
பரம்பொருள் என்கிற ஒன்றுதான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றது, அது அனைத்து உயிர்களுக்கும் அறிவாய், ஆதாரமாய் நிற்கிறது, அசையும், அசையாத அனைத்து பொருட்களின் மூலமாய் இருக்கிறது என அனைத்து சடப் பொருட்களிலும் இறைவனை காண்பதாய் சொல்கிறார்கள் சித்தர்கள்.
பஞ்ச பூதம் என்பது நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய அய்ந்துமாகும். இந்த பஞ்ச பூதங்ககளை படைத்து அதில் நிறைந்திருப்பவன் இறைவன். பஞ்ச பூதங்களைக் கொண்டு உருவானதுதான் எங்கள் உடல்.
இதனையே, இந்த உலகில் பரந்து விளங்கும் பரம் பொருள் எங்கள் உடலுக்குள்ளும் நிறைந்துள்ளது. என்கிறார் குதம்பைச் சித்தர் "நிலத்திலும், அகண்ட நெற்பரப்பிலும், ஓங்கியெழும் தீயிலும், வீசுகின்ற காற்றிலும், விரிந்து பரந்த வானிலும் இறைவன் இருப்பதை காண்க" என்கிறார்.
"நீரும் நெருப்பும் நெடுங்காற்றும் வானமும்
பாருமாய் நின்றதைக்காண் குதம்பாய்
பாருமாய் நின்றதைக்காண்"
"எங்கும் வியாபகம் ஈகை விவேகங்கள்
பொங்கமாய் உள்ளானடி குதம்பாய்
பொங்கமாய் உள்ளானடி"
- குதம்பைச் சித்தர் -
அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கலாம்...
Post a Comment



2 comments:
மறுக்க முடியாத கருத்து.
@V.Radhakrishnan
மிக்க நன்றி...
Post a Comment