இறைவனை வணங்குவதால் மட்டும் பிறப்பைஅறுத்து விட முடியுமா? இறைவனைத் தேடி காடுகளில் அலைகிறவர்கள் இருக்கிறார்கள். உண்ணா நோன்பிருந்து, காற்றைமட்டுமே புசித்து வாழ்கிறவர்கள் இருக்கிறார்கள். கோவண ஆண்டியாய் ஊர்சுற்றித் திரிபவர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட காரியங்களால் இறைவனை உணர்ந்துவிட முடியுமா? முடியாது என்கிறார் பட்டினத்தார். மெய்ஞானத்தை உணர்ந்தால் மட்டுமே பரம்பொருளோடு ஐக்கியமடைதல் சாத்தியம் என்கிறார் பட்டினத்தார்.
"காடேதிரிந்தென்ன? காற்றே புசித்தென்ன? கந்தை சுற்றி
ஓடே எடுத்தென்ன? உள்ளன்பில்லாதவர் ஓங்கு விண்ணோர்
நாடே யிடைமருதீசர்க்கு மெய்யன்பர் நாரியர் பால்
வீடே யிருப்பினும் மெய்ஞான வீட்டின்பம் மேவுவரே."
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



2 comments:
தோழி, மெய்ஞானம் பற்றி சிறிது விளக்கம் கூறவும்.
@தோழி
evvaru mana orumai pattukkul eraivanaeya ninaippadhu enbadhai thozhi sonnal nanraga irukkum
Post a Comment