"பாலனாம் சிங்களவ தேவ தாசி
பாசமுடன் பயின்றேடுத்த புத்திரன் தான்
சீலமுடன் சட்டை முனி என்று சொல்லி
சிறப்புடனே குவலயத்தில் பெருண்டாச்சு"
- போகர் 7000 -
சதுரகிரி தல புராணம், போகர் ஏழாயிரம், அகத்தியர் பன்னிரெண்டாயிரம் போன்ற நூல்களில் இவர் பற்றிய பல குறிப்புகள் இடம் பெறுகின்றன.
பொதுவாக சித்தர்கள் மறைபொருள் கொண்டு எழுதுவது வழக்கம். ஆனால் சட்டை முனியோ தமது அனுபவங்களை நேரடியாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதி வைத்தார் என்று சொல்லப்படுகிறது.
இவர் எப்பொழுதும் கம்பளிச் சட்டையுடன் காணப்பட்டதால் சட்டை முனி என்று அழைக்கப்பட்டார். இவர் போகருடைய சீடர் என்று சொல்லப் படுகிறது.
சட்டை முனி உண்மை விளக்கம் 51
சட்டை முனி கற்பம் 100
சட்டை முனி நிகண்டு 1200
சட்டை முனி முன் ஞானம் பின் ஞானம் 200
சட்டை முனி வாகடம் 200
சட்டை முனி சரக்கு வைப்பு 500
சட்டை முனி வாத காவியம் 1000
சட்டை முனி நவரத்தின வைப்பு
ஆகிய நூல்களை இவர் எழுதியதாக சொல்லப் படுகிறது.
இவர் சீர்காழியில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகின்றது.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



3 comments:
Nice Articles. Keep it up.
Thanks.
Nice Articles. Keep it up.
Thanks
pl karunkundiri entral enna atharkku veru peyar unda pl sollungal??
Post a Comment