"வெள்ளைக் காக்குறட்டான் வேர் ரகம்சக் கரைகாக்கு
றட்டான் கால்விரா நடை யுரைச்சி நெய்வார்த்து
விளக்கிலே சுண்டக் காச்சி அதிலே மருந்தை
உரைசிக் கொடப்பா புளிப்பு கைப்பு ஆகாது கேள்".
- அகத்தியர் நயன விதி -
வெள்ளைக் காக்குறட்டான் வேர் - 10 கிராம்
சீரகம் - 5 கிராம்
சர்க்கரை - 10 கிராம்
வெள்ளைக் காக்குறட்டான் வேர், சீரகம், சர்க்கரை, ஆகியவற்றை மேற்சொல்லப்பட்ட அளவுகளில் வாங்கி வேரையும் சீரகத்தையும் நெய்யில் வறுத்து, இடித்து தூளாக்கி சக்கரையை அத்துடன் கலந்து ஆறு பங்காகப் பிரித்து தினம் காலையும் மாலையும் என மூன்று நாட்கள் உண்டுவந்தால் இருமல் குணமாகிவிடும். இந்த மருந்து உண்ணும் பொது புளிப்பு, கசப்பு கொண்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
அடுத்து பாம்பு கடித்து உயிர் போன உடலுக்கு உயிர் கொடுக்கும் மருந்து பற்றி பார்ப்போம்...>
Post a Comment



6 comments:
அருமையான தகவல்கள். புதிய வலை அமைப்பு அருமை. தங்களின் பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்.
நன்றி
மிக்க நன்றி..
Excellent Blog. Thank you for so much information on Siddhars. I am mainly interested in their ways of Self realization/Knowledge and Liberation. Will keep following your blog.
மிக்க நன்றி..maduraiveeran
searching some other topic got this mysticism subject matter interlinked with the akashic vibration and universal thoughts in three forms of language,vision,litho all from light rays and laughter rays of siddhars.
gmvishnusanth03@gmail.com
எனக்கு நீண்ட நாட்களாக ஆஸ்துமா ( மூச்சு தினறல் ) உள்ளது , இதற்கான வைத்தியம் சித்தர்கள் இராச்யத்தில் உள்ளதா? வைத்தியம் உள்ளது யெனில் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்குத் தெரியப்படுத்தவும் apniceguy@yahoo.com
Post a Comment