"பாரே நீ தை மாசி மீன மூன்றில்
பலிக்குமே சந்திரனார் விந்தினாலே
சீரேகேள் மண்தனிலே ஜலம் பாய்ந்து
சிக்கியதில் ரேசித்து ஜெனிக்கும் காரம்
வாரே தான் ரவி படவும் பூக்கும் பாரு
வானவர்கள் மெச்சுகின்ற வழலை மைந்தா"
"மீறாமல் மறியலிட்டு மூன்றாநாளும்
விடிந்ததொரு நாலாம் நாள் ரவிக்கு முன்னே
ரவிபடாததட்க்கு முன்னே வாங்கி
நாதாந்த மூர்த்தியைப் பணிந்தெடுத்து
தவியதே இதற்க்கு நிகர் ஒன்றுமில்லை
புவிதன்னில் சொல்லிவிட்டேன் பூநீர்
புத்தியினால் செய்பாகம் அறிந்து கொண்டு"
பூநீரானது தை , மாசி , பங்குனி போன்ற மாதங்களில் இரவு வேளைகளில் பளிச் என்ற தோற்றத்துடன் பூமியின் மேற்பரப்பில் உப்பாய் முளைத்திருக்குமாம்.
பகல் வேளைகளில் இது மண்ணுக்குள் சென்று விடுமாம்.
அந்த பூநீர் முளைத்ததிலிருந்து காத்திருந்து மூன்றாம் நாளிலிருந்து சேகரிக்க தொடங்க வேண்டுமாம். ஒரே நாளில் தேவையான அளவு சேகரிக்கக் கிடைக்காதாம். தினசரி இரவு வேளைகளில் கொஞ்சம் கொஞ்சமாக சேகரிக்க வேண்டுமாம்.
இந்த பூநீர் ரெண்டு வகைப் படும் ஒன்று காரம் உள்ளது, மற்றது காரம் அற்றது, இரவில் எடுக்கும் பூநீர் காரம் அற்றது என்றும் அதிகாலையில் எடுக்கும் நீர் காரமுள்ளது என்றும் காரம் அற்றதே பூநீர் என்றும், காரம் உள்ளது பூநீறு என்றும் சொல்கிறார்.
ஆக, பூநீரும் பூநீறும் ஒரே தாவரத்திலிருந்து பெற்றாலும் குணத்தால் வேறு படுகின்றது. ஆகவே, பூநீரும் பூநீறும் வேறு வேறானவையே.
Post a Comment



3 comments:
ஒரு எழுத்தில் எத்தனை வேறுபாடு? அருமை.
could it be mushrooms?
hello sister
you did not mention what types of land.
hi sister please try to come madurai siddha vaithiyargal sangam.
Post a Comment