பாம்பாட்டிச் சித்தர்

Author: தோழி / Labels: ,




"கானலை மான் நீரெனவே கண்டு செல்லல் போல்
காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பர்
மேனிலை கண்டார்கள் வீணாய் வீம்பு பேசிடார்
மேய்யன்பதம் நாடுவாரேன்று ஆடுபாம்பே!"

"தெளிந்து தெளிந்து தெளிந்து ஆடு பாம்பே - சிவன்
சீர் பாதம் கண்டு தெளிந்து ஆடு பாம்பே!
ஆடு பாம்பே! தெளிந்து ஆடு பாம்பே சிவன்
அடியினைக் கண்டோம் என்று ஆடு பாம்பே"


- பாம்பாட்டிச் சித்தர் -

பாம்பாட்டி சித்தர் கார்த்திகை மாதம் மிருக சீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர் என்றும், சட்டை முனியின் சீடர் என்றும் போகர் தனது போகர் 7000 என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

மூலாதரத்தில் இருக்கும் குண்டலினியை உறங்கிக் கிடக்கும் பாம்பு என்று சித்தர்கள் சொல்வர். இந்த குண்டலினி சக்தியானது சுழிமுனை நோக்கி ஏறுவதை, பாம்பு புற்றிலிருந்து ஏறுவது போல என குறியீடாக சொல்வர். இதையே கருத்தாக கொண்டு குண்டலினி சக்தியை மேல் எழுப்புவதை பற்றிய பாடல்கள் பல பாடியதால் பாம்பாட்டிச் சித்தர் என்று அழைக்கப்பட்டார்.

இவரின் பல பாடல்களில் ஆடு பாம்பே என குண்டலினியை விளித்து பாடியதை அவதானிக்கலாம்.

பாம்பாட்டி சித்தர் பாடல்
சித்தரா ரூடம்
பாம்பாட்டி சித்தர் வைத்தியம்


ஆகிய நூல்களை இவர் எழுதியதாக சொல்லப் படுகிறது.

இவர் தவம் செய்த குகை மருதமலையில் இன்றும் காணப்படுவதாக சொல்லப் படுகின்றது.

இவர் விருத்தாசலத்தில் சமாதியடைந்ததாகவும் சொல்லப் படுகிறது.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

3 comments:

praveen said...

மிகவும் அருமை , அனைத்தும் பிரம்ம வாக்கு பாம்பாட்டி சித்தரே போற்றி

abitha said...

Pampatti siddhar samathi is at SankaranKoil,western side of the city, still being maintained by Keralite devottees. Pampatti siddhar incarnate is Kanakkampatti swamikal, who presntly lives at a place called kanakkanPatti, 10 KM east of Palani.Devottees throng on all full moon days.

kathir resan said...

பெண்ணால் சாத்தியமா இந்த வலை சிந்திக்க வைத்து விட்டது

Post a Comment