தீவட்டியை கொளுத்தி வாயில் வைக்கும் ஜாலம்...
புலிப்பாணி ஜாலம் 325 நூலில் 137 வது பாடலான.....
"பாரப்பா பாருலகில் பிரமிக்க சொல்வேன்
பதிவாக மனத்தினிடம் நிறுத்திவை நீ
காரப்பா கால் பலமே கற்பூரம் வாங்கி
கடிதாக வாயில் போட்டு மென்று துப்பி
சாரப்பா அவை தனிலே பந்தத்தை சுற்றி
சரியாக கொளுத்தி அவையோருக்கு காட்டி
நேரப்பா வாயிலிட்டு எக்ஷினியை என்று
நிசிவாக நில்லேடி என் பாக்கள் என்னே"
கால் பலம் கற்பூரம் வாங்கி வாயில் போட்டு நன்றாக மென்று உமிழ்ந்து விட்டு மக்கள் கூடிய அவையில் போய் நின்று, பந்தத்தைக் கொளுத்தி அவையோருக்குக் காட்டி "எக்ஷினி நீ என்பக்கம் வந்து நில்லடி"என்று சொல்லி பந்தத்தை வாய்க்குள் வைத்து மூடி திறந்து காட்டலாம் ஒன்றும் ஆகாது.
அடுத்த பதிவில் கையால் தென்னை மரத்தை குத்தினால் தேங்காய் விழும் ஜாலம் பற்றி பார்க்கலாம்...
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



0 comments:
Post a Comment