"மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
நாலு நாடி உம்முள்ளே நாடியே இருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரம்மம் ஆகலாம்
ஆலமுண்ட கண்டராணை யம்மையாணை யுண்மையே".
- சிவவாக்கியார் -
இந்தப் பாடலில் குண்டலினி யோகத்தைப் பற்றி சொல்கிறார் சிவவாக்கியார். நம்முள் அடங்கியுள்ள மூலாதார சக்தி குண்டலினி சக்தியாகும். அந்த குண்டலினி யோகத்தை பயின்று படிப்படியாக அதை மேலே உயர்த்தி புருவமத்திக்கு யாரால் கொண்டு செல்ல முடியுமோ, அவரால் இளமையோடு நீண்டகாலம் வாழ்வதோடு , பரப்பிரம்மமாகாவும் இருக்கலாம் என்று ("ஆலமுண்ட கண்டராணை யம்மையாணை யுண்மையே") சிவன்பெருமான மீதும் பார்வதி தேவியார் மீதும் ஆணையிட்டுச உறுதியாகச் சொல்கிறார்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



7 comments:
Excellent. If you can write more verses on Kundalini, it will be great! Thank you much!
முயற்சிக்கிறேன்....நன்றி..
I heard that kundalini sakthi is not near genitals. Please verify with some guru.
அறிய வேண்டிய அரிய தத்துவம். ஆனால் இந்த முறையானது மிகவும் கடுமையானது என சொல்லியே பயமுறுத்தி விட்டார்கள்.
super
NICE JOB
nice job
Post a Comment