திருமூலர் சொல்லும் யோக சித்தி...

Author: தோழி / Labels: , ,



திருமூலர் தனது திருமந்திரத்தில் மூன்றாம் தந்திரத்தில் அட்டாங்க யோகத்தில் யோகப் பயிற்சிகளை மிகவும் எளிமையாக விளக்குகிறார்.


"பன்னிரண்டானைக்குப் பகல் இரவுள்ளது
பன்னிரண்டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண்டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண்டானைக்குப் பகல் இரவில்லையே!"

- திருமந்திரம் -

என்ற பாடலில்,

பன்னிரண்டு விரற்கடை செயற்படும் பிராணனாகிய சூரியனுக்குப் பகல், இரவு என்ற காலங்கள் இருக்கின்றன, மூக்கில் இருந்து தொண்டை வழியாக பிராணவாயு கீழ் நோக்கி இறங்குவதை சிரசில் உள்ள ஆன்மா (உயிர்) அறிவதில்லை.

ஆனால் பிராணவாயு மேல் நோக்கி செலுத்தப்பட்டால் அதை ஆன்மா அறியும், அப்படி ஆன்மா வாகிய சூரியன் அறிந்ததும் அதற்க்கு இரவு பகல் இல்லாத பிரகாசநிலை கிடைக்கும்.

பன்னிரண்டானை :- பன்னிரண்டு அங்குலம் ஓடும் பிராண வாயு.

பாகன் அறிகிலன் :- பிராணன் சுவாசப்பையை நோக்கிக் கீழ்ச் செல்லும் போது ஆன்மாவால் அதை உணரமுடியாது.

பாகன் அறிந்தபின் :-
பிராணன் சிரசை நோக்கி செல்லும் போது ஆன்மா அதை அறிந்து கொள்ளும்.

பகல் இரவில்லையே :- இப்படி பிராணனை சிரசிடம் போக செய்தவருக்கு பிறப்பு இறப்பு இல்லை.

இவ்வாறு பிராணனை சிரசு நோக்கி செல்லவைப்பதே யோக கற்பம் என்றும் யோக காய சித்தி என்றும் சொல்லப் படுகிறது.

இவ்வாறு பிராணனை சிரசு நோக்கி செல்ல வைப்பதால் கிடைக்கும் சித்தியே யோக சித்தியாகும்.

ஆகவே, யோகப் பயிற்சியின் மூலம் யோக சித்தி பெறுபவர்கள் யோகப் பயிற்சி கஷ்டம் என்று விட்டு விலகாமல், பிறவாமை வேண்டும், மரணத்தை வெல்ல வேண்டும் என்ற வைராக்கியத்தைக் கடைப் பிடித்தால் இப்பயிற்சி எளிதாக சித்தியாகும் என்பதில் ஐயமில்லை.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

7 comments:

rajsteadfast said...

Migavum aacharyamaaga ullathu...

nalla thagaval...

Nanri

தோழி said...

மிக்க நன்றி... rajsteadfast

Balu said...

இடத்ததுன்கண் சந்திரன், வலத்ததுன்கண் சூரியன்
இடக்கைசங்கு சக்கரம், வலக்கைசூலம் மான்மழு;
எடுத்தபாதம் நீள்முடி, எண்திசைக்கும் அப்புறம்,
உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே? -சிவவாக்கியம்

தோழி said...

மிக்க நன்றி...Balu

praveen said...

மிகவும் அருமை .

nanavalli said...

arumaiyana unmaiyana kuripugal nantri

THIRUMAL said...

உடல் உயரமாக வளர சித்தர்கள் மருந்து ஏதும் சொல்ல வில்லையா ? எது மருந்து இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ் . நன்றி

Post a Comment