"மனம் என்றும் மாடு அடங்கின்
தாண்டவக் கோனே! முத்தி
வாய்த்தனென்று எண்ணேடா
தாண்டவக் கோனே!".
"அல்லும் பகலும்நிதம் - பசுவே!
ஆதி பதந்தேடில்
புல்லும் மோட்சநிலை - பசுவே!
பூரணங் காண்பாயே".
"தோயாது இருந்திடும் பால்கற
தொல்லை வினையறப் பால்கற
வாயால் உமிழ்ந்திடும் பால்கற - வெறும்
வயிறார உண்டிடப் பால்கற"
- இடைக்காட்டுச் சித்தர் -
மதுரைக்கு அருகே உள்ள இடைக்காடு என்னும் ஊரில் பிறந்ததனால் இடைக்காடர் என்று அழைக்கப் பட்டார் என்றும் இவர் ஆயர் குலத்தவர் என்றும் சொல்லப்படுகிறது.
இவரது பாடல்களில், தாண்டவக்கோனே, பால்கற, கோனாரே, பசுவே, குயிலே என விளித்துப் பாடிய பாடல்கள் தான் அதிகம்.
இடைக்காடருக்கு ஞானத்தை உபதேசித்தவர் போகர் என்றும், போகர் சமாதி கொள்ளப் போகும் முன்னர், புலிப்பாணியை பழனியிலும், இடைக்காடரை திருவண்ணாமலையிலும் இருந்து இறைச்சேவை செய்ய பணித்ததாக சொல்லப் படுகிறது.
இடைக்காடர் ஞான சூத்திரம் 70
இடைக்காடர் வைத்தியம் 64
இடைக்காடர் பூஜா விதி 27
ஆகிய நூல்கள் இவர் இயற்றியதாக சொல்லப்படுகிறது.
இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்ததாய் சொல்லப் படுகிறது.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



4 comments:
நல்லதொரு தகவல். மதுரைக்காரர்! ம்ம...
தோழி,
இன்னும் விளக்கமாகச் சொல்வது அதிகப் பயன் தரும் என்று கருதுகிறேன்.
ஸ்ரீ....
நன்று ...
The four line verses of Idaikattu siddharr , 60 in number, give predictions about each of 60 tamil years. Refer: Vasan Thrikkanitha panchangam for teh verses
Post a Comment