றினை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தமிழகத்தின் சித்தர்களைப் போலவே ஈழத்து சித்த பரம்பரை என ஒன்று இருந்திருக்கிறது. இவர்கள் காலத்தால் பிந்தியவர்கள். சமூக அமைப்பில் இருந்து விலகியவர்களாய் இருந்ததால், இவர்கள் குறித்த பெரிதான குறிப்புகள் ஏதும் நமக்கு கிடைக்க வில்லை.

நமக்கு கிடைத்திருக்கும் தகவல்களை பார்க்கும் வேளையில் இவர்களைப் பற்றிய விவரங்கள் ஆச்சர்யம் தருபனவாய் இருக்கிறது. சில பெண் சித்தர்களைப் பற்றிய குறிப்புகளும் காணக் கிடைக்கின்றன.தமிழகத்தில் இருந்து வந்து போன சித்தர்களைப் பற்றிய குறிப்புகள், ஈழத்துச் சித்தர்கள் ஜீவசமாதியடைந்த இடங்களைப் பற்றிய குறிப்புகள் என பகிர சுவாரசியமான தகவல்கள் அவை!

இந்த குறிப்புகளின் அடிப்படையில், ஈழத்தின் நாக்கு திசைகளிலும், நான்கு பெரும் சித்த சமாதிக் கோவில்கள் இருப்பதாக தெரிகிறது.
அவையாவன, வடக்கே யாழ்ப்பாணத்தில் கடையிட் சுவாமிகள் சமாதியும், கிழக்கே காரை தீவில் சித்தனைக் குட்டி சுவாமிகள் சமாதியும், மேற்கே கொழும்பு முகத்துவாரத்தில் பெரியானைக் குட்டி சுவாமிகளின் சமாதியும், தெற்கே நாவலப் பிட்டியில் நவநாத சித்தர் சமாதியும் விளங்குகின்றன.

ஈழத்து சித்த மரபியலில் முக்கிய இடம் வகிக்கும் ஈழத்து பதினெண் சித்தர்கள்...

கடையிற்சுவாமிகள்.
பரம குரு சுவாமிகள்
குழந்தை வேற் சுவாமிகள்.
அருளம்பல சுவாமிகள்.
யோகர் சுவாமிகள்
நவநாத சுவாமிகள்
பெரியானைக் குட்டி சுவாமிகள்
சித்தானைக் குட்டி சுவாமிகள்
சடைவரத சுவாமிகள்
ஆனந்த சடாட்சர குரு சுவாமிகள்
செல்லாச்சி அம்மையார்
தாளையான் சுவாமிகள்
மகாதேவ சுவாமிகள்
சடையம்மா
நாகநாத சித்தர்
நயினாதீவு சுவாமிகள்
பேப்பர் சுவாமிகள்
செல்லப்பா சுவாமிகள்.


அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கலாம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

7 comments:

அண்ணாமலை..!! said...

நல்ல, அறிந்திராத தகவல்கள்!
மிக்க நன்றிகள்!

கொல்லான் said...

சித்தர்கள் என்றாலே "தமிழ் உணர்ந்தவர்கள்" மட்டுமே.

kld said...

இரசமணி பற்றி அறிந்த்தில் மகிழ்ச்சி கமலிக்குளிகை, அட்டமாசித்திக் குளிகை,வராகக்குளிகை,சித்த இரசமணி, நவநீத இரசமணி, தொடுப்பு இரசமணி, சிராவண இரசமணி பற்றி எழுதவும். நன்றி,வணக்கம். கே.எல்.டி.மாரியப்பன்.

Lingeswaran said...

சித்தானைக் குட்டி சுவாமிகள் பத்தி பதிவு போட்டுட்டேன்......பாருங்க என்னோட வலைப்பூவ...

macall said...

சித்தர்கள் தோன்றுவதற்கான காரங்கள் என்னவாக இருக்கலாம்? தெரிந்தால் அறிவியுங்கள்

narayana kumar said...

please give the details about chattambi swamigal sister

Chandra Balakrishnan said...

இலங்கை பேசாலை கிராமத்தில் ஒளிதேகம் அடைந்த மகாமஹரிஷி, பொந்து சாமி, பேப்பர் சாமி, பாய் என்று பலவாறாக அழைக்கப்பட்ட சித்தரை பற்றி தங்களிடம் தகவல் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். இவர் ஒரே நேரத்தில் பலருக்கு பல இடங்களில் காட்சி தந்துள்ளார். அது மட்டுமல்லாது இலங்கை முழுவதும் பல அதிசியங்களை நிகழ்த்தி உள்ளார். இவர் பாலாற்றில் சிறுவர்களோடு விளையாடி கொண்டிருந்த பொழுது, அவருடைய உருவம் மிக பெரியதும் உயர்ந்ததுமாகி அவர் கால் சுவடு பதிந்த இடம் இன்னும் திருகேதீஸ்வரத்தில் உள்ளதென கேள்வி பட்டுள்ளோம். தங்களிடம் தகவல்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Post a Comment