"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"
"நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு"
- கடுவெளிச் சித்தர் -
கடு வெளி என்றால் வெட்ட வெளி என்பதைக் குறிக்கும். இவர் சூனியத்தை தியானித்து சித்தி பெற்றதால் கடுவெளிச் சித்தர் என்று அழைக்கபட்டார்.
கடுவெளி சித்தரின் பாடல்கள் தமிழ் அறிந்த அனைவரிடமும் பிரபலமானவை, ஆனால் இவரின் வரலாறு யாருக்குமே தெரியாத பொக்கிஷம் போல ஆகி விட்டது.
கடுவெளிச் சித்தர் பாடல்
ஆனந்தக் களிப்பு
வாத வைத்தியம்
பஞ்ச சாத்திரம்
ஆகிய நூல்களை இவர் எழுதியதாகவும் சொல்லப் படுகிறது. காஞ்சியில் சமாதியடைந்ததாகவும் குறிப்புகள் கூறுகின்றன.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



8 comments:
பிரபலமாய் எங்கேயோ.. கேட்டபாடல் வரிகள் எல்லாம்.. இது போன்ற பல சித்தர்கள் கூறியுள்ளவைதான் போலிருக்கு. அறிய பல தகவல்கள் பகிர்வுக்கு நன்றி தோழி.
nalla thakavael
@பிரவின்குமார்
மிக்க நன்றி...
@hai_cha70
மிக்க நன்றி...
தோழி கடுவெளிச் சித்தரும் - கழவெளி சித்தர் ஒருவரா ?
இதை படித்து பார்க்கவும்
கழவெளி சித்தர்
நன்றி
@♠புதுவை சிவா♠
நான் அறிந்த வரையில் இருவரும் ஒருவராய் இருக்க வாய்ப்புகள் இல்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் விளக்கிடலாம். நன்றி.
இது பற்றிய ஆராய்ச்சி குறிப்புகளை எங்கே பெறலாம்!?
@வால்பையன்
எங்கள் குடும்ப சேகரிப்பு நூல்களே எனக்கு போதுமானதாய் இருப்பதால் வெளியில் நடைபெறும் ஆராய்ச்சிகள் குறித்த தகவல்கள் என்னிடமில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் கூறலாம்.. நன்றி..
Post a Comment