"வடிவான கிளி மூக்கு மரமதொன்று
மகாஉயர்த்தியாயிருக்கும் மகத்தானமரம்
இடிவான யிலையதுவும் அரிசிபோலிருக்கும்
ஏத்தமாம் பூப்பூத்த மற்றநாள் பழமாம்
படிவான பழத்தையுண்டால் சாமத்தில்பற்பமாகும்"
- போகர் -
கிளி மூக்கு என்று ஒரு வடிவான மரம் உள்ளது, அது மிகவும் உயரமாக இருக்கும், அந்த மரத்தின் இலை அரிசி போல இருக்கும், அந்த மரமானது பூப்பூத்த அடுத்த நாளே பழமாகி பழுத்து விடும். அந்தப் பழத்தை உண்ட அன்று இரவே காய கற்பம் ஆகும் என்கிறார் போகர்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



9 comments:
அப்படியா..!நல்லத்தகவல் . வாழ்த்துக்கள்
@Madurai Saravanan
மிக்க நன்றி...
இந்த மரத்தை கண்டு பிடிச்சு....அது பூ பூக்கற வரை காத்திருந்து, அது பழமாகற வரை முழிச்சிருந்து பறிச்சு சாப்டு....இது ஆவறதில்லை....
இதுக்கு பேசாம பத்தியமே இருந்துரலாம் :((
@டவுசர் பாண்டி...
அது உங்கள் விருப்பம்.. உங்களுக்கு எது இலகுவானதோ அதை செய்ங்க.. நன்றி.
"படிவான பழத்தையுண்டால் சாமத்தில்பற்பமாகும்"
///// சாமத்தில்பற்பமாகும்///////
இங்கு "பற்பமாகும்" என்று தான்
குறிப்பிடப்பட்டுள்ளது
இதற்கு முதல் பாடலிலும் அடுத்த பாடலிலும் அதைப்பற்றி விளக்கமாக சொல்லப் பட்டுள்ளது தேவையான பகுதிகளை மட்டுமே பதிகிறேன் நன்றி
இந்த பழம் தான் அதியமான் அவ்வைக்கு தந்த கனியாக இருக்குமோ!
இம் மரத்திற்கு ஏதேனும் பெயர் உள்ளதா ? எவிடம் இருக்கும் என்பதை பற்றி உங்கள் கருத்து ?
very very thanks.... it,s all very interesting and useful for every one... i would like to learn varmam.. what can i do....
Post a Comment