சித்தர்களை பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் அவர்களின் மாறா இளமையும் நீண்ட ஆயுளும் நம் நினைவுக்கு வருவது இயற்கை.
"காணாது சித்தற்க்கு காயம் வலுநிற்க
எணாகத்தின்ன விசைந்த முறை கேளு
ஈணாக வயது இருப்பதில் மண்டலம்
பூணா வறுபதில் போல்ரெட்டித் தின்னு"
- திருமூலர் வைத்திய சாரம் 600 -
திருமூலர் கூட இதையே, சித்தர்களின் உடல் இளமையுடன் வலுவாய் இருப்பது போல் மற்றவர்களுக்கு இருப்பதில்லை எனவே சித்தர்களை போல் உடலை இளமையுடன் உறுதியுடன் வைத்திருக்க காயகட்பத்தை உண்ணுங்கள் என்கிறார்.
இருபது வயது வாலிபனாக இருந்தால் ஒரு மண்டலமும் , அறுபது வயதை கடந்துவிட்டால் இரண்டு மண்டலமும் காய கற்பத்தை உண்ண வேண்டும் என்று சொல்லும் அவர்.....
"திண்ணிடு தொண்ணூறு சேர் மூன்று மண்டலம்
பண்ணிடு தாண்டில் பலியாது கற்பம் தானே
மண்ணிடை மாந்தரே வருந்திப் பிறக்காமல்
எண்ணிடு மேனி இளந்தைப் பருவமே"
- திருமூலர் வைத்திய சாரம் 600 -
தொண்ணுறு வயதை நெருங்கும் போது கற்பங்களை மூன்று மண்டலம் உண்ணவேண்டும், தொண்ணூறு வயதைக் கடந்து விட்டால் கற்பங்கள் பலன்தராது, உண்பதால் எந்த பயனுமில்லை, எனவே மண்ணில் பிறந்த மக்களே முதுமையில் கஷ்டமின்றி வாழ இளமையிலேயே கற்பம் உண்ணுங்கள், முதுமையில் சிக்காது என்றும் இளமையுடன் வாழுங்கள் என்று சொல்லும் திரு மூலர்...
மேலும்,
"பருவமாய்வாழ்ந்தால் பலனேதோ வெண்ணாதே
அருவமாய் ஞான வகண்ட மகா யோகம்
சுருபமாய் வாய்க்கும் சுக சித்தி ஆடலாம்
நிருபமாய் பாழு நிலையம் வெளியாமே"
- திருமூலர் வைத்திய சாரம் 600 -
இளமையுடன் வாழ்வதற்க்கு கஷ்டப்பட்டு காயகற்பம் உண்ணுவதில் பலனில்லை என்று எண்ணாதே... உடல் இளமையாக என்றும் இருந்தால் மட்டுமே ஞான யோகம் சித்தியாக இலகுவாக இருக்கும், அப்போது பல சித்துக்களை நீ செய்யலாம், அது மட்டுமல்லாமல் உன் தொடர் யோக ஞான தேடல்களுக்கு உடல் நிலை தடங்கல் இல்லாதுசிறப்பாக முப்பால் நிலையையும் உணர்ந்து பரிபூரணத்தை காணும் நிலையை எளிதாய் அடையலாம் என்கிறார் திருமூலர்.
இதன் மூலம் சித்தர்கள் காயகற்பத்திற்கு கொடுத்த முக்கியத்துவம் தெளிவாகிறது.
வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கலாம்...
Post a Comment



4 comments:
வாழ்த்துகள்..தோழி..! தொடர்ந்து தங்கள் பதிவுகள் சிறப்பாக வாசகர்களை சென்றடையட்டும்..! தங்களிடமிருந்து இது போன்று பல சுவாரஸ்யமான தகவல்களை எதிர்பார்க்கிறேன்.
@பிரவின்குமார்
மிக்க நன்றி
நன்றி
nantri
Post a Comment