மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்...
"கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை
சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே."
இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார்.
பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான வார்த்தைகள், ஓசையோடு அமைந்த நடை இவை அனைத்தும் பட்டினத்தார் பாடல்களின் தனிச் சிறப்பாகும்.
அவர் சொல்லியுள்ள அருமையான சித்தாந்தக் கருத்துக்கள் ஊன்றிப் படிப்பவர்களுக்கு சிறந்த ஆன்மீக வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
Post a Comment



6 comments:
நல்ல செய்தி. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
நல்ல கருத்துக்கள். நன்றி. பகிர்ந்தமைக்கு.
தொடருங்கள்,உங்கள் பணிசிறக்கட்டும்!
அருமை...இதையே தொடருங்கள்...புதிய பாதை..வாழ்த்துக்கள்
naan pala naal thedikkondiruntha siththarkal patriya pathivukalai pdiththathil makiltchi.unagal pathivukal thodara vaalththukkal.siththar paadalkal muluvdhum pathivetrungal. nandrikal kodi
:)
Post a Comment